ரத யாத்திரை தடை..; மன்னிப்பு கேட்க முடியாது என திவ்யா சத்யராஜ் அதிரடி

ரத யாத்திரை தடை..; மன்னிப்பு கேட்க முடியாது என திவ்யா சத்யராஜ் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

divya sathyarajநடிகர் சத்யராஜ்‌ மகள்‌ திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்‌ என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இவர்‌ கொரோனா ஊரடங்கில் தமிழ்‌ மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க ”மகிழ்மதி” என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்‌.

பாஜக சார்பில் திட்டமிடப்பட்ட ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என தெரிவித்தார்.

இந்த தகவலை நாம் நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் ரத யாத்திரை தடை கோரிக்கைக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார்‌ திவ்யா.

இதுபற்றி அவர் கூறியதாவது: கொரோனா நேரத்தில்‌ தமிழ்நாட்டில்‌ ரத யாத்திரை நடந்தால்‌ மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள்‌ இருக்கிறது.

கொரோன நேரத்தில்‌ ரத யாத்திரையை அனுமதிப்பது நியாயம்‌ கிடையாது. தமிழ் மக்களின்‌ உடல்‌ நலத்தின்‌ மீதும்‌ உயிர்‌ மீதும்‌ அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும்‌, தமிழ்‌ மகளாகவும்‌ ரத யாத்திரையை எதிர்க்கிறேன்‌.

மதத்தை வளர்ப்பதில்‌ இருக்கும்‌ அக்கறை மக்களின்‌ உயிர்‌ மீதும்‌ உடல்‌ நலத்தின்‌ மீதும்‌ இல்லாதது வருத்தமாக இருக்கிறது. ரத யாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்பு கேட்கும்‌ எண்ணம்‌ இல்லை.

இவ்வாறு திவ்யா சத்யராஜ் கூறி உள்ளார்.

Divya sathyaraj says no apology can be made for opposing the chariot pilgrimage

ஹரிஷ் கல்யாண் & பிரியா பவானி சங்கர் செம லவ்..; ரசிகர்கள் கன்ப்யூஸ்..

ஹரிஷ் கல்யாண் & பிரியா பவானி சங்கர் செம லவ்..; ரசிகர்கள் கன்ப்யூஸ்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

harish kalyan priya bhavani shankar“பியார் பிரேமா காதல்”, “தாராள பிரபு” உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹரிஷ் கல்யாண்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார்.

இந்த நிலையில் இன்று சற்றுமுன் சமூக வலைத்தளத்தில் நடிகை பிரியா பவானி சங்கரை காதலிப்பது போல் ஹரீஷ் கல்யாண் டுவிட் போட்டுள்ளார்.

இதனைப் பார்த்த பிரியா பவானி சங்கர்…, ‘லாக்டவுன் முடியுற வரைக்கும் உன்னால வெயிட் பண்ண முடியலல… நான்தான் முதலில் சொல்ல நினைத்தேன் என ட்வீட் பதிவிட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்..?

இதற்கு ஹரிஷ் கல்யாண்..

காத்திருக்க முடியாது! காத்திருக்க வேண்டாம்! நாளை மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக சொல்வோம் என பதிவு செய்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் தான் குழப்பம் அடைந்துள்ளனர்.

இது ஒரு ரீமேக் படம் தொடர்பான அறிவிப்புதான். எனவே நாமும் காத்திருப்போம்.

Actor Harish Kalyan reveals his new film update tomorrow

#Breaking அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..; பள்ளிகள் & தியேட்டர்கள் திறக்க தடை

#Breaking அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..; பள்ளிகள் & தியேட்டர்கள் திறக்க தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Cmகொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் இறுதிமுதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதன்பின்னர் மே, ஜூன், ஜூலை மாதங்களில் சில வணிக நிறுவனத்திற்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டது.

ஆனால் ஒரு சில வணிகங்களுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீடிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மற்ற விவரங்கள் இதோ…

பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு

திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது

கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும்

அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு.

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கு தடை தொடரும்

உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி

உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி.

மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு நீட்டிப்பு.

இன்னும் 10 மாசமானாலும் கொரோனா தடுப்பூசிக்கு வாய்ப்பே இல்லையாம்; ஓ.. அவிங்களே சொல்லிட்டாங்களா..?

பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட தடை தொடரும்

வாரச்சந்தைகள் மட்டும் உரிய வழிகாட்டு நெறிகளை பின்பற்றி இயங்க அனுமதி

அரசு, தனியார் நிறுவனங்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுரை.

சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி

TN extends lockdown till october 31st

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ‘அண்ணாத்த’..; சூட்டிங்கில் பங்கேற்கும் ரஜினி..; ரசிகர்கள் கவலை..

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ‘அண்ணாத்த’..; சூட்டிங்கில் பங்கேற்கும் ரஜினி..; ரசிகர்கள் கவலை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini in annathaரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘அண்ணாத்த’ .

இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

வெற்றி ஒளிப்பதிவு செய்ய இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் (தன் மறைவுக்கு முன்னர்) ரஜினியின் அறிமுகப் பாடலை பாடியிருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதங்களில் இப்பட சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

‘அண்ணாத்த’ ரஜினிகாந்தை மிரட்ட வரும் விஜய் பட வில்லன்

மார்ச் இறுதி முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக சூட்டிங் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் மீண்டும் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே மற்ற நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அங்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பட கலைஞர்களுக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.

கொரோனா பிரச்னை முடிந்த இயல்புநிலை திரும்பிய பின்னரே ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்பட்டது.

இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் அக்டோபர் 8-ஆம் தேதி சாலை மார்க்கமாக காரில் ஹைதராபாத் செல்ல இருக்கிறார் ரஜினிகாந்த் என கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பிரச்னை முற்றிலும் முடிவு பெறாத நிலையில் ரஜினிகாந்த் சூட்டிங் செல்வது சரியாகுமா.?

தலைவரின் படத்தை விட எங்களுக்கு தலைவரின் உடல்நிலை ஆலோக்கியமே என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

படக்குழுவினருக்கும் இது தொடர்பான ஆலோசனைகளை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வழங்கி வருகின்றனர்.

Fans reaction on Rajinikanth resumes Annaatthe shooting

ரஜினியுடன் நடித்த அங்கவை.. சங்கவை.;. அடடா.. ரெண்டு பேரும் இம்புட்டு சிகப்பழகா..?!

ரஜினியுடன் நடித்த அங்கவை.. சங்கவை.;. அடடா.. ரெண்டு பேரும் இம்புட்டு சிகப்பழகா..?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் & டைரக்டர் ஷங்கர் இருவரும் முதன்முதலில் இணைந்த படம் ‘சிவாஜி’.

2007ம் ஆண்டு வெளியான இப்படம் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை அடித்து நொறுக்கியது.

இதுநாள் வரை சில இடங்களில் இப்பட சாதனையை எவராலும் முறியடிக்கப்படவில்லை.

6 படங்களில் 100 கோடியை தாண்டிய விஜய்.; ரஜினியை முந்தினாரா?

இந்த படத்தில் சீரியஸான கருப்பு பணத்தை பற்றி மெசேஜ் இருந்தாலும் காதல், காமெடி காட்சிகளும் நிறையவே இருந்தன.

ஒரு காட்சியில் பயங்கர கருப்பு நிறத்தில் அங்கவை, சங்கவை என்ற கேரக்டரில் இரு பெண்கள் சாலமன் பாப்பையா மகளாக நடித்திருந்தனர்.

ஆனால் அவர்கள் நிஜத்தில் சிகப்பா அழகா இருக்காங்க… இதோ அவர்களின் புகைப்படங்கள்…

angavai sangavai real pic

Angavai Sangavai real pic goes viral

ஆஸ்பிட்டல் பில் 10 கோடி வந்தா உங்களுக்கென்ன..? போன் செஞ்சு புரளி பத்தி கேட்காதீங்க.!?. – எஸ்பி சரண்

ஆஸ்பிட்டல் பில் 10 கோடி வந்தா உங்களுக்கென்ன..? போன் செஞ்சு புரளி பத்தி கேட்காதீங்க.!?. – எஸ்பி சரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sp charanபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சைக்கு MGM மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன.

எனவே இதற்கு விளக்கமளிக்க மருத்துவமனை நிர்வாகிகள் மருத்துவர்கள் & எஸ்பிபி மகன் சரண் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது எஸ்பிபி சிகிச்சைக்கான பில் கட்டணம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு எஸ்பி சரண் பதிலளித்தாவது…

” MGM மருத்துவமனைக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நல்ல புரிதல் உள்ளது.

சிகிச்சைக் கட்டணத்தைப் பற்றியே ஏன் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? 10 கோடி ரூபாயாக இருந்தால் கூட நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ரூ. 50 லட்சமாக இருந்தால் என்ன செய்வீர்கள்.?

நாங்கள் என் அப்பாவை இழந்திருக்கிறோம்.

அதிலிருந்து மீள எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.

தொடர்ந்து எழும் வதந்திகளை குறித்து தொடர்பு கொண்டு விசாரிக்காதீர்கள்.

நான் சினிமாக்காரன்.. சினிமா எடுக்க வருவேன். உங்களை சந்திப்பேன்” என பேசினார்.

SP Charan refutes rumours about father’s unpaid hospital bills

More Articles
Follows