கொரோனாவுக்கு சிவகார்த்திகேயன் பன்ச் டயலாக்கை சொன்ன கலெக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தொடர்பான மீம்ஸ், வீடியோக்கள் தினம் தினம் இணையத்தில் உலா வருகின்றன.

சில மீம்ஸ்கள் உண்மைக்கு புறம்பாக வருகின்றன. சிலர் கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

எல்லாவற்றிற்கும் சினிமா சம்பந்தமான காட்சிகளும் டயலாக்குகளுமே பொருந்தி வருகின்றன.

பெரும்பாலானா வீடியோ மற்றும் படங்களில் வடிவேலுவே வருகிறார்.

இந்த நிலையில் சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயன் சொன்ன டயலாக்கை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய் கார்த்திகேயன் பயன்படுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு சிவகார்த்திகேயனும் நன்றி தெரிவித்துள்ளார். அந்த டயலாக்கை எழுதியவர் இயக்குனர் பொன்ராம் எனவும் குறிப்பிட்டுள்ளார்

அந்த டயலாக் தான் இது…

Thank you brother @Siva_Kartikeyan
“நீ யாரா வேணும்னா இரு
எவனா வேணும்னா இரு ; ஆனா
என்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு “ #SocialDistancing

District Collector said Sivakarthikeyan punch dialogue for Corono

https://twitter.com/Vijaykarthikeyn/status/1245657044067049473

ஒரு அறிக்கை கூட இல்லையே.. தல-தளபதியை நம்பி நொந்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒட்டுமொத்த மனித சமுதாயத்தை நிலைக்குலைய வைத்துள்ளது கொரோனா வைரஸ்.

உலகெங்கிலும் பல மனிதர்கள் இதன் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் நாளுக்கு நாள் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்தியா முழுவதும் (கடந்த 10 நாட்களாக) ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோதும் நிறைய பேர் அதனை அலட்சியப்படுத்தி வெளியே சுற்றி வருகின்றனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த கோடிக்கணக்கான தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் செலவழித்து வருகின்றன.

நிவாரண நிதிக்கு தாராளமாக பணத்தை வழங்க மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தெலுங்கு மற்றும் வட இந்திய நடிகர்கள் கோடிகளை கொட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் நடிகர்கள் தங்கள் துறை சார்ந்த பெப்சிக்கு வழங்கி வருகின்றனர்.

முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை சிவகார்த்திகேயன் மட்டுமே 25 லட்சம் கொடுத்துள்ளார்.

ரஜினி, கமல், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இதுவரை இவர்கள் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கவில்லை.

ஆனால் தமிழத்தின் தல தளபதி என்றழைக்கப்படும் அஜித் மற்றும் விஜய் இதுவரை 1 ரூபாய் கூட நிதி அளிக்கவில்லை. சரி அவர்களின் விருப்பமாக கூட இருக்கலாம்.

ஆனால் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என ஒரு அறிக்கை கூடவா வெளியிட கூடாது? என சம்பந்தபட்ட நடிகர்களின் ரசிகர்களே நொந்து போய் உள்ளனர்.

ம்…ம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..

Fans disappointment with Vijay and Ajith in Corona issue

சூர்யா உடன் இணையும் இடுப்பழகி ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குரு சோமசுந்தரம் நடிப்பில் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவான படம் ‘ஜோக்கர்’.

ரம்யா பாண்டியன் நாயகியாக நடித்த இந்த படம் தேசிய விருதை வென்றது.

இதன் பின்னர் சமுத்திரக்கனி நடித்த ‘ஆண் தேவதை’ படத்தில் நடித்தார்.

ரம்யா பாண்டியன் எடுக்கும் போட்டோ ஷூட் ஸ்டில்கள் அடிக்கடி வைரலாகும். அதுவும் இடுப்பழகி போட்டோ இணையத்தை சூடேற்றியது.

தற்போது டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார் ரம்யா.

இந்த நிலையில் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்திலும், சி.வி.குமார் தயாரிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Ramya Pandiyan joins hand with Actor Suriya

நாக்கை துருத்தி கண்ணடிக்கும் விஜய் மகள் திவ்யா சாஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்க்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இதில் வேட்டைக்காரன் படத்தில் விஜய்யின் மகன் சஞ்சய் நடிக்க, தெறி படத்தில் அவரது மகள் சாஷா நடித்திருந்தார்.

பெரும்பாலும் இவர்களின் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகாது.

ஆனால் வெளியாகும் போது விஜய் ரசிகர்கள் இந்த படங்கள் பகிர்ந்து ட்ரெண்ட்டில் கொண்டு வருவர்.

இந்த நிலையில் விஜய்யின் மகள் சாஷா தனது பள்ளி தோழிகளுடன் இருக்கும் படம் வெளியாகியுள்ளது.

அந்த படத்தில் நாக்கை துருத்தி கண்ணடிப்பது போல போஸ் கொடுத்துள்ளார்.

சென்னையில் உள்ள சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார் சாஷா.

Vijay daugher Divya Sashas photo goes viral

தங்கள் குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆல்யா – சஞ்சீவ் ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனியார் டிவி ஒளிப்பரப்பான ‘ராஜா ராணி’ தொடர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான ஜோடிகள் சஞ்சீவ் கார்த்திக் – ஆல்யா மானஸா.

இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

வழக்கம்போல இவர்கள் மௌனம் காக்க, திடீரென திருமணமும் நடந்தேறியது.

தற்போது இத்தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தை படத்தை வெளியிட்டுள்ளார் ஆல்யா.

குழந்தைக்கு அய்லா செய்யத் என்று பெயரிட்டுள்ளனர் இந்த காதல் ஜோட

Alya Manasa and Sanjeev Karthicks first Child name

மங்காத்தா லெவலில் வலிமை.; டைரக்டர் வினோத் மறைமுக தகவல்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேர்கொண்ட பார்வை படத்தை முடித்துவிட்டு அஜித் நடிக்கும் வலிமை படத்தை இயக்கி வருகிறார் வினோத்.

இதன் சூட்டிங் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளது.

வலிமை படம் எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.

ஹீரோயின் பற்றிய தகவலை கூட படக்குழுவினர் அறிவிக்கவில்லை.

வலிமை படம் குறித்து புதிய தகவலை தினம் தினம் அஜித் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வலிமை படம் மங்காத்தா லெவலில் இருக்கும் என தெரியவந்துள்ளது.

மங்காத்தா படத்திலும் வலிமை படத்தில் போலீஸ் கேரக்டரில் அஜித் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Thala Ajiths Valimai will be equal to Mankatha

More Articles
Follows