தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதன் விவரம் வருமாறு:-
தமிழக அரசின் மாநில வரி 8%-ஐ வரும் பிப்ரவரி மாத்திற்குள் திரும்ப பெற வேண்டும், இல்லை என்றால் மார்ச் 1 ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும்.
பட தயாரிப்பாளர்கள் படம் வெளியான 100 நாட்களுக்குள் டிஜிட்டல் தளத்தில் (அமெசான், நெட் ப்ளிக்ஸ்) படத்தை வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால் அந்த தயாரிப்பாளர்களின் படத்தை திரையரங்குகளில் இனி வெளியிட மாட்டோம்.
உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் தோல்வியை அந்தந்த நடிகர்களே ஏற்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும்.
தியேட்டர் அதிபர்களின் இந்த திடீர் தீர்மானம், திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர்கள் தரப்பில், ‘சம்பளம் பெற்று நடிப்பவர்களிடம், இழப்பீடு கேட்பது சரியல்ல’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர், திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது.. ”மாவட்ட ஆட்சியருக்கே, 1 லட்சம் தான் சம்பளம். நடிகர்களோ, கோடிகளில் சம்பளம் பெறுகின்றனர். எங்கள் தீர்மானத்தை மதிக்காத நடிகர்கள் படங்களை திரையிட மாட்டோம்,” என கூறியுள்ளார்.
Distributor Tirupur Subramaniam talk about Top hero movie loss