எங்களை மதிக்காத நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்யமாட்டோம்.. -திருப்பூர் சுப்ரமணியம்

எங்களை மதிக்காத நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்யமாட்டோம்.. -திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Distributor Tirupur Subramaniam talk about Top hero movie lossகோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:-

தமிழக அரசின் மாநில வரி 8%-ஐ வரும் பிப்ரவரி மாத்திற்குள் திரும்ப பெற வேண்டும், இல்லை என்றால் மார்ச் 1 ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும்.

பட தயாரிப்பாளர்கள் படம் வெளியான 100 நாட்களுக்குள் டிஜிட்டல் தளத்தில் (அமெசான், நெட் ப்ளிக்ஸ்) படத்தை வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால் அந்த தயாரிப்பாளர்களின் படத்தை திரையரங்குகளில் இனி வெளியிட மாட்டோம்.

உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் தோல்வியை அந்தந்த நடிகர்களே ஏற்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும்.

தியேட்டர் அதிபர்களின் இந்த திடீர் தீர்மானம், திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள் தரப்பில், ‘சம்பளம் பெற்று நடிப்பவர்களிடம், இழப்பீடு கேட்பது சரியல்ல’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர், திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது.. ”மாவட்ட ஆட்சியருக்கே, 1 லட்சம் தான் சம்பளம். நடிகர்களோ, கோடிகளில் சம்பளம் பெறுகின்றனர். எங்கள் தீர்மானத்தை மதிக்காத நடிகர்கள் படங்களை திரையிட மாட்டோம்,” என கூறியுள்ளார்.

Distributor Tirupur Subramaniam talk about Top hero movie loss

இளையராஜாவுக்கு கேரள அரசின் ஹரிவராசனம் விருது

இளையராஜாவுக்கு கேரள அரசின் ஹரிவராசனம் விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayarajaஇந்த 40 ஆண்டுகளில் இளையராஜா பாடல்கள் இல்லாமல் தமிழர்கள் ஒரு நாளையும் கடந்திருக்க முடியாது.

அன்னக்கிளியில் தொடங்கி இதுவரை 1000 படங்களுக்கு இசையமைத்துவிட்டார்.

தற்போதும் சைக்கோ, தமிழரசன், துப்பறிவாளன் 2, கிளாப், மாமனிதன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி வருகிறார்

இந்த நிலையில், இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கவுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

இந்த விருதை வருகிற 2020 ஜனவரி மாதம் 15ம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் மீண்டும் போலீஸாக அதர்வா

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் மீண்டும் போலீஸாக அதர்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atharvaaபடத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இவருடைய தயாரிப்பில் வெளியான

மைக்கேல் ராயப்பன் தயாரித்த ‘ஈட்டி’ படத்தில் அதர்வா நாயகனாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் அதே தயாரிப்பாளருடன் இணைகிறார்.

இந்த படத்தில் அதர்வா போலீசாக நடிக்கிறார். ஏற்கனவே ‘100’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

ரவீந்த்ர மாதவா என்பவர் டைரக்டு செய்கிறார். இவர் டைரக்டர்கள் சுசீந்திரன், பூபதி பாண்டியன் ஆகியோருடன் உதவி டைரக்டராக இருந்தவராம்.

அனுஷ்கா நடித்த ‘பாகமதி’ படத்துக்கு வசனம் எழுதியும் இருக்கிறார்.

சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் நாயகி இன்னும் தேர்வாகவில்லை.

பாலியல் தொல்லைக்கும் வைரமுத்துக்கு டாக்டர் பட்டம் தரலாம்… சின்மயி எதிர்ப்பு

பாலியல் தொல்லைக்கும் வைரமுத்துக்கு டாக்டர் பட்டம் தரலாம்… சின்மயி எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vairamuthu chinmayiதனியார் பல்கலைக்கழகம் SRM சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு நாளை டிசம்பர் 28 -ந் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

இந்த டாக்டர் பட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்க உள்ளார்.

கவிஞர் வைரமுத்து மீது கடந்த ஆண்டே நிறைய பாலியல் புகார் அளித்திருந்தார் பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி.

இந்த நிலையில் டாக்டர் பட்டம் வழங்கவுள்ள நிகழ்ச்சி அழைப்பிதழை தனது டுவிட்டர் பகிர்ந்து வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அந்த பதிவில் கூறியிருப்பதாவது:- “9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் கொடுக்க போகிறாராம்.

துன்புறுத்தியவர்களுக்கு எந்த சேதமும் இல்லை. ஆனால் வெளியில் சொன்ன எனக்கு வேலை செய்ய தடை வழங்கப்பட்டுள்ளது.

கவுரவ டாக்டர் பட்டம் என்பது வைரமுத்துவின் மொழி ஆளுமைத் திறனுக்காக வழங்கப்படுகிறது.

இத்துடன் பாலியல் துன்புறுத்தலுக்காகவும் வைரமுத்துவுக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.

உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் சிறந்த ரோல் மாடலை உதாரணமாக காட்டியிருக்கீங்க. வெல்டன் SRM பல்கலைக்கழகம்” என கடுமையாக பதிவிட்டுள்ளார்.

“வைரமுத்து இந்த ஒரு வருடத்தில் அரசியல் மற்றும் கலைதுறை பெரியவர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் அவர் மீதான புகார் குறித்து எந்த விசாரணையும் இல்லை. நல்ல நாடு.. நல்ல மக்கள்” என்றும் கூறி உள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா தத்தாவிற்கு BIG LOSS தந்த BIGG BOSS

நடிகை ஐஸ்வர்யா தத்தாவிற்கு BIG LOSS தந்த BIGG BOSS

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg Boss fame Aishwarya Duttas PUBG movie updatesபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டால் புகழின் உச்சிக்கே போய்விடலாம் என அதில் கலந்துக் கொண்ட பலரும் நினைத்தனர்.

அதாவது, பலருக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்தனர்.

இதுவரை தமிழகத்தில் பிக்பாஸ் 3 சீசன்கள் நடைபெற்றுள்ளது.

ஆனால் இதில் கலந்துக் கொண்ட எவருக்கும் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

யாருக்குமே கிடைக்காத புகழ் ஓவியாவுக்கு கிடைத்தது. ஆனால் அவருக்கே சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவிலை.

இந்த நிலையில், நடந்து முடிந்த 3 ஆவது சீசனில், கலந்து கொண்ட போட்டியாளர்களில், சாக்‌ஷி அகர்வால், ரேஷ்மா, அபிராமி, மீரா மிதுன் ஆகியோர் மாடல் நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் ஒரு சில படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன.

ஆரவ் நடித்த மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படமும் தோல்வியை தழுவியது.

சினேகன், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துவிட்டார்.

2ஆவது சீசனில் கலந்து கொண்ட 17 போட்டியாளர்களில் யாஷிகா ஆனந்த், மகத், ரித்விகா ஆகியோர் மட்டுமே ஓரிரு படங்களில் நடித்து வருகின்றனர்.

இதில் நடிகை ஐஸ்வர்யா தத்தாவுக்கு 2 ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகவில்லை.

தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் PUBG என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

பிக்பாஸ் தந்த பிக் லாஸ் இல் இருந்து மீண்டு வருவாரா ஐஸ்வர்யா தத்தா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bigg Boss fame Aishwarya Duttas PUBG movie updates

விதார்த் நடிப்பில் மாயங்களும் மர்மங்களும் நிறைந்த “நட்சத்திரா” பட ஃபர்ஸ்ட் லுக் !

விதார்த் நடிப்பில் மாயங்களும் மர்மங்களும் நிறைந்த “நட்சத்திரா” பட ஃபர்ஸ்ட் லுக் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Natchatraaதயாரிப்பாளர்களுக்கும் விநியோகதஸ்கர்களுக்கும் லாபம் தரும் நடிகராக, தனது வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் தொடர் வெற்றி படங்களை தந்து வருகிறார் நடிகர் விதார்த். தற்போது வெளியாகியுள்ள அவரது அடுத்த படமான “நட்சத்திரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மீடியா மத்தியிலும், இணைய உலகிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பாதுகாவலன் உடையில் மாயங்களை துப்பறியும் விதமாக விதார்த் இருக்க பின்னணியில் பெண் ஆவிகள் இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பை தூண்டுகிறது.

படம் குறித்து இயக்குநர் மனோஜ் ராம் கூறியதாவது…
மர்மங்கள் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் “நட்சத்திரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஹாரர் கலந்து பயப்படுத்தும் அம்சமும் கொண்டிருக்கும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பற்றி படக்குழு கூறுவதை விட நேரில் திரையரங்கில் அந்த ஆச்சர்யங்களை ரசிகர்கள் அனுபவிப்பதே சரியானதாக இருக்கும். “நட்சத்திரா” படம் கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்களுக்கு மர்மங்கள் நிறைந்த மாய அனுபவத்தை தரும்.

புதுமுக இயக்குநராக அவரது அனுபவத்தை பற்றி மனோஜ் ராம் கூறும்போது….
இதைச் சொல்வது வழக்கமான ஒன்றாக இருக்கும் ஆனால் இது தான் உண்மை. தயாரிப்பாளர்கள் பிரேம்நாத் சிதம்பரம் மற்றும் வெள்ளை சேது CEO, Preniss International (OPC) Pvt Ltd என் மீதும் திரைக்கதை மீதும் வைத்த நம்பிக்கையால மட்டுமே இத்திரைப்படம் சாத்தியமானது. இன்று இப்படம் திட்டமிட்டபடியே மிகச்சரியான முறையில் உருவாகி வந்திருப்பதில் படக்குழு மிகுந்த மிகிழ்ச்சியில் இருக்கிறது. விதார்த்தின் அர்பணிப்பும் அவர் நடிப்பின் மீது கொண்டிருக்கும் தீவிர காதலும் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேம்களிலும் பிரதிபலிக்கிறது. அவரது கதாப்பாத்திரம் சில வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று. படம் முடிந்த பிறகு அனைவரது மனங்களில் நீங்காத இடம் பிடிப்பதாக அவரது கதாப்பாத்திரம் இருக்கும். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு தேதிகள் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

நெடுநல்வாடை புகழ் அஞ்சலி நாயர் இப்படத்தில் விதார்த் ஜோடியாக, அவரது மனைவியாக நடித்துள்ளார். செண்ட்ராயன், சந்தோஷ் பிரதாப், சங்கிலி முருகன், ஆடுகளம் நரேன், லக்‌ஷ்மி ப்ரியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ப்ரேம்நாத் சிதம்பரம் மற்றும் வெள்ளை சேது CEO, Preniss International (OPC) Pvt Ltd சார்பாக இப்படத்தை தயாரிக்கிறார்கள். பரத் ராகவன் இசையமைக்க, N.S.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணி குமரன் படத்தொகுப்பு செய்ய A.B.R கலை இயக்கம் செய்துள்ளார். சண்டைக்காட்சிகளை ராஜசேகர் வடிவமைத்துள்ளார்.

More Articles
Follows