தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2020 ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது நடிகர் அஜித் & அவரது மனைவி ஷாலினியுடன் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று இருந்தார்.
அவர்கள் இருவரும் மருத்துவமனைக்குள் வரும் போது எடுக்கப்பட்ட வீடியோ அப்போது இணையத்தில் வைரலானது.
மருத்துவமனைக்கு வருபவர்களை அனுமதியின்றி வீடியோ எடுப்பது அறத்திற்கு புறம்பான செயல் என்பதால், வீடியோ எடுத்த ஊழியர் ஃபர்ஸானாவை வேலையைவிட்டு நீக்கியது மருத்துவமனை நிர்வாகம்.
ஆனால், ஃபர்ஸானாவோ இந்த பிரச்சினையை அஜித் பக்கம் திருப்பினார்
”அஜித்தால் வேலை போய்விட்டது, அவர் நினைத்தால் எனக்கு வேலை கிடைக்கும்.
ஆனால் உதவி செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டார்” என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தற்போது, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஃபர்ஸானா கொடுத்த பேட்டியில் ஷாலினியிடமும், நடிகர் அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திராவிடமும் அவர் பேசிய போன் ஆடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சை உருவாக்கினார்.
இது குறித்து “மருத்துவமனை நிர்வாகம் எடுத்த முடிவில் நாங்கள் தலையிட முடியாது என்றிருக்கிறார் சுரேஷ் சந்திரா.
வேலை இல்லாத காரணத்தினால் தன் குழந்தைகள் படிப்பு செலவுக்கு கஷ்டப்படுவதாக ஃபர்ஸானா கூறியதால் தன் மேனேஜரிடம் பள்ளிக் கட்டணத்தை கட்ட சொல்லியிருக்கிறார் அஜித்.
நேரடியாக குழந்தை உடைய பள்ளி முகவரி & வங்கி கணக்கை கேட்டதற்கு, ஃபர்ஸானாவோ தன்னுடைய சொந்த கணக்கிற்கு பணத்தை அனுப்ப சொல்லிருக்கிறார்.
பணத்தை நேரடியாக ஃபர்ஸானா கணக்கிற்கு அனுப்ப மறுத்துள்ளார் சுரேஷ் சந்திரா.
இதனால் இருவருக்கும் பிரச்னை உருவானது.
இதனையடுத்து அஜித்தின் மேலாளர் உதவி செய்கிறேன் எனக்கூறிவிட்டு செய்யவில்லை’ என வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் ஃபர்ஸானா.
போலீஸார் விசாரணையில், சுரேஷ் சந்திரா நடந்தவற்றை விளக்கியுள்ளார்.
இதெல்லாம் அஜித்தின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க இதுபோல சிலர் இப்படி செய்கிறார்கள்” எனவும் தெரிவித்தனர்.
Dismissed hospital staff misuses Thala Ajith’s name to grab media attention