அஜித்தால் வேலை போச்சு.. அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திராவும் ஏமாத்திட்டாரு..; போலீசில் பெண் புகார்

அஜித்தால் வேலை போச்சு.. அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திராவும் ஏமாத்திட்டாரு..; போலீசில் பெண் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith at Apollo hospitalகடந்த 2020 ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது நடிகர் அஜித் & அவரது மனைவி ஷாலினியுடன் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று இருந்தார்.

அவர்கள் இருவரும் மருத்துவமனைக்குள் வரும் போது எடுக்கப்பட்ட வீடியோ அப்போது இணையத்தில் வைரலானது.

மருத்துவமனைக்கு வருபவர்களை அனுமதியின்றி வீடியோ எடுப்பது அறத்திற்கு புறம்பான செயல் என்பதால், வீடியோ எடுத்த ஊழியர் ஃபர்ஸானாவை வேலையைவிட்டு நீக்கியது மருத்துவமனை நிர்வாகம்.

ஆனால், ஃபர்ஸானாவோ இந்த பிரச்சினையை அஜித் பக்கம் திருப்பினார்

”அஜித்தால் வேலை போய்விட்டது, அவர் நினைத்தால் எனக்கு வேலை கிடைக்கும்.

ஆனால் உதவி செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டார்” என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தற்போது, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஃபர்ஸானா கொடுத்த பேட்டியில் ஷாலினியிடமும், நடிகர் அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திராவிடமும் அவர் பேசிய போன் ஆடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சை உருவாக்கினார்.

இது குறித்து “மருத்துவமனை நிர்வாகம் எடுத்த முடிவில் நாங்கள் தலையிட முடியாது என்றிருக்கிறார் சுரேஷ் சந்திரா.

வேலை இல்லாத காரணத்தினால் தன் குழந்தைகள் படிப்பு செலவுக்கு கஷ்டப்படுவதாக ஃபர்ஸானா கூறியதால் தன் மேனேஜரிடம் பள்ளிக் கட்டணத்தை கட்ட சொல்லியிருக்கிறார் அஜித்.

நேரடியாக குழந்தை உடைய பள்ளி முகவரி & வங்கி கணக்கை கேட்டதற்கு, ஃபர்ஸானாவோ தன்னுடைய சொந்த கணக்கிற்கு பணத்தை அனுப்ப சொல்லிருக்கிறார்.

பணத்தை நேரடியாக ஃபர்ஸானா கணக்கிற்கு அனுப்ப மறுத்துள்ளார் சுரேஷ் சந்திரா.

இதனால் இருவருக்கும் பிரச்னை உருவானது.

இதனையடுத்து அஜித்தின் மேலாளர் உதவி செய்கிறேன் எனக்கூறிவிட்டு செய்யவில்லை’ என வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் ஃபர்ஸானா.

போலீஸார் விசாரணையில், சுரேஷ் சந்திரா நடந்தவற்றை விளக்கியுள்ளார்.

இதெல்லாம் அஜித்தின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க இதுபோல சிலர் இப்படி செய்கிறார்கள்” எனவும் தெரிவித்தனர்.

Dismissed hospital staff misuses Thala Ajith’s name to grab media attention

டிவி சீரியல்களுக்கு முழுக்கு போடும் ‘ரோஜா’ சீரியல் நடிகர் அர்ஜுன் சிபு

டிவி சீரியல்களுக்கு முழுக்கு போடும் ‘ரோஜா’ சீரியல் நடிகர் அர்ஜுன் சிபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Roja serial (2)பெங்களூருவைச் சேர்ந்தவர் சிபு சூரியன்.

இவர் முதலில் மாடலிங் துறையில் இருந்தார். இதன் மூலம், கன்னட டிவி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

கன்னட சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த போதே தமிழ் சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவே சென்னை வந்துவிட்டார்.

தற்போது சன் டிவி-யில் கடந்த மூன்றரை ஆண்டாக ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ சீரியலில் அர்ஜூன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் சிபு சூரியன்.

இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டமும் உள்ளது.

இந்த நிலையில் இவர் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அது என்னவென்றால் ‘ரோஜா’ சீரியலே இவரின் கடைசி சீரியல் என தெரிவித்துள்ளார்.

OTT வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்த திட்டமிட்டு் இருக்கிறாராம்.

இசையமைப்பாளர்-இயக்குனர் ஹம்சலேகா இயக்கும் ‘சகுந்தலா’ என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தமிழிலும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

அந்த படத்தில் அரசியல்வாதியாக நடிக்கிறாராம்.

வாழ்த்துக்கள் ப்ரோ…

Roja will be my last serial on Television says Arjun Sibbu

மீண்டும் இணையும் ‘கர்ணன்’ கூட்டணி.; கன்பார்ம் செய்தார் தனுஷ்

மீண்டும் இணையும் ‘கர்ணன்’ கூட்டணி.; கன்பார்ம் செய்தார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karnan (1)மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகிபாபு, நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கர்ணன்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த ஏப்ரல் 9-ந் தேதி தியேட்டர்களில் வெளியானது.

இப்படம், நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

ரசிகர்கள் மட்டுமில்லாது நடிகர்கள் விக்ரம், பிரசாந்த், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜை பாராட்டினர்.

இந்நிலையில், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில், மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கர்ணனின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, மாரி செல்வராஜும் நானும் மீண்டும் ஒரு முறை கைகோர்க்கிறோம் என்று அறிவிக்க மகிழ்ச்சி. முன் தயாரிப்பு நடக்கிறது, அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும்.

#Karnan #KarnanBlockBuster

Dhanush and director Mari Selvaraj to collaborate again for another project

அப்துல் கலாம் கனவை நினைவாக்கும் அடுத்த நடிகர்.; 20 லட்சம் மாணவர்களுக்கு தாமு-வின் கல்விச் சேவை

அப்துல் கலாம் கனவை நினைவாக்கும் அடுத்த நடிகர்.; 20 லட்சம் மாணவர்களுக்கு தாமு-வின் கல்விச் சேவை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Dhamuதமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு. இயக்குனர் சிகரம் பாலசந்தரின் சீடரான இவருக்கு சினிமாவை தாண்டிய இன்னொரு முகமும் இருக்கிறது..

ஆம்.. கல்வி சேவையாளர் என்கிற புதிய முகம்.. அந்த முகத்துக்கான அங்கீகாரமும் தற்போது அவரை தேடி வந்துள்ளது.

கல்வித் துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக, தொடர்ந்து நடிகர் தாமு மேற்கொண்ட முயற்சிகளுக்காக, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் (CEGR National Council) சார்பில் “ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021” என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளித்துள்ளது.

கேரளாவின் மேன்மை ஆளுநர், தேசிய அங்கீகார வாரிய தலைவர், AICET யின் கட்டுப்பாட்டாளர்கள், 50 பல்கலைகழக அதிபர்கள் மற்றும் துணைவேந்தர்கள், இந்தியாவின் பல்வேறு நிறுவன தலைவர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்களை கொண்ட இந்த கவுன்சில் தனது 14-வது ராஷ்டிரியா சிக்ஷா கவுரவ புரஸ்கார் மற்றும் 7-வது உயர் கல்வி உச்சி மாநாட்டை கடந்த ஏப்ரல் 19, 2021 அன்று ஏற்பாடு செய்திருந்தது..

இந்த நிகழ்ச்சியின்போது கல்வித்துறையில் நடிகர் தாமு செய்த பங்களிப்புக்காக, அவருக்கு ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புராஸ்கர் விருது வழங்கப்பட்டது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த நிகழ்ச்சி கானொளி நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மாநாட்டில் பல்வேறு துறையை சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல வி.ஐ.பி.கள் முன்னிலையில் ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021 (தேசிய கல்வி பெருமை விருது 2021) ஏற்பாட்டுக் குழுவுடன் விழாவின் முதன்மை விருந்தினரால் நடிகர் தாமுவுக்கு வழங்கப்பட்டது.

கல்வித் துறையில் சில முக்கியமான பங்களிப்புகளைக் கருத்தில் கொண்டே, நடிகர் தாமுவுக்கு, இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆம்.. நடிகர் தாமு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் ஆலோசனையுடன், 2011 முதல் சர்வதேச பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர் பேரவையை (IPTSA) தொடங்கினார்.

இது ஒரு அரசு சாரா கல்வி சேவை வழங்கும் அமைப்பு ஆகும்.

2011 முதல் 2016 வரை ஐந்து ஆண்டுகள் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் மேற்பார்வையில் செயல்பட்டார் டாக்டர் தாமு.

அந்தவகையில் இளைஞர்களின் மனதில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கவும், கல்வியில் தரமான மாணவர்களை உருவாக்கிடவும் டாக்டர் கலாமிடம் நேரடி பயிற்சி பெற்று பணியாற்றியவர் தான் நடிகர் தாமு..

தமிழ் இளைஞர்களின் நலனுக்காக, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் ஒரு லட்சம் பேராசிரியர்கள், மற்றும் 30 லட்சம் பெற்றோர்களை கொண்ட இந்த அமைப்பின் மூலம் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு ஊக்கமும் பயிற்சியும் அளித்துள்ள அனுபவமுள்ள இந்தியாவின் கல்வி ஆர்வலர் தாமு என்றால் அது மிகையில்லை..

குறிப்பாக டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நேசத்துக்குரிய பக்தர்களில் ஒருவரான நடிகர் தாமு, அப்துல் கலாமின் முக்கோணக் கல்விக் கோட்பாட்டை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தியவர்.

இளைஞர்களின் தனிப்பட்ட நல்வாழ்வை வளர்ப்பது மற்றும் அவர்களின் சிறந்த எதிர்காலத்தை மேம்படுத்துதல், மேலும் இளம் தலைமுறையினரால் நம் இந்தியாவை பெருமைப்படுத்த வைப்பது போன்ற உயர்ந்த குறிக்கோளுடன் கல்வி சேவை புரிந்துள்ளதற்காக நடிகர் தாமுவுக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்படுவது மிக பொருத்தமான ஒன்று.

ஏற்கனவே சேவைசெம்மல், மாணவர் தளபதி, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்விருது, சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம்-(அமெரிக்கா) டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள நடிகர் தாமுவுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த விருது அவரது கிரீடத்தில் பதிக்கப்பட்ட இன்னொரு மாணிக்க கல் என்றே சொல்லலாம்.

Actor Dhamu’s help to poor students

பிக்பாஸ்’ கவின் – அமிர்தா நடித்த படத்திற்கு ‘லிப்ட்’ கொடுத்த சிவகார்த்திகேயன்

பிக்பாஸ்’ கவின் – அமிர்தா நடித்த படத்திற்கு ‘லிப்ட்’ கொடுத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan LIFT (2)ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லிஃப்ட்’.

இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க, அவருக்கு ஜோடியாக, நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் கிரண், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எஸ். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, பிரிட்டோ மைக்கேல் இசை அமைத்திருக்கிறார்.

ஜி மதன் படத்தைத் தொகுக்க சண்டைக் காட்சிகளை ஸ்டன்னர் சாம் கவனிக்க, சதீஷ் கிருஷ்ணன் நடனம் அமைத்திருக்கிறார்.

சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் ‘லிஃப்ட்’ படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி வினீத் வரபிரசாத் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று இப்படத்தில் இடம்பெற்ற சிங்கிள் ட்ராக் வெளியானது.

பாடலாசிரியர் ஆர் நிஷாந்த் எழுதியிருக்கும் ‘இன்னா மயிலு..’ எனத்தொடங்கும் பாடலை படத்தின் நாயகனான கவினின் நண்பரும், முன்னணி நட்சத்திர நடிகருமான சிவகார்த்திகேயன் பாடியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் குரலில் வெளியான ‘கனா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களின் பாடல்களைத் தொடர்ந்து ‘லிஃப்ட்’ படத்தின் பாடல்களும் தமிழ் திரை இசை ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்பை எளிதில் எட்டிப் பிடிக்கும்.

குறிப்பாக ஐ டி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் இந்த பாடலையும், பாடல் வரிகளையும் கேட்டால் அவர்களின் மனதிற்கு நெருக்கமாக அமையும்.

இந்த பாடலை பற்றி தயாரிப்பாளர் ஹேப்ஸி பேசுகையில்,’…

இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேலின் துள்ளலான மெட்டுக்கு, நிஷாந்த் எழுதிய இளமை ததும்பும் பாடல் வரிகளை, தன் மாயாஜால குரலால் அற்புதமாக பாடியிருக்கிறார் சிவகார்த்திகேயன். படத்தின் முகவரியாக அமைந்திருக்கும் ‘இன்னா மயிலு..’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் பாட சம்மதித்ததும், படக்குழுவினருக்கு உற்சாகம் பீறிட்டது.

இந்த பாடலுக்கான பதிவின்போது அவர் வருகை தந்து, எங்களுக்குள் இருந்த பதற்றத்தை தணித்து, சூழலை இனிமையானதாக்கி, எளிதாகவும், மிக நேர்த்தியாகவும் அந்தப் பாடலை பாடினார். வசீகரமான அவரின் குரலில் இந்த பாடல் வரிகளை கேட்டபோது ரசிகர்களின் ஆனந்த மனநிலையில் நான் உள்ளிட்ட படக்குழுவினர் இருந்தோம். ‘இன்னா மயிலு..’ என்ற பாடலை பாடிய சிவகார்த்திகேயனுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

Sivakarthikeyan to sing Kavin’s Lift

பிரபுதேவா-சல்மான் கான் இணைந்த ‘ராதே’ ஓடிடி ரிலீஸ்.; ஒன் டைம் பார்க்க இவ்வளவு கட்டணமா.?

பிரபுதேவா-சல்மான் கான் இணைந்த ‘ராதே’ ஓடிடி ரிலீஸ்.; ஒன் டைம் பார்க்க இவ்வளவு கட்டணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

radhe salman khan prabhu devaகொரோனா 2வது அலை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்காலிக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டு கிடக்கின்றன.

எனவே சினிமா தியேட்டர்களை மீண்டும் எப்போது திறப்பார்கள்? என்பது தெரியாத நிலையே உள்ளது.

இந்த நிலையில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா பதானி நடித்துள்ள படம் ‘ராதே’.

இப்பட டிரைலர் இன்று யு டியுப் தளத்தில் வெளியானது.

இந்த படத்தை ஒரே சமயத்தில் தியேட்டர்களிலும், ஓடிடி தளங்களிலும் மே 13ம் தேதியன்று வெளியிடுகின்றனர்.

ஓடிடி-யில் ‘ராதே’ படத்தை ஒருமுறை பார்க்க 299 ரூபாயை கட்டணமாக நிர்ணயித்துள்ளனர்.

கடந்த வருடம் தமிழில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘க.பெ.ரணசிங்கம்’ படத்தை ஓடிடி தளத்தில் பார்க்க 199 ரூபாயை கட்டணமாக வசூலித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Here’s How Much The Makers of Salman Khan’s Radhe Received For Its Digital Rights

More Articles
Follows