தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேசம் புதுசு படத்தை இயக்கியவர் வேல்முருகன்.
இவர் ஆட்டோகிராஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
சன்டிவியில் ஒளிப்பரப்பாகும் நந்தினி சீரியலின் கதை தன்னுடையது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கதைக்கு 50 லட்சம் ரூபாயும், சீரியல் ஒளிப்பரப்பாகும் வரை தனக்கு மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக சுந்தர் சி இவரிடம் கூறி கதையைப் பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
15 ஆண்டு நண்பர் என்ற அடிப்படையில் பரஸ்பர நம்பிக்கையின் பேரில் தாம் கதையை சுந்தர் சியிடம் வழங்கியதாகவும், ஆனால், ஒப்புக் கொண்டபடி மாத சம்பளத்தை 4 மாதங்களுடன் நிறுத்திவிட்டு 50 லட்சம் ரூபாய் பணமும் தராமல் தம்மை சுந்தர் சி ஏமாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பணத்தைக் கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் சுந்தர் சி மீது குற்றம்சாட்டியுள்ளார் வேல்முருகன்.
எனவே இதுகுறித்து சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Director Velmurugan filed case against SundarC in Nandhini serial story issue