ரஜினியின் ‘எந்திரன்’ கதை திருட்டு வழக்கு; ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஷங்கர் சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு.

ரஜினியின் ‘எந்திரன்’ கதை திருட்டு வழக்கு; ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஷங்கர் சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Shankar Rajinikanth1996 ஆம் ஆண்டு “இனிய உதயம்” தமிழ் பத்திரிகையில் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் எழுதிய “ஜுகிபா” கதை வெளியானது. அதே கதை மீண்டும்” தித்திக் தீபிகா “என்ற நாவலிலும் 2007 ஆம் ஆண்டு வெளியானது.

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் “எந்திரன்” திரைப்படம் வெளியான பின்பு தான் ஜுகிபா கதை திருடப்பட்டு எந்திரன் திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து எழுத்தளார் ஆரூர் தமிழ்நாடன் எந்திரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மற்றும் டைரக்டர் சங்கர் இருவருக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார்.

அவர்களிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் எந்திரன் திரைப்படத்தின் இயக்குனர் ஷங்கர் மீதும், படத்தின் தயாரிப்பாளரான கலாநிதிமாறன் மீது காப்புரிமை சட்டப்படி புகார் அளித்திருந்தார்.

1996 இல் தான் எழுதிய கதையை திருடி எந்திரன் எனும் திரைப்படத்தை எடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும், இது காப்புரிமை சட்டத்தின்படி கிரிமினல் குற்றம் எனவே இந்த வழக்கில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என புகார் கொடுத்திருந்தார்.

இந்த புகாரை நீண்ட விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போலீசார் இறுதியில் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.

இதனால் இந்த வழக்கை எழும்பூர் 13 வது நீதிமன்றத்தில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தனிப்பட்ட முறையில் கிரிமினல் வழக்காக இயக்குனர் ஷங்கர் மீதும், தயாரிப்பாளரான கலாநிதி மாறன் மீதும் தொடுத்திருந்தார் .

அந்த வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட இருவரும் எழும்பூர் 13ஆவது நீதிமன்றத்தில் ஆஜராகும்படி 2011ல் சம்மன் அனுப்பப்பட்டது.

அந்த சம்மனை அடுத்து இயக்குனர் ஷங்கரும் கலாநிதிமாறனும் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கு சட்டப்படி செல்லாது.

நாங்கள் கதையை திருடவில்லை எனவே அந்த வழக்கு செல்லாது என உத்தரவிட வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முறையிட்டனர்.

எழும்பூர் நீதிமன்ற வழக்கிற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து இருந்தது.
இந்த வழக்கு கடந்த 10 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அந்த வழக்கில் 6 .6.2019 அன்று நீதிபதி திரு. புகழேந்தி அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பில்…

கலாநிதிமாறன் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது எனவும், இயக்குனர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளது எனக்கூறிய நீதிமன்றம் கதை ஒரே மாதிரி இருப்பதாக கூறி கதைக்கும் சினிமாவுக்கும் உள்ள 16 ஒற்றுமைகளை பட்டியலிட்டு காட்டி அதன்மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாக தெரிகிறது.

அதனால் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட சங்கருக்கு எதிரான வழக்கை காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்த உத்தரவிட்டுள்ளது.

கூடுதல் அம்சமாக இயக்குனர் சங்கர் பிரபலமானவர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராகும் போது அங்கு கூட்டம் கூடுவது மற்றும் அலுவலக இடையூறுகள் ஏற்படும் என்பதால் நீதிமன்றத்திற்கு தேவைப்படும்போது மட்டும் அவர் ஆஜரானால் போதும் எல்லா வாய்தாவிற்கும் அவர் ஆஜராக தேவையில்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்க இருந்த நிலையில் கொரோனா பேரிடர் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இயக்குனர் சங்கர் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இயக்குனர் சங்கர் எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஒரு முறை கூட ஆஜராகவில்லை, இதே எழுத்தாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு தாக்கல் செய்துள்ள சிவில் வழக்கில் உயர்நீதிமன்றம் சாட்சியம் அளிக்குமாறு உத்தரவிட்ட பிறகும் ஷங்கர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Director Shankar appeals to Supreme Court for enthiran film story

BREAKING காங்கிரஸில் இருந்து விலகல்.; சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் எழுதிய குஷ்பூ

BREAKING காங்கிரஸில் இருந்து விலகல்.; சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் எழுதிய குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

khushboo sonia gandhiதென்னிந்திய சினிமாவை கலக்கியவர் நடிகை குஷ்பு. தமிழகத்தில் இவருக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் எல்லாம் உள்ளனர்.

பிரபல நடிகையான இவர் தற்போது அரசியலில் கலக்கி வருகிறார்.

முதலில் தி.மு.க வில் இணைந்தார். பின்னர் 2016-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

காங்கிரஸில் இணைந்த அவருக்கு அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளிக்காததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

இதனிடையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் தீவிரமாக எதிர்த்த போதிலும் அதற்கு குஷ்பூ ஆதரவு தெரிவித்திருந்தார்.

எனவே விரைவில் குஷ்பூ பாஜகவில் இணையப் போகிறார் என தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்னை நான் விடுவித்து கொள்கிறேன் எனவும் குஷ்பு அறிக்கை விடுத்துள்ளார்.

அதில்… அரசியல் களத்துடன் தொடர்பில்லாதவர்கள், கட்சிக்காக உழைக்க நினைக்கும் தன்னைப் போன்றவர்களிடம் அதிகாரம் செலுத்துகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியாகாந்திக்கு நடிகை குஷ்பு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து குஷ்பு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Khushboo quits congress, likely to join BJP

பெயரை கெடுத்துக் கொள்ள கூடாது..; விஜய்சேதுபதி படத்திற்கு த.பெ.தி.க பொ.செ. எதிர்ப்பு

பெயரை கெடுத்துக் கொள்ள கூடாது..; விஜய்சேதுபதி படத்திற்கு த.பெ.தி.க பொ.செ. எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi in muralitharan biopicஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு ற்றை திரைப்படமாக உருவாகவுள்ளது என்பதை நாம் பார்த்தோம்.

இதில நாயகனாக நடிக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி என அதிகாரப்பூர்வமாக ஓரிரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி , இலங்கை கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக பேட்டியளித்துள்ளார் தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன்.

அவர் கூறியதாவது…

ஈழதமிழர்களை கொடூரமாக கொன்று , சிங்கள பேரினவாத அதிபர் ராஜபக்சேவிற்கு அரசிற்கு துணை போனவர் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்.

அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படத்தில் தமிழக சிறந்த நடிகர் விஜய்சேதுபதி நடிப்பது வேதனையளிக்கிறது.

தனக்கு தமிழ் தெரியாது என்பதை பெருமையாக சொல்ல கூடியவர் முத்தையா.

சிங்கள மொழியில் மட்டுமே பேசுபவர். அப்படிபட்டவரின் கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்தால் அது உலக தமிழர்கள், ஈழதமிழர்கள் மத்தியில் வேதனையை உருவாக்கும் எனவும் தெரிவித்தார்.

நடிப்பது தொழில் என்று விஜய்சேதுபதி சொன்னால் அதை ஏற்கமுடியாது. இது திரைப்படம் தான் என்று சமாதானம் சொல்லகூடாது.

தந்தை பெரியார் கருத்துகளுக்கும், பெரியாருக்கும் பற்றுடையவராக நடிகர் விஜய்சேதுபதி இருந்தாலும் கூட , அவரது செயல் தமிழ் இனத்திற்கு மாறாக இருக்குமானால் அதை தந்தை பெரியார் திராவிட கழகம் கண்டிப்பாக எதிர்க்கும்.

தமிழ்மக்கள் மத்தியில் மனிதாபிமானி, எளிமையானவர், முற்போக்கானவர் என்ற எடுத்த பெயர்களை விஜய்சேதுபதி கெடுத்து கொள்ளகூடாது.

மக்கள் செல்வராக விஜய்சேதுபதி மக்கள் மனதில் நிலைக்க வேண்டுமானால் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் அப்படி படம் உருவானால் அந்த திரைப்படத்தை திரையிட நாங்கள் அனுமதிக்க மதிக்க மாட்டோம் எனவும் தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Dravidian outfit urges Vijay Sethupathi to give up Muttiah Muralidharan biopic

பாஜக-வில் இணையும் குஷ்பூ.?; சினிமா போல கா(க)ட்சிகளை மாற்றுகிறாரா?

பாஜக-வில் இணையும் குஷ்பூ.?; சினிமா போல கா(க)ட்சிகளை மாற்றுகிறாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Khushbooதென்னிந்திய சினிமாவை கலக்கியவர் நடிகை குஷ்பு. தமிழகத்தில் இவருக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் எல்லாம் உள்ளனர்.

பிரபல நடிகையான இவர் தற்போது அரசியலில் கலக்கி வருகிறார்.

முதலில் தி.மு.க வில் இணைந்தார். பின்னர் 2016-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

காங்கிரஸில் இணைந்த அவருக்கு அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளிக்காததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

இதனிடையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் தீவிரமாக எதிர்த்த போதிலும் அதற்கு குஷ்பூ ஆதரவு தெரிவித்திருந்தார்.

எனவே விரைவில் குஷ்பூ பாஜகவில் இணையப் போகிறார் என தகவல்கள் வந்தன.

இதனை குஷ்பு கடுமையாக கண்டித்தார்.

அதுபோல உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் குஷ்பு கலந்துகொண்டார்.

பா.ஜ.கவில் இணைவதாக இருந்தால், நான் ஏன் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்? என்று காட்டமாக பதில் அளித்திருந்தார்.

இந்த நிலையில், குஷ்பூ பா.ஜ.கவில் இணையவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

டெல்லி சென்றுள்ள அவர் நாளை ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.க முன்னிலையில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை வரை அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருப்போம்.

சினிமாவில் தான் அடிக்கடி எதிர்பாராத காட்சிகள் இடம்பெறும். தற்போது காட்சிகளை போல கட்சிகளை மாற்றுகிறாரோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

Actress/Politician Khushboo joins BJP

பாஜ இணையப்போகிறீர்களா என்ற கேள்விக்கு குஷ்பு பதில்..

நோ கமெண்ட்ஸ்… என பதிலளித்து சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 15ல் தியேட்டர் திறப்பு.; மாஸ்க் ப்ரீ.. டிக்கெட் & பார்க்கிங் கட்டணம் குறைப்பு..

அக்டோபர் 15ல் தியேட்டர் திறப்பு.; மாஸ்க் ப்ரீ.. டிக்கெட் & பார்க்கிங் கட்டணம் குறைப்பு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

theaters reopen in pondicherry

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்தியா முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.

6 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

பல வணிகங்களுங்கு சில தளர்வுகளுடன் அனுமதி வழங்கப்பட்டாலும் தியேட்டர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

அதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர்.

மேலும் சினிமா தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள், அதனை சார்ந்த அனைவரும் பெரிய பொருளாதார இழப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் அக்டோபர் 15-ம் தேதி முதல் நாடு முழுவதும் தியேட்டர்களை திறக்கலாம் என வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.

ஆனால் தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.

ஆனால் புதுச்சேரியில் அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுவை சண்முகா திரையரங்கம் ரூ.120க்கு விலையுடைய டிக்கெட் ரூ.100.க்கும், ரூ.100 ரூபாய்க்கான டிக்கெட் ரூ.75.க்கும் விற்கப்படும் என அறிவித்துள்ளது.

அதேபோல் சைக்கிள், பைக், கார் பார்க்கிங் கட்டணமும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் படம் பார்க்க வருவோருக்கு இலவசமாக மாஸ்க் வழங்கப்படும் என்று அந்த தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Pondicherry allows opening of theatres

சிம்பு-சுசீந்திரன் படத்தில் பாரதிராஜா-நிதி அகர்வால்..; வேற யாரெல்லாம் இருக்காங்க..

சிம்பு-சுசீந்திரன் படத்தில் பாரதிராஜா-நிதி அகர்வால்..; வேற யாரெல்லாம் இருக்காங்க..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu 39சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் STR 39 படத்தின் சூட்டிங் திண்டுக்கல் அருகே வாடிப்பட்டியில் நடைபெற்று வருகிறது.

‘ஜீரோ’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களைத் தயாரித்த மாதவ் மீடியா தங்களது 5வதாக படைப்பாக இந்த படத்தை தயாரிக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சிம்பு உடன் இயக்குநர் பாரதிராஜா, நிதி அகர்வால், பாலசரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மற்றொரு நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

சென்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான இந்த படம் உருவாகவுள்ளதாம்.

ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன், எடிட்டராக ஆண்டனி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாம் படக்குழு.

அடுத்தாண்டு 2021-ம் படத்தைத் திரைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.

STR 39 cast and crew details

More Articles
Follows