தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தை லைகா தயாரிப்பில் இயக்கி வருகிறார் ஷங்கர்.
இதன் சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.
பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் சூட்டிங்கை படம் பிடித்தார் ஒரு நிருபர்.
அப்போது அவரை படக்குழுவைச் சேர்ந்தவர் தாக்கினார் என்பதையும் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதையும் பார்த்தோம்.
எனவே, இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து ஷங்கர் மன்னிப்பு கேட்டார்.
அவர் பேசும்போது…
பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் எனக்கு தெரியாமல் நடந்துவிட்டது.
நான் மிகவும் கவனமாக இருப்பேன். இருந்திருந்தும் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது வருத்தத்திற்கு உரியது.
இனி வரும் காலத்தில், இது போன்று எதுவும் நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறேன். என்று
பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு நேரில் வந்து பேட்டியளித்து மன்னிப்பு கேட்டார்.
ஷங்கர் வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில், புகைப்படக் கலைஞர்கள் சார்பில் அளிக்கப்பட்ட போலீஸ் புகாரும் திரும்பப் பெறப்பட்டது.