‘அப்பா’ படம் உருவாக காரணம் என்ன..? சமுத்திரக்கனி நெகிழ்ச்சி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுத்திரக்கனி எழுதி, இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம் அப்பா.

இவருடன் தம்பி ராமையா, நமோ நாராயணன் மற்றும் பள்ளிக் குழந்தைகள் பலரும் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வருகிற ஜீலை 1ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

இப்படம் குறித்து சமுத்திரக்கனி கூறியுள்ளதாவது…

“இதில் நிறைய அப்பாக்களை பற்றி கூறியிருக்கிறேன். தன் மகனின் ஆசையை தானாகவே தெரிந்து கொண்டு நிறைவேற்றும் ஒரு அப்பா.

குழந்தை பிறந்தது முதல் படிப்பு, திருமணம் வரை திட்டமிடும் ஒரு அப்பா.

மகனே உனக்கு என்ன தோனுதோ அதை செய்யிடா என்று சொல்லும் ஒரு அப்பா என அப்பாக்களை காட்டியுள்ளேன்.

+2 தேர்வில் 1040 மார்க் எடுத்தும் தைரியலட்சுமி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். அந்த செய்தியை படித்த முதல் 3 நாட்கள் என்னால் மீளமுடியவில்லை.

எனவே அன்றுமுதல், நான் பத்தாம்வகுப்பு, +2 தேர்வு முடிவுகள் வந்தால் சிலநாட்களுக்கு பேப்பர் படிப்பதில்லை.

அதன்பின்னர் என் உதவியாளர்களை களப்பணியாற்றி இதுபோன்ற எல்லாம் தகவல்களையும் சேகரிக்க சொன்னேன்.

நானும் குழந்தைகள் பற்றிய செய்திகளை சேகரித்தேன். இந்தியாவில் தற்கொலையில் தமிழ்நாடுதான் முதலிடம் என அப்போது தெரிய வந்தது.

எனவே 3 வருடங்களாக இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கினேன். இப்படத்திற்கு பாடல்கள் தேவைப்படவில்லை.

குழந்தைகளிடத்தில் குறையில்லை. அவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்வி முறையில் தான் பிரச்சினை உள்ளது. அதில் மாற்றம் செய்ய வேண்டும்.

இப்படத்தை திரைப்பட விழாக்களுக்கும் அனுப்ப இருக்கிறேன்.”

இவ்வாறு தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி.

ரஜினிக்கு அடுத்து சூர்யாதான்… கன்பார்ம் செய்த கபாலி இயக்குனர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை இயக்கியவர் ரஞ்சித்.

எனவே, இதனைத் தொடர்ந்து ரஞ்சித்துக்கு கால்ஷீட் கொடுத்தார் சூர்யா.

ஆனால் ரஜினியின் கபாலி வாய்ப்பு ரஞ்சித்துக்கே வரவே, ரஜினி பட வாய்ப்பை விட வேண்டாம் என சூர்யாவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் கேட்டுக் கொண்டார்களாம்.

தற்போது கபாலி ரிலீசுக்கு ரெடியாகிவிட்ட நிலையில், சூர்யா படத்தை கையில் எடுக்க இருக்கிறாராம் ரஞ்சித்.

ஹரி இயக்கும் சிங்கம் 3 படத்தை அக்டோபரில் முடித்துவிட்டு ரஞ்சித் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என தெரிய வந்துள்ளது.

‘காக்கா முட்டை’க்கு பிறகு நல்ல படங்கள் இல்லை’ – வசந்தபாலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள படம் ‘பகிரி’.

இன்றைய ட்ரெண்டான வாட்ஸ்அப்பை மையமாக கொண்டு விவசாயத்தை பற்றி அலசி ஆராய்ந்துள்ள இப்படத்திற்கு கருணாஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

பாடல்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார்.

இப்படத்தின் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் நடிகை நமீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் பேசியதாவது…

“செருப்பு தைக்கிற தொழிலை கேவலமாக பார்த்த பலர் இன்று பணத்திற்காக அத்தொழிலை செய்கின்றனர்.

ஆனால் விவசாயம் செய்யதான் இங்கே யாரும் இல்லை.

‘இந்தப் பிழைப்பு எங்களோடு போகட்டும்மய்யா.. நீ பட்டனம் போய் செட்டிலாகு என தங்களை பிள்ளைகளை விவசாயிகளே வெளியூறுக்கு அனுப்பி வைக்கும் நிலைமை உள்ளது.

சமூகம் சார்ந்த ஒருவன் ஒருவன் என்னவாக வேண்டும் என்கிற அந்தப் போராட்டமே இந்த ‘பகிரி’ படம்” என்றார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் வசந்தபாலன் பேசியதாவது….

“இந்த ‘பகிரி’ என்கிற பெயரே பிடித்திருந்தது. ஆங்கில வார்த்தைகளுக்கெல்லாம் தமிழில் மாற்றுச் சொல் தேடாமல் அப்படியே பயன்படுத்தி வருகிறோம்.

கம்ப்யூட்டர் என்ற சொல் கணிப்பொறி ஆனது. அதன்பின்னர் அழகாக கணினி என்று மாறியது.

நான் ‘அங்காடித் தெரு’ என்று தலைப்பு வைத்த போது பலருக்கும் புரியவில்லை. சிலர் அங்கன் வாடியா என்றுகூட கேட்டார்கள்.

ஆனால் அது சட்ட சபையிலேயே பேசப்பட்டது. தற்போது பாண்டி பஜாருக்கு என்பது சௌந்தரபாண்டியன் அங்காடி எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

நான் என் படத்திற்கு ‘வெயில் ‘ என்று தலைப்பு வைத்தபோது கூட ஷங்கர் சார் வேண்டாம் என்றார். பின்னர்தான் ஒத்துக் கொண்டார்.

ஒரு படைப்பாளி பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல நல்ல செய்தி உள்ள படத்தையும் கொடுக்க வேண்டும்.

இப்போது மராத்தி, கன்னடத்தில் நல்ல படங்கள் வருகின்றன. எப்போதாவது இங்கே நல்ல படங்கள் வருகின்றன.

‘காக்கா முட்டை’ க்குப் பிறகு எதுவும் வரவில்லை. எல்லாமே கூமுட்டைகளாகவே இருக்கின்றன.

விவசாயத்தைப் போலவே தமிழ்ச் சினிமாவும் நொறுங்கிக் கொண்டு இருக்கிறது. பத்து ஹீரோக்கள் நடித்த படங்கள் தவிர மற்றவை ஓடுவதில்லை.

விவசாயம் என்பது ஒரு சாதி. ஆனால் அது இன்று அழிந்து வருகிறது.

ஜவஹர்லால் நேரு நம், இந்தியாவை விவசாய நாடாக்குவதற்கு பதிலாக தொழிற்சாலையாக மாற்ற நினைத்தாரோ அன்றே விவசாயம் இறந்துவிட்டது.

கோ கோ கோலா 1 லிட்டர் தயாரிக்க 12 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. என்னதான் கண்டு பிடித்தாலும் தண்ணீரை யாரும் கண்டுபிடிக்க முடியாது. ‘ஹெச் 2ஓ ‘ வை யாராலும் உருவாக்கிட முடியாது.

விவசாய நிலங்கள் அடுக்குமாடிக் கட்டிடங்களாகின்றன. காரை இறக்குமதி செய்யலாம். அரிசியை இறக்குமதி செய்யலாமா?

பிரதமர் மோடி நாடு நாடாகப் சென்று தொழில் தொடங்க இந்தியா வாருங்கள் என்கிறார். இன்னும் 20 ஆண்டுகளில் உணவுக்காகக் கையேந்தும் நிலை வரும்.

சேரன் போன்ற கலைஞர்களை கண்ணீர் விட்டுக் கெஞ்சிக் கதற வைக்கிறது. நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற கனவுடன் சினிமாவுக்கு வந்தோம். ஆனால் அந்தக் கனவு நொறுங்கி கொண்டிருக்கிறது” என்று பேசினார்.

முன்னதாக புதிதாகத் தேர்வான தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியனின் நிர்வாகிகள் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் A.ஜான், பொருளாளர் விஜய முரளி, துணைத்தலைவர் வி.கே. சுந்தர், இணைச்செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ‘பகிரி’ படக் குழுவின் சார்பில் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர்.

கேன்டீன் வியாபாரத்திற்கா படம் எடுக்கிறோம்..? சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாட்ஸ்அப் ஷேரிங் பற்றிய நிகழ்வுகளை மையமாக கொண்டு ‘பகிரி’ படம் தயாராகியுள்ளது.

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பிரபு ரணவீரன் நாயகனாகவும், நாயகிகளாக ஷார்வியா, ஆதிரா நடித்துள்ளனர்.

இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு நடிகர் கருணாஸ் இசையமைத்துள்ளார்.

இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் நடிகை நமீதா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பாடல்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக புதிதாகத் தேர்வான தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியனின் நிர்வாகிகள் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் A.ஜான், பொருளாளர் விஜய முரளி, துணைத்தலைவர் வி.கே. சுந்தர், இணைச் செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு ‘பகிரி’ படக் குழுவின் சார்பில் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர்.

விழாவில் சுரேஷ் காமாட்சி பேசியதாவது…

“நான் மற்றும் ‘பகிரி’ இசக்கி கார்வண்ணன் எல்லாருமே ஒரே இடத்திலிருந்து பயணத்தை தொடங்கியவர்கள்.

இப்படத்தின் இசையமைப்பாளர் கருணாஸ் ஜல்லிக்கட்டு பற்றி சட்டசபையில் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது.

இன்றைய தமிழ் சினிமாவிற்கு ஒரே நம்பிக்கை ஊடகங்கள்தான்.

ஆனால் ஊடகங்களின் விமர்சனங்கள் மக்கள் பார்வைக்கு வருவதற்குள் திரையரங்கில் அந்த படத்தை தூக்கி விடுகிறார்கள்.

இன்று சினிமா பார்க்காதவர் யாருமில்லை. திருட்டு விசிடி அல்லது டவுன்லோடு செய்து பார்க்கிறார்கள்.

ஆனால் தியேட்டருக்கு வந்து பார்க்கத்தான் அவர்கள் தயார் இல்லை.

சினிமா டிக்கெட்டை விட அதன் பார்க்கிங் கட்டணம் அதிகம். ரூ. 200 வரை இருக்கிறது.

படம் பார்க்கத்தான் தியேட்டருக்கு வருகிறார்கள். ஆனால் இப்படி கட்டணம் வைத்தால் எப்படி வருவார்கள்?

காலை, மதியம் காட்சிக்கு கேண்டீனில் வியாபாரம் இல்லையென்றால் அடுத்த காட்சிக்கு அந்த படம் இருக்காது. கேண்டீனில் வியாபாரம் செய்வதற்கா தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டுப் படம் எடுக்கிறார்கள்?

எனவே, ஏன் எல்லாரையும் தியேட்டருக்கு போய் படம் பார்க்கக் கட்டாயப்படுத்த வேண்டும்?

கள்ளச் சாராயத்தை ஒழிக்க டாஸ்மாக் வந்தது போல் திருட்டு விசிடியை ஒழிக்க அதையும் சட்டப் பூர்வமாக்கி விடலாம்.” என்றார்.

விஷால்-லிங்குசாமி-யுவன் கூட்டணியில் ‘சண்டக்கோழி 2’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சண்டக்கோழி 2 படத்திற்காக இணையவிருந்த விஷால் மற்றும் லிங்குசாமி கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

அதன்பின்னர் இருவரும் சமாதானம் ஆகிவிட்டதை நம் முன்பே பார்த்தோம்.

எனவே சண்டக்கோழி படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

தற்போது இவர்களின் கூட்டணியில் இசையமைப்பாளராக இணைந்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி, பையா, அஞ்சான் ஆகிய படங்களுக்கு யுவன் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மதி ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். படத்தின் நாயகி உள்ளிட்ட கலைஞர்கள் தேர்வானவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஹிப் ஹாப் ஆதி… வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிப் ஹாப் பாடல்கள் மூலம் பிரபலமான ஆதி தற்போது திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

இவரின் இசையில் உருவான ஆம்பள, தனி ஒருவன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது ஜல்லிகட்டில் ஒளிந்திருக்கும் சர்வதேச அரசியலை தோலுரிக்கும் வகையில் டக்கரு டக்கரு என்ற வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசும் மக்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல்களை எழுப்பி வரும் நிலையில், காளை இனத்தையே அழிக்க பன்னாட்டு அரசியல் என்னவெல்லாம் செய்கிறது என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.

சொந்த நாடாக இருந்தாலும் நம் அடையாளங்களை இழந்துவிட்டால் நாமும் அகதிதான் என்ற குரல் பாடலில் ஒலிக்கிறது.

மேலும் வல்லுனர்கள், விவசாயிகள், மாடு வளர்ப்போரின் கருத்துக்களும் இதில் இடம்பெற்றுள்ளது. 12 நிமிடங்கள் வரை இந்த வீடியோ உள்ளது.

இறுதியாக காளையை காப்போம். ஜல்லிக்கட்டை வளர்ப்போம் என்ற கருத்துடன் இந்த காட்சிகள் முடிகிறது.

More Articles
Follows