எக்ஸ் சோனுக்கு தடை; எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா? சென்சாரின் ஓரவஞ்சனை!

எக்ஸ் சோனுக்கு தடை; எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா? சென்சாரின் ஓரவஞ்சனை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

x videos movie stillsஒரு படம் சென்சார் போர்டின் விதிகளைத் தாண்டி வரும்போது சில வெட்டுக்களையும், பல மியூட்களையும் முதுகில் தாங்கிக் கொண்டுதான் வெளியாகிறது.

சென்சாரைப் பொருத்தவரையில் அவர்கள் பார்வையிலும், அரசியல் அதிகாரமிக்கவர்களைப் பாதிக்காத வகையிலும் இருந்தால் பிரச்சனையில்லை.

சான்றிதழ் எளிதாகக் கைக்கு வந்துவிடும்.

கொஞ்சம் சமூகப்பிரச்சனைகள், கிளாமர் உள்ள படங்கள் திணறத்தான் செய்கின்றன. அப்படி திணறி வர முடியாமல் போன படம் எக்ஸ் சோன் என்ற பெயரில் சென்சாருக்கு வந்த இந்திப் படம்.

மேல்முறையீடு வரை சென்றும் கடைசி வரை வெளி வர முடியாமலே போய்விட்டது.

ஆனால் இப்போது எக்ஸ் வீடியோஸ் என்ற படத்திற்கு ஏ சான்றிதழும் சென்சார் போர்டு பெண் உறுப்பினர்களிடமிருந்து பாராட்டும் கிடைத்திருப்பது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ் வீடியோஸ் படம் தமிழ் இந்தி ஆகிய மொழியில் தயாராகியுள்ளது.

இயக்குநர் ஹரியின் உதவியாளர் சஜோ சுந்தர் இயக்கியுள்ளார். அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

எக்ஸ் சோனுக்கு கிடைக்காத சான்றிதழ் எக்ஸ் வீடியோஸுக்கு கிடைத்ததெப்படி? படத்தின் இயக்குநர் சஜோ சுந்தரைக் கேட்டோம்…

நான் மையப்படுத்தியிருப்பது பெண்களின் பாதுகாப்பு குறித்த கருத்துகளை… வெறுமனே உடலைக் காட்டி பணம் பண்ண எடுக்கப்பட்ட படம் அல்ல இது.

படத்திற்கு வைக்கப்பட்ட தலைப்பு வேண்டுமானால் ஆபாச படங்கள் கொண்ட தளத்தின் பெயரில் இருக்கலாம்.

ஆனால் குறிப்பாக சொல்லப்போனால் அந்த தளத்திற்கே ஆப்பு வைக்க எடுக்கப்பட்ட படம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அழகான பெண்களின் உடலமைப்பை குறிவைக்கும் ஆண்ட்ராய்ட் மாஃபியாவுக்கு எதிரான படம் இது. இந்த படத்தை சென்சார் போர்டிலுள்ள பெண் உறுப்பினர்களும் பார்த்தார்கள்.

இன்று அவசியம் சொல்லப்படவேண்டிய கருத்துள்ள முக்கியமான படம் இது என்று பாராட்டினார்கள். எக்ஸ் சோன் என்ன கதையம்சத்தோடு எடுக்கப்பட்ட படம் என்பது எனக்குத் தெரியாது. பண்பாடு, கலாச்சாரதிற்கு ஏற்ப ஒரு படம் எடுக்கப்பட்டிருந்தால் அதற்கு ஏன் தடை வரப்போகிறது?

அதனால் எக்ஸ் சோன் படத்தை எக்ஸ் வீடியோஸ் படத்தோடு ஒப்பிட்டு சென்சாரைக் குறை சொல்ல வேண்டாம்.

நான் தேவைப்படும் இடங்களில் மட்டுமே கிளாமர் வைத்துள்ளேன். அது படம் பார்க்கும் யாருக்கும் தவறாகத் தெரியாது என்று மட்டுமில்லாமல், சரியாகத் தானே சொல்லியிருக்கிறார்கள் என்றும் தோன்றும்.

எக்ஸ் வீடியோஸ் விரைவில் இந்தி, தமிழில் இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது..

நான் ஹீரோதான்; ஆனா ஹீரோ ரேஸில் நானில்லை… ஜீவா ஓபன் டாக்

நான் ஹீரோதான்; ஆனா ஹீரோ ரேஸில் நானில்லை… ஜீவா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor jiivaசத்தமில்லாமல் ஆர்ப்பாட்டமில்லாமல் பல படங்களில் நடித்து வருகிறார் ஜீவா.

சுந்தர் சி இயக்கத்தில் இவர் நடித்துள்ள கலகலப்பு2 படம் நேற்று வெளியானது.

இவரின் சமீபத்திய பேட்டியில்..

சினிமாவில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தியேட்டர்களில் படங்கள் திரையிடப்படுவதை தாண்டி இன்டர்நெட் சினிமாவுலகம் ஒன்று இருக்கிறது.

எனது படங்களில் ஒன்றிரண்டு தவிர மற்ற படங்கள் நியாயமான வசூலை பெற்றிருப்பதால்தான் எனக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது.

கீ, கொரில்லா, ராஜுமுருகனின் ஜிப்சி போன்ற படங்களில் தனி ஹீரோவாக நடித்து வருகிறேன்.

தமிழ் சினிமா ரேசில் பல ஹீரோக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அந்த ரேசில் நான் இல்லை.” என்று கூறியுள்ளார்.

பிரபாகரன் மகன் பாலசந்திரன்; பாடகி இசைப்ரியா ஆகியோரை பற்றிய படம் : சாட்சிகள் சொர்க்கத்தில்

பிரபாகரன் மகன் பாலசந்திரன்; பாடகி இசைப்ரியா ஆகியோரை பற்றிய படம் : சாட்சிகள் சொர்க்கத்தில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

saatchigal sorkaththilஆஸ்திரேலியாவில், ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவான, ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

நீண்ட காலமாகக் காத்திருந்த இத்திரைப்படத்தின், இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி, மாசி மாதம் 2018 அன்று ஆஸ்திரேலியாவில், பெண்டில்ஹில்லில் உள்ள யாழ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ ஒரு நடப்பியலுக்கு மாறுபட்ட தன்மையுடைய கதை பாணியில் அமைக்கப்பட்ட, இலங்கை அரச படையினரால் துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட தமிழர்களினதும், அகதிகளாய் அயல் நாடுகளில் தமிழர் படும் அவலங்களையும், உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு உருவான படம்.

பாதிப் படம் தமிழில் துணையுரையுடன் ஆங்கிலத்திலும், மீதி ஆங்கில துணையுரையுடன் தமிழிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் துணைக் கதைகள், குறும்படங்களாக பல சர்வதேச விருதுகளை தட்டிச்சென்ற கதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம், 2009ல் இலங்கை அரச படையினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தலைவர் பிரபாகரனின் புதல்வன் பாலச்சந்திரனுக்கும், பாடகியும் உடகவியளாளரும், நடிகையுமான சகோதரி இசைப்ரியாவுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, அவர்களின் இழப்பை கருவாக கொண்டு உருவான கதைதான் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’.

பாலச்சந்திரனின் வேடத்தில் இயக்குநர் ஈழன் இளங்கோவின் மகன் சத்யா இளங்கோ நடித்துள்ளார்.

ஈழத்தில் நடந்த கற்பழிப்பு கட்சிகளோ, கொலை கட்சிகளோ துன்புறுத்தல் கட்சிகளோ இத்திரைப்படத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இருப்பினும், அதைவிட ஆழமான உணர்வுகளையும் வலியையும் அடக்கியுள்ளது இத்திரைப்படம்.

ஆஸ்திரேலியாவிலும், பிரான்ஸ் நாட்டிலும் படமாக்கப்பட்ட இப்படத்தின் தொழில்நுட்ப வேலைப்பாடுகள் தமிழ் நாட்டு திரைக் கலைஞர்களால் செய்யப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்திற்கு சென்னையில் பிரபலமான சதிஷ் வர்ஷன் இசையமைத்துள்ளார். சதீஷ் வர்ஷனின் குரலில் இரு பாடல்களும், தேசிய விருது பெற்ற பிரபல பாடகி சுர்முகியின் குரலின் ஒரு பாடலும் அமைந்துள்ளது.

இத்திரைப்படத்தில், ஆஸ்திரேலிய தமிழ், ஆங்கில நடிகர்களுடன் பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழ் நடிகர்களும், அவர்களோடு ஐம்பது வருட திரையுலக அனுபவமுள்ள ஈழத்து பிரபல நடிகர் ஏ ரகுநாதன் அவர்களும் நடித்துள்ளார்.

‘சாட்சிகள் சொர்கத்தில்’ ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய திரைப்படம். பார்ப்பது மட்டும் அல்ல, இத்திரைப்படத்தை வேற்றுமொழி இனத்தவருக்கும் எடுத்துச்செல்ல வேண்டும்.

மொழி, உரையாடல், கதை அனைத்தும் அதற்கேற்பவே அமைக்கப்பட்டுள்ளது. திரையுலக வரலாற்றில், முக்கியமாக, ஈழத்தமிழரின் திரையுலக வரலாற்றில், இப்படம் வேறு ஒரு பரிமாணம் எடுத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஈழத் தமிழர்களின் வலிகள் இதுவரை கூறப்படாத வேறொரு வடிவில், வேறொரு அணுகுமுறையில், வேறொரு பரிமாணத்தில் கூறப்பட்டிருக்கிறது.

வேற்றுமொழி பேசுபவர்களுக்குக்கூட ஈழத் தமிழரின் வலிகள் இலகுவாய் புரியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை வெற்றியடைய செய்வது ஒவ்வொரு தமிழனுடைய கடமை என்று உரிமையுடன் கூறலாம்.

Breaking: ரஜினி-தனுஷ் கூட்டணியின் காலா ரிலீஸ் குறித்த அறிவிப்பு

Breaking: ரஜினி-தனுஷ் கூட்டணியின் காலா ரிலீஸ் குறித்த அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala movie stillsகபாலியை தொடர்ந்து ரஜினியின் காலா படத்தையும் ரஞ்சித்தே இயக்கியுள்ளார்.

ரஜினியுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை நடிகர் தனுஷ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இதனிடையில் ரஜினியின் மற்றொரு படமான 2.ஓ படமும் தயாராகி வருகிறது.

ஆனால் அந்த பட வெளியீடு தாமதமாகி வருவதால் காலா படத்தை முதலில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இதுபற்றிய அறிவிப்பை இன்று மாலை 7 மணிக்கு ஒரு மாஸான போஸ்டருடன் அறிவிக்க உள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

Wunderbar films, Superstar Rajinikanth’s #kaalaa release date will be announced by 7 pm today with a #mass + #style = #RAJINI poster .. Thalaivar fans, get ready to CELEBRATE

ஷாம் உடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நாயகி

ஷாம் உடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Athmiyaஷாம் தற்போது “ 2M cinemas ” K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார்.

ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் “ கா-வியன் “ என்றும் தெலுங்கில் “ வாடு ஒஸ்தாடு “ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஷாம் ஜோடியாக சிவகார்த்திகேயன் நடித்த ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – N.S.ராஜேஷ் குமார்
இசை – ஷ்யாம் மோகன்
பாடல்கள் – மோகன்ராஜ்
ஸ்டன்ட் – ஸ்டன்ட் சிவா
கலை – T.N கபிலன்
நடனம் – விஷ்ணுதேவா
எடிட்டிங் – அருண்தாமஸ்
தயாரிப்பு – 2M cinemas ” K.V. சபரீஷ்
எழுத்து இயக்கம் – சாரதி

முழுக்க முழுக்க அமெரிக்காவிலுள்ள லாஸ்வேஹாசில் ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள முதல் தமிழ் திரைப்படம் இது .

சண்டைக் காட்சிகளும், திரைக்கதையும் தொடக்கம் முதல் இறுதிவரை பிரமிக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளத்தில் டிரெண்டாகியுள்ளது.

விஜய்-சூர்யா படங்களில் நடித்தவருக்கு தலையில் பயங்கர அடி..!

விஜய்-சூர்யா படங்களில் நடித்தவருக்கு தலையில் பயங்கர அடி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vidyut jammwalவிஜய்யின் துப்பாக்கி, சூர்யாவின் அஞ்சான் போன்ற படங்களில் நடித்தவர் வித்யூத் ஜம்மால்.

இவர் தற்போது ஜங்கி என்ற அதிரடி ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென எதிர்பாராமல் அவரது தலையில் பலத்த அடி விழுந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியான படக்குழு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

தற்போது அவர் குணமாகி வருவதாக கூறப்படுகிறது.

More Articles
Follows