விஜய்யின் வெற்றிக்கு விஜயகாந்த் காரணம்..: எஸ்ஏசி ஓபன் டாக்

விஜய்யின் வெற்றிக்கு விஜயகாந்த் காரணம்..: எஸ்ஏசி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director SAC talks about Vijayakanths huge contribution to Vijays successவிஜயகாந்த் திரையுலகத்திற்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது.

எனவே அவருக்கு தேமுதிக சார்பில் பாராட்டு விழா நடந்தது.

அந்த விழாவில் இயக்குனர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, சத்யராஜ் உள்ளிட்ட பல திரையுல பிரபலங்கள் கலந்துக கொண்டு வாழ்த்தினர்.

அப்போது விழாவில் பேசிய எஸ்ஏ. சந்திரசேகர் பழைய நினைவுகளைப் பற்றி மீண்டும் பேசினார்.

“என் மகன் விஜய் நடிகனாக ஆசைப்பட்டதும், நாளைய தீர்ப்பு படம் எடுத்தேன். ஆனால், அந்தப் படம் ஓடவில்லை.

விஜயகாந்துடன் இணைந்து நடித்தால் அவரால் நல்ல நடிகராக முடியும் என்று நினைத்தேன்.

விஜய்யைப் பற்றி விஜயகாந்திடம் சொன்னதும், எப்போது ஆரம்பிக்கிறோம் என்று உடனே சம்மதம் சொன்னார். அவருடைய சம்பளம் பற்றி கேட்டதும், முதலில் ஷுட்டிங்கை ஆரம்பியுங்கள், விஜய் நல்ல நடிகராக வரட்டும் பின்னர் பேசுவோம் என்றார்.

செந்தூரபாண்டி படம் எடுத்து முடித்தோம், பெரிய வெற்றியைப் பெற்றது. விஜய்யின் வெற்றிக்கு விஜயகாந்த் அமைத்துக் கொடுத்த படிக்கட்டுகள் மிகப் பெரிய இடத்தில் உள்ளன,” என்று பேசினார்.

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நாயகனாக நடித்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ 1981 படம்தான் விஜயகாந்தை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Director SAC talks about Vijayakanths huge contribution to Vijays success

Captain 40 Celebration Photos (20)

நாளை சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வருமா.? நம்பிக்கையில் திரையுலகினர்!

நாளை சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வருமா.? நம்பிக்கையில் திரையுலகினர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cine Industry expect will Strike come to an end 17th April 2018கியூப் டிஜிட்டல் கட்டண உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திரைத்துறையினர் கடந்த 45 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

இதனால் புதுப்படங்களோ, அது தொடர்பான சினிமா நிகழ்வுகளோ நடைபெறவில்லை.

இது தொடர்பாக தியேட்டர் அதிபர்கள், கியூப் நிறுவன நிர்வாகிகளுடன் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பேச்சு வார்த்தைகள்கள் அனைத்தும தோல்வியில் முடிந்தது.

எனவே ஏரோக்ஸ் உள்ளிட்ட புதிய டிஜிட்டல் நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நாளை ஏப்ரல் 17 முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர்கள் ரோகினி பன்னீர் செல்வம், அபிராமி ராமநாதன், மற்றும் கியூப் நிறுவன அதிகாரிகள் இதில் கலந்து கொள்கிறார்கள் என கூறப்படுகிறது.

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பேச வேண்டிய விஷயங்கள் பற்றி தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நேற்று கூடி விவாதித்தனர்.

அப்போது கியூப் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் கட்டுவதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தணிக்கை சான்றிதழ் பெற்ற தேதியின் அடிப்படையில்தான் புதுப்படங்களை ரிலீஸ் செய்வது எனவும் அப்போது முடிவு செய்யப்பட்டது.

Cine Industry expect will Strike come to an end 17th April 2018

தெலுங்கு மொழி படங்களில் சத்யராஜ் நடிக்க இதான் காரணமா..?

தெலுங்கு மொழி படங்களில் சத்யராஜ் நடிக்க இதான் காரணமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sathyarajசென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் பாலு மகேந்திரா நூலகம் தொடங்கப்பட்டது.

நடிகர்கள் சத்யராஜ், இயக்குனர்கள் வெற்றிமாறன், ராம், சுப்பிரமணிய சிவா, மீரா கதிரவன், நடிகை ரோகிணி, எழுத்தாளர் பாமரன் ஆகியோர் இதை தொடங்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்யராஜ் பேசும் போது…

“நான் நடித்த ‘கடலோர கவிதைகள்’ படம் பார்த்து விட்டு சிவாஜி என்னிடம், “ அடுத்த 10 வருடங்களுக்கு உன்னை யாரும் அசைக்க முடியாது” என்றார்.

‘வேதம்புதிது’ பார்த்து விட்டு எம்.ஜி.ஆர். என் கையை பிடித்து முத்தம் கொடுத்தார்.

‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படம் பார்த்த பாலுமகேந்திரா என்னை கட்டிப் பிடித்து கண் கலங்கி பாராட்டினார். அவர்கள் பாராட்டு நான் வளரஉதவியது.

அஜயன் பாலா எழுதிய ‘மர்லன் பிராண்டோ’ புத்தகத்தை படித்த பிறகு தான் மொழி தெரியாத படங்களிலும் நடிக்கலாம் என்பதை தெரிந்து கொண்டேன். தெலுங்கு படங்களில் நடித்து சம்பாதிக்க தொடங்கினேன்.

அதற்கு காரணமான அஜயன் பாலா தொடங்கிய இந்த நூலகத்துக்கு பெரிதாக உதவவேண்டும் என்று நினைக்கிறேன். விரைவில் அதை அறிவிப்பேன்” என்றார்.

தொடர்ந்து வெற்றிமாறன், ராம், ஏ.எல்.விஜய், ரோகிணி உள்பட பலர் பேசினார்கள்.

நிகழ்ச்சி முடிவில், கற்பழித்து கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவுக்கு சத்யராஜ் கண்கள் கலங்க இரங்கல் தெரிவித்தார்.

விழாவில் கலந்துக் கொண்ட அனைவரும் ஆசிபாவுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

மீண்டும் இம்சை அரசனாக முடியாது; ஷங்கர் படத்திலிருந்து விலகிய வடிவேலு

மீண்டும் இம்சை அரசனாக முடியாது; ஷங்கர் படத்திலிருந்து விலகிய வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vadiveluடைரக்டர் ஷங்கர் தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கி வடிவேலு இரு வேடங்களில் நடித்த படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி.

சரித்திர காலத்து படம் என்றாலும் காமெடியாக எடுக்கப்பட்டதால் குழந்தைகள் முதல் அனைவரையும் இப்படம் கவர்ந்தது.

இந்நிலையில் இதே கூட்டணியில் இப்படத்தின் 2ஆம் பாகம் உருவாகவிருந்தது.

இம்சை அரசன் 24ம் புலிகேசி என்று பெயரிடப்பட்டு இதன் பர்ஸ்ட் லுக்கும் வெளியானது.

ஆனால் தற்போது இந்த படத்திலிருந்து விலகுவதாக வடிவேலு அறிவித்துள்ளார்.

எனவே அந்த படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

எனவே வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

இதற்கு பதில் அளித்து நடிகர் சங்கத்துக்கு வடிவேல் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் நடிக்க 1-6-2016-ல் ஒப்புக்கொண்டேன். 2016 டிசம்பருக்குள் படத்தை முடித்து விடுவதாகவும் அதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால் வேறு படங்களில் நடிப்பதை நான் தவிர்த்தேன்.

ஆனால் டிசம்பர் 2016 வரை படப்பிடிப்பை தொடங்காமலேயே காலம் தாழ்த்தினர். ஆனாலும் தயாரிப்பாளர் மற்றும் சினிமா தொழிலின் நலன் கருதி அதன் பிறகும் பல்வேறு தேதிகளில் அந்த படத்தில் நடித்து கொடுத்தேன்.

இந்த நிலையில் என்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்பாளரை எஸ்.பிக்சர்ஸ் (ஷங்கர் பட நிறுவனம்) நிறுவனம் நீக்கியது.

அத்துடன் கெட்ட நோக்கத்தோடு எனது புகழுக்கும், பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தை கொடுத்து அந்த கடிதத்தில் ஏதோ எனக்கு இந்த ஒரு படத்தின் மூலம்தான் சினிமா உலகில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

நான் நடித்து தர மறுத்து இருந்தால் பட நிறுவனம் ஏன் டிசம்பர் 2016-க்குள் புகாரை தரவில்லை.

ஒப்பந்த காலம் முடிந்து ஒரு வருடத்துக்கு பிறகு கெட்ட நோக்கோடு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு ஒப்புக்கொண்ட பிறகு 2016-2017 ஆண்டு காலங்களில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தேன்.

இதனால் எனக்கு பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் ஏற்பட்டது. இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் என்னை வற்புறுத்துவதற்கு முன்பு என்னை நேரில் அழைத்து கருத்து கேட்காதது விதிகளுக்கு முரணானது.

இந்த படத்தில் நாசர் நடிப்பதால் நடிகர் சங்க நலனுக்காக அவரால் செயல்பட முடியாத நிலைமை உள்ளது. இதில் தொடர்ந்து நடித்தால் நான் ஒப்பந்தமாகி உள்ள வேறு படங்கள் பாதிக்கப்படும்.

பொருளாதார குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.”

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார் வடிவேலு.

காலம் கடத்தும் காலா; விரைந்து வரும் விஸ்வரூபம் 2

காலம் கடத்தும் காலா; விரைந்து வரும் விஸ்வரூபம் 2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Viswaroopam 2 may release before Kaala releaseமார்ச் 1 முதல் அதாவது கடந்த 46 நாட்களாக தமிழ் சினிமாவில் எந்த ஒரு புதுப்படமும் ரிலீஸ் ஆகவில்லை.

தமிழ் சினிமாத்துறையில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளை சீராக்க தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் செய்து வருகிறது.

விரைவில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இந்த மாத இறுதிக்குள் வேலை நிறுத்தம் கைவிடப்படும் எனத் தெரிகிறது.
இதனிடையில் சென்சார் செய்யப்படும் தேதியின் அடிப்படையில் புதுப்படங்கள் ரிலீஸுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் பார்த்தால் ரஜினியின் காலா படத்திற்கு முன்பே கமலின் விஸ்வரூபம் 2 படத்திற்கு சென்சார் செய்யப்பட்டு விட்டது.

எனவே காலா ரிலீஸ்க்கு முன்பே விஸ்வரூபம் 2 வெளியாகும் என கூறப்படுகிறது.

ஜீன் மாதம் வரும் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு காலா ரிலீஸ் ஆகும் எனவும் ஒரு பக்கம் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

காலா மற்றும் விஸ்வரூபம் 2 ஆகிய இரண்டு படங்களுக்குமே ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Viswaroopam 2 may release before Kaala release

தமிழர்கள் ரத்தத்தில் ரஜினி ராஜவாழ்க்கை…; பாரதிராஜா கடும் தாக்கு

தமிழர்கள் ரத்தத்தில் ரஜினி ராஜவாழ்க்கை…; பாரதிராஜா கடும் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bharathiraja reaction to Rajinis tweet about Police attackகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.

அப்போது சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என கடந்த 10 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது.

அப்போது, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் போலீசாரை தாக்குவது போன்ற வீடியோ வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஜினி தன் ட்விட்டரில் “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் இருக்கும் காவலர்கள் தாக்கப்படுவது தான் என பதிவிட்டு இருந்தார்.

இதற்கு சீமான் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

தற்போது பாரதிராஜாவும் தன் கண்டனத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அதில்…

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முழு தமிழகமும் ஒரே குரலில் தங்கள் உணர்வுகளை எதிரொலித்த இந்த நேரத்தில், நம் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவையும் அறவழியில் போராடியது.

ஆனால், நம் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு, நம் மீது கத்தி வைத்துப் பதம்பார்க்க நினைக்கிறது ரஜினியின் சமீபத்திய ட்விட்டர் பேச்சு.

நான் அவரைக் கேட்கிறேன்… எது வன்முறையில் உச்சகட்டம் ரஜினி அவர்களே? அறவழியில் போராடிய எம் தமிழர்கள் உங்களுக்கு வன்முறையாளர்களா? தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் பேசும் பேச்சு இது.

தங்களுடைய திரைப்படம் வெளியாகும்போது மட்டும் பூச்சாண்டி காட்டும் ஒரு நடிகனை, தமிழ்த் திரையுலகம் சந்தித்ததே இல்லை. தமிழ்நாட்டிலும் சரி, உலக அளவிலும் சரி… தமிழன் கொட்டிக் கொடுத்த பணத்தில், சேர்த்துவைத்த செல்வத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்தபோது குரல் கொடுத்தீர்களா? நியூட்ரினோவுக்கு எதிராகக் களத்தில் இறங்கிப் போராடினீர்களா? இல்லை, ஓர் அறிக்கையாவது விட்டீர்களா? மீத்தேன் பற்றி ஏதாவது வாய் திறந்தீர்களா?

எதற்கும் வாய் திறக்காத நீங்கள், இன்று காவிரிக்காக ஒன்றுகூடிய தமிழர்களின் ஒற்றுமை உணர்வை வன்முறைக் கலாச்சாரம், இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்கிறீர்களே.

ஓ… இப்போதுதான் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது, நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடகக் காவியின் தூதுவன் என்று! உங்கள் வேஷம் மெல்ல மெல்லக் கலைகிறது. ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள்.

காவிரி பிரச்சினை பற்றி எரிந்தபோது வெந்து செத்தது எங்கள் தமிழினம், சேதமடைந்தது எங்கள் தமிழர் சொத்துகள்.

அங்குள்ள கலைஞர்கள் எல்லாம் ஒன்றுகூடி எதிர்க்குரல் கொடுத்த போதும், அங்குள்ள காவலர்கள் துரத்தி துரத்தி அடித்தபோதும், தமிழ்நாடு பதிவு எண் கொண்ட அனைத்து வாகனங்களையும் அடித்து நொறுக்கியபோதும், வாகன ஓட்டிகளை நிர்வாணப்படுத்தி அடித்தபோதும் வாய் திறக்காத நீங்கள், இன்று தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, தமிழனிடம் உறிஞ்சிய ரத்தத்தில் ராஜ வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, எங்களையே வன்முறையாளர்கள் என்று பட்டம் சுமத்துகிறீர்கள்.

சீருடையில் இருந்தவரும் எங்கள் தமிழன் தான். எங்கோ கூட்டத்தில் அடையாளம் இல்லாத ஒருவன் அல்லது இந்த நிகழ்ச்சியைக் கறைபடுத்த நினைத்த ஒருவன் செய்த செயலுக்கு நாங்கள் வருந்துகிறோம்.
நீங்கள், எங்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம்.

நடந்த போராட்டம் தனி மனிதர்களுக்கானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டுச் சாப்பாட்டிற்கும், உங்கள் வீட்டு குடிதண்ணீருக்கும் சேர்த்துத்தான் எங்கள் வீரத்தமிழ் இளைஞர்கள் பலர், காவல்துறை நடத்திய அடிதடியில் ரத்தம் சிந்தினார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பேசும்போது, எதைப் பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசுங்கள். இல்லையென்றால், எம் தமிழ் மக்களால் நீங்கள் ஓரம்கட்டப்படுவீர்கள். அந்த நாளும் வெகுதூரத்தில் இல்லை என்பதையும் நீங்கள் நன்கு உணர்வீர்கள் என்பதையும் உங்களுக்கு சொல்லிக்கொள்ள நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் பாரதிராஜா.

Director Bharathiraja reaction to Rajinis tweet about Police attack

More Articles
Follows