தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகநாயகனின் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில் ‘உங்கள் நான்’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
கமலை கௌரவிக்க நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் கமல் குறித்து பேசியதாவது…
“சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற பேச்சு எப்போதும் இருக்கிறது.
யார் வேண்டுமானாலும் வரலாம் என இருக்கும்போது சினிமாக்காரர் ஏன் வரக்கூடாது ?
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என நான் மட்டுமல்ல, ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார். கமல், ரஜினி எனும் இரண்டு ஜாம்பவான்கள். அவர்கள் இருவரும் இணைந்தால் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் நல்லது.
அரசியலில் அடுத்த தலைமுறைக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டும் நல்லாட்சி தந்த நீங்கள், உங்களின் தம்பிகள் வரும்போது அவர்களுக்கு வழிவிடுங்கள்” என எஸ்ஏசி பேசினார்.
Director SAC talks about Rajini Kamal and Vijay politics