மார்கழியை யாரும் மார்த்தட்டி உரிமை கொண்டாட முடியாது – ரஞ்சித்

மார்கழியை யாரும் மார்த்தட்டி உரிமை கொண்டாட முடியாது – ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மங்கள இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் வேறுபாடில்லை இரண்டும் மண்சார்ந்தது தான்’ எனத் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், ’மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில், நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட தாரை தப்பட்டை, மேளம், கரகாட்டம் மற்றும் ஒப்பாரி பாடகர்கள் கலந்துகொண்டு மேடையில் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது,

”மார்கழியில் மக்களிசை பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு இன்று மதுரையிலும், நாளை கோவையில் நடத்துகிறோம்.

மேலும் வரும் 24 முதல் 31 ஆம் தேதி வரை 7 நாட்கள் தொடர்ச்சியாக பல்வேறு சபாக்களில் சென்னையில் நடைபெறுகிறது.
நாட்டுப்புற இசைக்கலையை மக்களுக்கானதாக மாற்றுவதற்கான முயற்சியாக இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளோம். மக்களுக்கான இசையை மக்களிடத்தில் கொண்டு செல்கிறோம்.

மார்கழி என்பது தமிழ் மாதம் இதனை யாரும் உரிமை கொண்டாட முடியாது, மங்கள இசையும் நாட்டுப்புற இசையும் நம் மண் சார்ந்தது தான்.

நாட்டுப்புற பாடல்கள் வாழ்வியல் சம்மந்தப்பட்ட தினசரி விசயங்களை இசை வடிவமாக கொண்டுவருவது தான், இதனை சிஸ்டமாக உருவாக்கி வைத்துள்ளோம் தற்போது அதற்கான இடம் கிடைத்துள்ளது. சினிமா இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வாய்ப்பு போன்று மண் சார்ந்த இசைக் கலைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு தான் இந்த மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி.

நாட்டுப்புற இசையை வேறொரு தளத்திற்கு கொண்டுசெல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது தான் இந்த நிகழ்வுக்கு கிடைத்த வரவேற்பு. இந்த நிகழ்வை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கும் போது ஆதரவு கிடைக்குமா என எண்ணிய நிலையில், மக்களிடத்தில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது தென் தமிழக ஒப்பாரி பாடல் கலைஞர்களை மேடையில் ஏற்ற வேண்டிய வாய்ப்பை இந்த நிகழ்ச்சியில் வழங்கியுள்ளோம்.

நாட்டுப்புற இசைகளை மேடை ஏற்ற அரசு தரப்பு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம், மக்களிடம் கலையை ஜனநாயக படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துகிறோம். சென்னை சங்கமம் மீண்டும் தொடங்கினால் பல கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவே அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,

நாட்டுப்புற கலைகளை ஊக்கப்படுத்த வேண்டும், கலைகளின் தன்மையை புரிந்து வாய்ப்பு அளித்தால் இந்த கலை அடுத்த பரிமாணத்தை அடையும். சமூக வலைதளங்களின் மூலமாக உருவாகும் வரவேற்பால் கலைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்துள்ளது. நாட்டுப்புற கலைகளில் இளம் கலைஞர்களை உருவாக்க கல்லூரிகளில் வாய்ப்பும், போதிய விழிப்புணர்வும் வழங்க வேண்டும்”என்றார்.

நிகழ்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர் சிறப்பு விருந்தினராக சு.வெங்கடேசன் MP, சமூக செயல்பாட்டாளர் எவிடன்ஸ்கதிர், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் கலந்துகொண்டனர்.

Director Ranjith speech at Margazhiyil Makkal isai at Madurai event

FIRST TIME IN WORLD ‘சுவை ஆறு’ குறும்பட தொடரை இயக்கும் ஆறு இயக்குநர்கள்

FIRST TIME IN WORLD ‘சுவை ஆறு’ குறும்பட தொடரை இயக்கும் ஆறு இயக்குநர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குறும்பட படைப்பாளிகள் சங்கத்தின் சென்னை மண்டல கூட்டம் சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இயக்குநர் பேரரசு, நடிகர் ஸ்ரீராம், நடிகை ‘கம்பம்’ மீனா, ஊடகவியலாளர் மணவை பொன். மாணிக்கம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவுக்கு வருகை தந்த பார்வையாளர்களையும், குறும்பட படைப்பாளிகளையும் குறும்பட படைப்பாளிகள் சங்கத்தின் மாநில செயலாளரான பென்னெட் ஜே ராக்லாண்ட் வரவேற்று, சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் சென்னை மண்டல குழு படைப்பாளிகள் சங்க தலைவராக கணேஷ் ராஜ், துணை தலைவராக திருக்குமரன், செயலாளராக கே. வி. ஆர். கோபி, துணை செயலாளராக சிவராம், பொருளாளராக ஜெயசூர்யா ஒருங்கிணைப்பாளராக செந்தில் குமரன் நிஷாந்த் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.

விழாவில் குறும்பட படைப்பாளிகள் சங்க செயலாளர் பென்னட் ஜே ராக்லாண்ட் பேசுகையில்…

”குறும்பட படைப்பாளிகள் சங்கம் குறும்பட படைப்பாளிகளை ஒருங்கிணைக்கும் பணியை முதன்மையாக கருதுகிறது. விரைவில் குறும்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடங்கி, அதன் மூலம் குறும்பட படைப்பாளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

குறும்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் குறும்பட படைப்பாளிகள் சங்கம் இணைந்து உருவாக்கிய படைப்புகளை வெளியிடுவதற்காக எதிர் வரும் தமிழ் புத்தாண்டு முதல் புதிய டிஜிட்டல் தளம் தொடங்கப்படும் .

குறும்பட படைப்பாளிகள் சங்கத்தின் ஒரு அங்கமான பி ஜே ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் ‘சுவை ஆறு’ என்ற பெயரில் குறும்பட தொடர் ஒன்று தயாரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. உலகிலேயே முதன் முதலாக தயாராகும் குறும்பட தொடர் இது .

தமிழில் தயாராவது நம் அனைவருக்கும் பெருமை. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.” என்றார்.
இதனைத் தொடர்ந்து ‘சுவை ஆறு’ என்ற குறும்பட தொடரை இயக்கும் ஆறு இயக்குநர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

விழாவில் இயக்குநர் பேரரசு பேசுகையில்,” முழுநீள திரைப்படங்களை இயக்குவதை விட குறும்படங்களை இயக்குவது சவாலானது. குறும்படங்கள் என்பது சூரிய ஒளியை, ஒரு குவி ஆடியில் செலுத்தி, அதனூடாக ஒரு தாளை எரிய விடுவதற்கு சமமானது.

வீரியமான படைப்புகள் தான் குறும்படங்கள். அறிஞர் ஒருவர் ஒரு பக்கத்திற்கும் மேலாக கடிதம் ஒன்றை எழுதி விட்டு, அடிக்குறிப்பாக எனக்கு சிந்திக்க நேரமில்லை. அதனால் சுருக்கமாக எழுத முடியவில்லை என்று எழுதினார். அதைப் போன்றதுதான் குறும்படங்கள். கால அவகாசத்தில் குறைவாக இருந்தாலும் படைப்பாளி பார்வையாளனுக்கு கடத்த வேண்டிய விசயத்தை துல்லியமாக சொல்வதுதான் குறும்படம். குறும்பட படைப்பாளிகள் சங்கத்திற்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

நடிகர் ஸ்ரீராம் பேசுகையில…

” குறும்பட படைப்பாளிகள் சங்கம் போன்ற புதிய முயற்சிகளுக்கு என்னுடைய ஆதரவு என்றும் இருக்கும். சின்னத்திரை தொடர், வலைதள தொடர், இணையத் தொடர் என்பதைப்போல் புதிதாக அறிமுகமாகவிருக்கும் குறும்பட தொடருக்கும் விரைவில் மக்களின் ஆதரவு கிடைக்கும். ‘சுவை ஆறு’ என்ற குறும்பட தொடரை இயக்கும் இயக்குநர்கள் உள்ளிட்ட படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை கம்பம் மீனா பேசுகையில்…

”குறும்பட படைப்பாளிகள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள இயக்குநர்கள் தங்களது குறும்படங்களில் எமக்கு வாய்ப்பளித்தால், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக நடிக்க தயாராக இருக்கிறேன். திரு பென்னட் அவர்களின் சீரிய முயற்சியில் தொடங்கப்பட்டு இருக்கும் இந்த குறும்பட படைப்பாளிகள் சங்கம் மென்மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.” என்றார்.

இதனைத் தொடர்ந்து குறும்பட படைப்பாளிகள் சங்கத்தின் மாநில செயலாளர் விழாவிற்கு வருகை தந்திருந்த குறும்பட இயக்குநர்கள், நடிகர்கள், கலை இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், குறும்பட ஆர்வலர்கள்… ஆகியோரிடம் சங்கத்தின் செயல்பாடு குறித்தும், சங்கத்தின் எதிர்கால திட்டம் குறித்தும் விளக்க உரை நிகழ்த்தினார்.

First time in world Series for Short films

இனிமே உங்க சாய்ஸ்தான் ரிப்பீட்டு.; கிறிஸ்மஸ் விருந்தாக சிம்புவின் ‘மாநாடு’

இனிமே உங்க சாய்ஸ்தான் ரிப்பீட்டு.; கிறிஸ்மஸ் விருந்தாக சிம்புவின் ‘மாநாடு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதி வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்த மாநாடு படம் வெளியானது.

இந்த படம் ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் காமெடி என சரிவிகித கலவையாக, டைம் லூப்பில் நகரும் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகி இருந்தது. ரசிகர்கள் இந்த படத்திற்கு ஏகோவித்த ஆதரவை அளித்தனர்.

தற்போது மாநாடு படத்தை சோனி லைவ் நிறுவனம் டிசம்பர் 24ஆம் தேதி வெளியிட தயாராகி வருகிறது..

நாயகன் அப்துல் காலிக் தொடர்ச்சியாக டைம் லூப்பில் மாட்டிகொண்ட பின்னர் வாழ்க்கையையே புரட்டிப்போடும் நிகழ்வுகளில் கொண்டுபோய் அவரை சிக்கவைக்கிறது.

நீதிக்கு புறம்பான செயல்களை செய்ய முற்படும்போதும் நம்முடைய

சுயநலத்துக்காக அழிவுகரமான செயல்களில் ஈடுபடும்போதும் இந்த உலக விதிகள் எப்படி மீறப்படுகின்றன என்பதை மையப்படுத்தி மாநாடு படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது..

நேர்மையான , ஊழலுக்கும், குற்றங்களுக்கும் எதிராக போராடும் மனிதராக அப்துல் காலிக் கதாபாத்திரத்தில் சிம்பு அற்புதமாக நடித்திருந்தார். இந்தப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், ஓய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி, கருணாகரன், அஞ்சனா கீர்த்தி ஆகியோர் மிக முக்கியமான பங்களிப்பை தந்திருந்தனர்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையும் ரிச்சர்டு எம்.நாதனின் இசையும் படத்திற்கு பரபரப்பை கூட்ட, அந்த விறுவிறுப்பை எந்தவித குழப்பமும் இல்லாமல் பார்வையாளர்களுக்கு கடத்தி இருந்தார் எடிட்டர் கே.எல்.பிரவீண்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான இந்தப்படம் வரும் டிச-24ல் சோனி லைவ்வில் ஒளிபரப்பாகிறது.

சயின்ஸ் பிக்சன் கதையில், டைம் லூப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு படத்தை சோனி லைவ் நிறுவனம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி ஒளிபரப்ப ஆயத்தமாகியுள்ளது.

Maanaadu OTT release date and time is here

உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’ பட டப்பிங் அப்டேட்

உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’ பட டப்பிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் “நெஞ்சுக்கு நீதி”.

Zee Studios மற்றும் அஜித்தின் ‘வலிமை’ பட தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க ராகுல் அவர்களின் ROMEOPICTURES இப்படத்தை வெளியிடுகின்றது.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களிலும், வலைத் தளங்களிலும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியது, உதயநிதி ஸ்டாலின் இப்படத்திற்காக இன்று டப்பிங் செய்தார்.

இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார்.

முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இசை – திபு நினன் தாமஸ்
ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்
படத்தொகுப்பு – ரூபன்
கலை – வினோத் ராஜ்குமார், லால்குடி இளையராஜா
சண்டைப்பயிற்சி – Stunner சாம்

“நெஞ்சுக்கு நீதி” படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

Udhay’s Nenjukku Needhi film update

கட்டாயம் வந்திருப்பேன்.. கவலைப்படாதே கண்ணா..; ரஜினி வீடியோ வைரல்

கட்டாயம் வந்திருப்பேன்.. கவலைப்படாதே கண்ணா..; ரஜினி வீடியோ வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தை தாண்டியும் ரஜினிகாந்துக்கு இந்தியளவில் ரசிகர்கள் உள்ளனர்.

எனவே தான் இவர் ஒரு இந்திய சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படுகிறார்.

பிரதமர் மோடி முதல் பாலிவுட் கான்கள் வரை ரஜினியை தலைவா என்றே அழைக்கின்றனர்.

இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த ஒரு ரசிகரின் மகள் சௌமியாவுக்கு உடல்நிலை சரியில்லை என ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் ரஜினியை சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே தன் ரசிகருக்கு வீடியோ மூலம் பேசியுள்ளார் ரஜினிகாந்த்.

அந்த வீடியோவில்… ‛‛சௌமியா கண்ணா எப்படி இருக்க,? கவலைப்படாத.. தைரியமாக இரு.. கொரோனாவால் என்னால் நேரில் வர முடியவில்லை, எனக்கும் சற்று உடல்நலம் சரியில்லை. இல்லையென்றால் கட்டாயம் வந்திருப்பேன். அழகா இருக்க.. நல்லா சிரிக்கிற… உனக்காக ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன். எல்லாம் சரியாகிவிடும்” என ஆறுதலாக பேசியுள்ளார் ரஜினிகாந்த்.

இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

தலைவா.. நீங்க நல்லா இருக்கனும் எனவும் வாழ்த்தி வருகின்றனர்.

Rajinikanth’s video message to his little fan

ஹர்பஜன்சிங் இர்ஃபான் பதானை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஸ்ரீசாந்த்

ஹர்பஜன்சிங் இர்ஃபான் பதானை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஸ்ரீசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நடிக்க கிரிக்கெட் உலகின் பல பிரபலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பிரெண்ட்ஷிப் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் ஹர்பஜன் சிங். பின்னர் சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

இவரைத் தொடர்ந்து இர்பாஃன் பதானும் விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்துள்ளார்.

தற்போது இவர்களின் வரிசையில் இணைந்துள்ளார் அடுத்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாரம் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.

இவர் ஏற்கெனவே மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட சில மொழி படங்களில நடித்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Cricketer Sri Santh to debut in tamil film

More Articles
Follows