தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் பெண்கள் முன்னேறி வந்தாலும் இன்னும் உலகளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள படங்களின் வரிசையில் இணைந்துள்ளது ‘பென் விலை வெறும் ரூபாய் 999’.
வரதராஜ் இயக்கத்தில். ரெயின்போ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ராஜ்கமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
இவருடன் பல அறிமுக நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ஆக்சன் ரியாக்சன் நிறுவனம் சார்பாக நடிகர் ஜெனீஷ் வெளியிடுகிறார்.
இந்த படத்தின் தலைப்பு, கதைக்களம் பெண்களுக்கு எதிராக இருப்பதாக பெண்கள் அமைப்புகள் குற்றச்சாட்டி இருந்தன.
இந்த சர்ச்சை குறித்து பட இயக்குனர் விளக்கமளித்து இருந்தார்.
அதில், “இந்த படத்தை முழுக்க முழுக்க ஆபாசமின்றி எடுத்துள்ளோம். பெண்களுக்கு ஆதரவாகவும், எச்சரிக்கை தரும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக செயல்படும் ஒரு கும்பலை தோலூரிக்கும் படமாக இது அமைந்துள்ளது என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று ஜனவரி 3ஆம் தேதி மாலை இப்படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது டிரைலர் வெளியிடப்பட்டது.
இந்த விழாவில் நடிகர்கள் போஸ் வெங்கட், விஜய் டிவி ஜெயச்சந்திரன், இயக்குனர் பேரரசு, ராஜ்கமல் மனைவியும் நடிகையுமான லதா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
வழக்கம்போல சமூக அவலங்களை கண்டு பொங்கி பேசினார் பேரரசு.
அவர் பேசியதாவது…
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம். மக்கள் தங்கள் கவலைகளை மறந்து சிரித்து மகிழ சினிமாவிற்கு வருகின்றனர்.
ஆனால் நாங்கள் (படைப்பாளிகள்) கருத்து சொல்ல வேண்டியிருக்கு. ஏனென்றால் நாட்டின் நிலைமை அப்படியுள்ளது.
ஒரு பக்கம் பெண்கள் வன்கொடுமை பற்றி பேசுகிறோம். ஆசிரியர்களே மாணவிகளிடம் தவறாக நடக்கின்றனர். இது வேதனைக்குரியது.
அதே சமயம் மற்ற பக்கம் சில பெண்களே ஆபாசமாக நடந்துக் கொள்கின்றனர். டிக்டாக்கில் 2 பெண்கள் அடித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு நிறைய பேர் கமெண்டு போடுகின்றனர்.
மயிரு.. (மேடையில் சொல்ல கூடாது.. ஆனால்..) அவங்க எல்லாம் சீ… பொம்பளைங்களா.? மோசமாக பேசிக் கொள்கிறார்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் அவரிடம் சொல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் வேறு வழியில்லை.
அதுபோல் செல்போனில் டாக் டைம் குறைக்க வேண்டும். மீன் விற்கும் பொம்பள.. பூ விற்கும் பொம்பள எல்லோரும் போனில் பேசிக் கொண்டே வியாபாரம் செய்கின்றனர்.
செல்போனில் எவ்வளவு பேசினாலும் ஒரே ரேட் தான். அன்லிமிட் டாக்டைம் இருக்கிறது. இதுவே 1 மணி நேரத்திற்கு இவ்வளவு 10 நிமிசத்திற்கு இவ்வளவு என இருந்தால் பைசா காலியாகிவிடும் என போன் பேசும் நேரத்தை குறைப்பார்கள்…
செல்போன்களால் நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனாலும் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்டுகிறார்கள்” என பேரரசு பேசினார்.
Director Perarasu controversy speech at PenVilai Verum 999 Rubai Mattume audio launch