ம….ரு பொம்பளைங்க… முதல்வர் பதவி விலகிடுவாரு போல..; ‘பென் விலை வெறும் 999’ விழாவில் பேரரசு பேச்சு

ம….ரு பொம்பளைங்க… முதல்வர் பதவி விலகிடுவாரு போல..; ‘பென் விலை வெறும் 999’ விழாவில் பேரரசு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் பெண்கள் முன்னேறி வந்தாலும் இன்னும் உலகளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள படங்களின் வரிசையில் இணைந்துள்ளது ‘பென் விலை வெறும் ரூபாய் 999’.

வரதராஜ் இயக்கத்தில். ரெயின்போ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ராஜ்கமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் பல அறிமுக நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ஆக்சன் ரியாக்சன் நிறுவனம் சார்பாக நடிகர் ஜெனீஷ் வெளியிடுகிறார்.

இந்த படத்தின் தலைப்பு, கதைக்களம் பெண்களுக்கு எதிராக இருப்பதாக பெண்கள் அமைப்புகள் குற்றச்சாட்டி இருந்தன.

இந்த சர்ச்சை குறித்து பட இயக்குனர் விளக்கமளித்து இருந்தார்.

அதில், “இந்த படத்தை முழுக்க முழுக்க ஆபாசமின்றி எடுத்துள்ளோம். பெண்களுக்கு ஆதரவாகவும், எச்சரிக்கை தரும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக செயல்படும் ஒரு கும்பலை தோலூரிக்கும் படமாக இது அமைந்துள்ளது என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று ஜனவரி 3ஆம் தேதி மாலை இப்படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது டிரைலர் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் நடிகர்கள் போஸ் வெங்கட், விஜய் டிவி ஜெயச்சந்திரன், இயக்குனர் பேரரசு, ராஜ்கமல் மனைவியும் நடிகையுமான லதா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

வழக்கம்போல சமூக அவலங்களை கண்டு பொங்கி பேசினார் பேரரசு.

அவர் பேசியதாவது…

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம். மக்கள் தங்கள் கவலைகளை மறந்து சிரித்து மகிழ சினிமாவிற்கு வருகின்றனர்.

ஆனால் நாங்கள் (படைப்பாளிகள்) கருத்து சொல்ல வேண்டியிருக்கு. ஏனென்றால் நாட்டின் நிலைமை அப்படியுள்ளது.

ஒரு பக்கம் பெண்கள் வன்கொடுமை பற்றி பேசுகிறோம். ஆசிரியர்களே மாணவிகளிடம் தவறாக நடக்கின்றனர். இது வேதனைக்குரியது.

அதே சமயம் மற்ற பக்கம் சில பெண்களே ஆபாசமாக நடந்துக் கொள்கின்றனர். டிக்டாக்கில் 2 பெண்கள் அடித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு நிறைய பேர் கமெண்டு போடுகின்றனர்.

மயிரு.. (மேடையில் சொல்ல கூடாது.. ஆனால்..) அவங்க எல்லாம் சீ… பொம்பளைங்களா.? மோசமாக பேசிக் கொள்கிறார்கள்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் அவரிடம் சொல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் வேறு வழியில்லை.

அதுபோல் செல்போனில் டாக் டைம் குறைக்க வேண்டும். மீன் விற்கும் பொம்பள.. பூ விற்கும் பொம்பள எல்லோரும் போனில் பேசிக் கொண்டே வியாபாரம் செய்கின்றனர்.

செல்போனில் எவ்வளவு பேசினாலும் ஒரே ரேட் தான். அன்லிமிட் டாக்டைம் இருக்கிறது. இதுவே 1 மணி நேரத்திற்கு இவ்வளவு 10 நிமிசத்திற்கு இவ்வளவு என இருந்தால் பைசா காலியாகிவிடும் என போன் பேசும் நேரத்தை குறைப்பார்கள்…

செல்போன்களால் நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனாலும் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்டுகிறார்கள்” என பேரரசு பேசினார்.

Director Perarasu controversy speech at PenVilai Verum 999 Rubai Mattume audio launch

ஜீவா பிறந்தநாளில் தங்கள் 91வது பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சூப்பர் குட் பிலிம்ஸ்

ஜீவா பிறந்தநாளில் தங்கள் 91வது பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சூப்பர் குட் பிலிம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்தியாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் பி செளத்ரி தயாரிக்கும் 91-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜீவா.

இந்த நிறுவனம் ஜீவாவின் குடும்ப நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

“வரலாறு முக்கியம்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ளதாம்.

நடிகர் ஜீவாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று (4 ஜனவரி 2022) வெளியிடப்பட்டது.

ஜீவா நடித்த “சிவா மனசுல சக்தி” படத்தினைப் போன்று இப்படத்தினை எதிர்பார்க்கலாம் என்கிறது படக்குழு.

அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் சசியின் உதவியாளராக பணியாற்றியவர்.

நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப்புகழ்) கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரக்யா நாகரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, TSK, E ராமதாஸ், லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்ரீகாந்த் NB (எடிட்டிங்), ராஜு சுந்தரம்-பிருந்தா (நடன அமைப்பு), மதன் கார்க்கி, சந்தோஷ் ராஜன் (பாடலாசிரியர்கள்), R. சக்தி சரவணன் (ஸ்டன்ட் டைரக்ஷன்), மோகன் (கலை), வாசுகி பாஸ்கர் (ஆடை வடிவமைப்பு ), எஸ்.ஏ.சண்முகம் (மேக்கப்), மற்றும் சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு) ஆகியோர் இப்படத்தின் மற்ற தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர்.

சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரடக்‌சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Jiiva’s next film is titled Varalaru Mukkkiyam

ஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமியுடன் இணைந்த ‘மலையாளி’ குஞ்சாக்கோ போபன்

ஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமியுடன் இணைந்த ‘மலையாளி’ குஞ்சாக்கோ போபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரவிந்த்சாமி மற்றும் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் ‘ரெண்டகம்’ திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் உருவாகி வருகிறது.

இத்திரைப்படத்தை ஆர்யாவின் ஷோ பீப்புள் நிறுவனமும் ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தாயாரித்து வருகிறது. டி.பி.பெலின் இயக்கியிருக்கிறார்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் ‘ரெண்டகம்’ படத்தில் அரவிந்தசாமி ஹீரோவாக நடித்து வருகிறார்.

மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் தமிழில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது .

இவர் ஷாலினி உடன் இணைந்து நடித்த அனியத்திப்ராவு என்ற திரைப்படம் தான் (விஜய்யின்) காதலுக்கு மரியாதை என்று தமிழில் தயாரிக்கப்பட்டது.

‘ரெண்டகம்’ திரைப்படத்தில் அரவிந்த்சாமி , குஞ்சாக்கோ போபன் இவர்களுடன் ஜாக்கி ஷ்ராப், ஈஷா ரெப்பா, ஆடுகளம் நரேன், தீப்தி சதி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

எழுத்து சஞ்சீவ் மற்றும் சசிகுமாரன் சிவகுரு, இசை A H காஷிஃப், ஒளிப்பதிவு கௌதம் சங்கர், படத்தொகுப்பு அப்பு N பட்டாத்தரி, கலை இயக்கம் சுபாஷ் கருன்

தொழில்நுட்பக்குழு :
இயக்கம் : T .P.பெலின்
தயாரிப்பு : ஆர்யா , ஷாஜி நடேசன்
எழுத்து : S சஞ்சீவ்
இணை எழுத்து /இணை இயக்கம் – சசி குமரன்
இசை – A H காஷிஃப்
ஒளிப்பதிவு – கெளதம் ஷங்கர்
படத்தொகுப்பு – அப்பு N பட்டாத்திரி
கலை இயக்கம் – சுபாஷ் கருண்
உடைகள் – ஸ்டெப்பி சேவியர்
ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர்
படங்கள் – ரோஷ்குமார்
சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா
நடனம் – சஜ்னா நஜாம்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

Arya to produce Tamil / Malayalam bilingual film with Arvindswamy and Kunchako bopan

‘ரைட்டர்’ டைரக்டர் பிராங்ளின் ஜேக்கப்பின் அடுத்த படத்தை தயாரிக்கும் லலித் குமார்

‘ரைட்டர்’ டைரக்டர் பிராங்ளின் ஜேக்கப்பின் அடுத்த படத்தை தயாரிக்கும் லலித் குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ‘ரைட்டர்’ படத்தை இயக்கியவர் பிராங்ளின் ஜேக்கப்.

இப்படத்தை இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்திருந்தது.

தற்போது ‘ரைட்டர்’ வெற்றியைத் தொடர்ந்து லலித் குமார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரின் கீழ் தயாரிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் பிராங்ளின் ஜேக்கப்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ.

அதில்… நீலம் புரொடக்சனின் ‘ரைட்டர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து திறமையான இயக்குனருடன் அடுத்த படத்தில் கையெழுத்திட்டதில் மிகுந்த சந்தோஷம்’ என தெரிவித்துள்ளது.

Writer director next with Seven screen studio

‘அறியா திசைகள்’.. அப்பாவை போல படம் இயக்கி நடிக்கும் சமுத்திரக்கனி மகன் !

‘அறியா திசைகள்’.. அப்பாவை போல படம் இயக்கி நடிக்கும் சமுத்திரக்கனி மகன் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி யின் மகன் ஹரி விக்னேஷ்வரன்.

“அறியா திசைகள்” எனும் 40 நிமிட குறும்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார்.

வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரி விக்னேஷ்வரன்.

இளைஞனாக நடிகர் – இயக்குனருமான சமுத்திரக்கனி யின் மகன் ஹரி விக்னேஷ்வரன் நடித்து இந்த குறும்படத்தை எழுதி இயக்கி உள்ளார்.

மிகவும் புத்திசாலித்தனமான கதை களம். நறுக்கிய வசனம். இசை கூடுதல் பலம்.

“அறியா திசைகள்” பலரின் பாராட்டுகளைப் பெற்றதுடன் சமூகவலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Samuthirakani son Hari Vigneshwaran’s Short Film Ariya Thisaigal released

பூஜை போட்டு படத்தை தொடங்கிய ‘வாத்தி’ தனுஷ் – ஜிவி பிரகாஷ்

பூஜை போட்டு படத்தை தொடங்கிய ‘வாத்தி’ தனுஷ் – ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது அடுத்த படத்தின் அறிவிப்பை சில தினங்களுக்கு முன் வெளியிட்டார் நடிகர் தனுஷ். இந்த படத்திற்கு வாத்தி என டைட்டில் வைத்துள்ளனர்.

தெலுங்கில் சார் என டைட்டில் வைத்துள்ளனர்.

இப்படம், தமிழ் , தெலுங்கு, ஆங்கிலம் என மொழிகளில் உருவாக இருக்கிறது. வெங்கி அட்லூரி இப்படத்தினை இயக்கவிருக்கிறார்.

சம்யூக்தா இப்படத்தின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்கவிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஹைதராபாத்தில் துவங்கப்பட்டது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

தனுஷின் முதல் நேரடி தெலுங்கு படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Actor Dhanush in next film is titled Vaathi

More Articles
Follows