சினிமா பாடல் பட்ஜெட்டில் மகிழ்ச்சி-யின் 8 பாடல்களை தயாரித்த ரஞ்சித்

சினிமா பாடல் பட்ஜெட்டில் மகிழ்ச்சி-யின் 8 பாடல்களை தயாரித்த ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Pa Ranjith Produced Magizhchi album in huge budgetஇயக்குனர் பா.இரஞ்சித் திரைப்படங்களை இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் இயங்கி வருகிறார்.

சமீபத்தில் வெளியாகி வெற்றி படமாகிய “பரியேறும் பெருமாள் ” படத்தை தயாரித்ததோடு தனது அடுத்த படத்தை “இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு” என்ற பெயரில் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் தனது கேஸ்ட்லெஸ் இசைக்குழுவினர் இசையமைத்த பாடலை இயக்கியுள்ளார்.

நடன இயக்குனர் சாண்டி யின் நடனத்தில் கேஸ்ட்லெஸ் இசைக்குழுவினரை நடிக்கவைத்திருக்கிறார்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பு சினிமா படத்தின் பாடலுக்கு செலவாகும் பொருட்ச்செலவில் படமாக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி என்று துவங்கும் இந்த பாடலில் நடிகர் கலையரசன், லிங்கேஷ் , ஹரி, சாண்டி மற்றும் குழுவினர் பங்குபெற்றுள்ளனர்.

மகிழ்ச்சி ஆல்பத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் வெளியாகியிருக்கிறது.

Director Pa Ranjith Produced Magizhchi album in huge budget

காவல் துறை உங்கள் நண்பனுக்கு குரல் கொடுக்கும் ஹரிசரண்

காவல் துறை உங்கள் நண்பனுக்கு குரல் கொடுக்கும் ஹரிசரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Haricharan to trill a song for Kaval Thurai Ungal Nanbanஒரு திறமையான பாடகரால் மட்டுமே பாடலின் தன்மையை மேலோக்கி கொண்டு செல்ல முடியும்.

இதை பல முன்னோடிகள் செய்திருப்பதால் மக்களும் தங்கள் இசை ஞானத்தை வளர்த்து பாடகர்களையும் பாடலாசிரியர்களையும் பாராட்டும் அளவிற்க்கு வளர்ந்து விட்டனர்.

இந்த லிஸ்டில் பாடகர் ஹரிசரண்னின் குரலையும், பாடல்களையும் ரசிப்பதற்கென்று தனி பட்டாளம் உள்ளது.

தனது ரசிகர்களை பாடல்கள் மூலம் மகிழ்விக்கும் ஹரிச்சரண் தனது அடுத்த பாடலை “காவல் துறை உங்கள் நண்பன்” என்ற படத்திற்க்காக பாடியுள்ளார்.

“ராணி தேனீ” என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்பாடலை கதைக்குப் பொருத்தமாக இசையமைத்திருக்கிறாராகள் இசையமைப்பாளர்கள் ஆதித்யா- சூர்யா.

இந்த பாடலுக்கு வரிகள் எழுதியது ஞானக்குமரவேல்.

நடிகர் சுரேஷ் ரவி மற்றும் நடிகை ரவீனா ரவி நடித்திருக்கும் “காவல் துறை உங்கள் நண்பன்” , காவலருக்கும் -டெலிவரி executive உறவை பற்றி பேசும்.

காவல்துறை உங்கள் நண்பன் திரைப்படத்தை RDM இயக்க , பி.ஆர்.டாக்கிஸ் மற்றும் வைட் மூன் டாக்கிஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

Haricharan to trill a song for Kaval Thurai Ungal Nanban

டூ பீஸ் படங்களை வெளியிட்டு இளைஞர்களை ஹாட்டாக்கிய ஹன்சிகா

டூ பீஸ் படங்களை வெளியிட்டு இளைஞர்களை ஹாட்டாக்கிய ஹன்சிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

CC7AEEFC-76BD-41BE-941F-B2D1F80BD23Eதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருப்பவர் ஹன்சிகா.

ஆனால் சமீப காலமாக வாய்ப்பில்லாமல் இருக்கிறார்.

ஆனால் அதே சமயம் மிகவும் பரபரப்பாக பேசப்படும் மகா படத்தை நம்பியிருக்கிறார். இதில் ஹன்சிகாவின் போஸ்டர்கள் அசத்தலாக உள்ளது.

இந்நிலையில் அவர் சுற்றுலா சென்ற இடத்தில் எடுத்த மிகவும் ஹாட்டான (ஜட்டி மற்றும் ப்ரா போன்ற டூ பீஸ்) போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

அவை சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பட வாய்ப்புக்காக ஹன்சிகா வெளியிட்டு இருக்கலாம் என கூறப்பட்டது.

ஆனால் அதை மறுத்து ஹன்சிகா, தனது போன் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் ஹக் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ராம்சரணுக்கு மட்டும் ஓகே சொன்ன நயன்தாரா? கோபத்தில் கோலிவுட்

ராம்சரணுக்கு மட்டும் ஓகே சொன்ன நயன்தாரா? கோபத்தில் கோலிவுட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ram charan and nayantharaலேடி சூப்பர் ஸ்டார் என அன்பாக அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவரின் கால்ஷீட்டுக்கு கோலிவுட்டே தவம் கிடக்கிறது.

தனக்கு பிடித்த படங்களை ஒப்புக் கொண்டு நடித்தாலும் அப்பட விளம்பர நிகழ்ச்சிகளில் எதுவும் கலந்துக் கொள்ள மாட்டேன் என்ற கொள்கையுடன் வாழ்ந்து வருகிறார் இவர்.

இந்நிலையில் தற்போது அந்த கொள்கையை ராம்சரண் தயாரிக்கு படத்திற்காக காற்றில் பறக்க விட்டுள்ளாராம்.

சீரஞ்சீவி நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’.

இதில் அமிதாப் பச்சன், தமன்னா, விஜய்சேதுபதி, ஜெகபதி பாபு, ஹூமா குரேஷி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்துடன் நயன்தாராவும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி ஹீரோவுமான ராம்சரண் தான் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படம் மிகப்பெரிய பட்ஜெட் என்பதால், படத்தின் புரோமோஷனையும் பிரம்மாண்டமாக செய்ய உள்ளதாம் படக்குழு.

எனவே படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாம்.

இது தொடர்பாக நயன்தாராவிடம் ராம்சரண் பேச, அவரும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

நாம் என்னதான் தலை கீழாக நின்றாலும் நம் பட விளம்பரங்களுக்கு நயன்தாரா முக்கியத்துவம் தருவதில்லையே என்ற கோபத்தில் உள்ளதாம் கோலிவுட் சினிமா.

சர்வதேச திரைப்பட விருதுகளை குவிக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’

சர்வதேச திரைப்பட விருதுகளை குவிக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Otrai Panai Maram movie gets International recognitionநல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும்; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருப்பவர் ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல்.

இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார்.
தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார்.

‘போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இப்படம், சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் முகம் கொடுக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக உருவாக்கி இருக்கிறார்கள்.

யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் உங்களை அழைத்துச் சென்று, ஈழத்தில் கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழ வைத்து வதைத்து விடும் அளவிற்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படத்தை தயாரித்தது குறித்து எஸ்.தணிகைவேல் கூறும்போது…

‘ஒற்றைப் பனை மரம்’ திரைப்படத்தை தயாரித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை இப்படம் கண்டிப்பாக கொடுக்கும். நான் தயாரித்ததில் கிடைத்த மகிழ்ச்சி, நீங்கள் பார்க்கும் போது உங்களுக்கு புரியும்’ என்றார்.

இப்படம் 37 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 12 விருதுகளையும் இப்படம் குவித்திருக்கிறது.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அஷ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார். அவரது இசை தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே வைத்து இசையமைத்திப்பது படத்திற்கு ஒரு உயிரோட்டமாக அமைகிறது.

சிறந்த இயக்குனர் விருது பெற்ற மண் பட இயக்குனர் புதியவன் ராசையா இயக்கத்தையும், தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய பாத்திரங்களாக புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி , மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

Otrai Panai Maram movie gets International recognition

Otrai Panai Maram movie gets International recognition

இந்தியாவின் முதல் தேசிய அளவிலான பெண்கள் கட்சி உதயம்

இந்தியாவின் முதல் தேசிய அளவிலான பெண்கள் கட்சி உதயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Indias First National Level Womens Party Launchedஆண்களின் ஆதிக்கம் நிறைந்த அரசியல் கட்சிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படாமல் இருப்பதை உணர்ந்த மருத்துவர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் ஸ்வேதா ஷெட்டி, 36, ‘தேசிய பெண்கள் கட்சி (NWP)’ யைத் துவங்கி இனி வரும் தேர்தல்களில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறார்.

முழுவதும் பெண்களை மையப் படுத்தி, பெண்களுக்காகவே துவங்கப்பட்ட நாட்டின் முதல் தேசியக் கட்சியான ‘தேசிய பெண்கள் கட்சி’ கடந்த டிசம்பர் 18, 2018 – இல் புதுடெல்லியில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கட்சியின் தலைமைப் பொறுப்பேற்று இருக்கும் நிறுவனர், மருத்துவர், சமூக செயற்பாட்டாளர் மற்றும் பெண்ணியவாதி ஸ்வேதா ஷெட்டி, இந்தக் கட்சி இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க முன்னெடுப்பு.

பாராளுமன்றத்தில் பெண்களுக்கு சமஉரிமை பெற்றுத் தருவதே எங்கள் பிரதான நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
ஊடகங்களின் ஒத்துழைப்பு மற்றும் உதவியின் மூலம் நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு, அவர்கள் அரசியல் தளத்தில் தீவிரமாக செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்க பெண்கள் தேசிய கட்சி கடமைப்பட்டுள்ளது.

பெண்கள் தேசிய கட்சியின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியை ஒவ்வொருவருக்கும் சரியான முறையில் கொண்டு சேர்ப்பதற்கும், வாழ்த்துகளைப் பெறுவதற்குமே இந்த சந்திப்பு இப்பொழுது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்காக, முக்கியமாக உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்களுக்காக, தங்கள் நல வாழ்விற்கு ஏதேனும் உதவி கிடைக்காதா என எதிர்பார்த்து ஒவ்வொரு அரசு அலுவலகமாக ஏறி இறங்கியும் உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்களுக்காக, பணியாற்றுவதே கட்சியின் முக்கியமான மற்றும் முதன்மையான நோக்கம் ஆகும்.

மகளிர் அவர்கள் சார்ந்திருக்கும் குழுக்களின், சமூகத்தின் அல்லது பணியிடத்தின் நிர்வாகங்களில் சம உரிமை பெறுவதற்கான பாலின பாகுபாடற்ற சூழலை உருவாக்குவதற்காக பெண்கள் தேசியக் கட்சி பணியாற்றும்.

தேசிய பெண்கள் கட்சி துவங்குவதற்கான பணிகள் 2012 – ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டன. மக்களவையில் பெண்களுக்கான 50% இட ஒதுக்கீட்டைப் பெற வேண்டும் என்பதே அதற்கான உந்துதலாக இருந்தது.

இந்த 2018 – லும் கூட பெண்களின் உரிமைகள் சுலபமாக புறக்கணிக்கப்படுகின்றன. பெண்களுக்கெதிரான கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.ஆனால் குறிப்பிடத்தக்க எந்த சீர்திருத்தமும் கொண்டுவரப்படவில்லை.

இதனால் தான் பெண்கள் தேசிய கட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பெண்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். அவர்களுக்கு பொருளாதார நிலைத்தன்மை இருக்க வேண்டும். எந்த ஒரு பெண்ணும் பாலியல் வன்புணர்வுகளுக்கு ஆளாகக் கூடாது.

பெண்களுக்கெதிரான இத்தகைய சவால்களை துணிந்து எதிர்கொள்ள, அவர்கள் பிரச்சனைகளை மேலும் எளிதாகப் புரிந்து கொள்ள பெண்கள் களத்தில் இருப்பது அவசியமாகிறது என்கிறார் கட்சியின் தலைவர் டாக்டர் ஸ்வேதா.
தெலுங்கானாவில் அரசு சாரா நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தான், அரசியல் தளத்தை மாற்றுவதற்கு நாம் அரசியல் களத்தில் இருக்க வேண்டும் என்று உணர்ந்திருக்கிறார் டாக்டர் ஸ்வேதா. அதனால் தேசிய இயக்கத்தைத் துவங்க விரும்பினார்.

உண்மையான நோக்கத்துடன் சேவை செய்வதற்கு அவருக்கு ஆளும் குழுவிலிருந்து அதிக உறுதிப்பாடு தேவைப்படுகிறது. பெண்களுக்குத் தேவையான சீர்திருத்த திட்டங்களை, சட்டங்களைக் கொண்டு வர பாராளுமன்றத்தில் அவருக்கு ஆதரவு தேவைப் படுகிறது.

தற்போது NWP ‘தெலுங்கானா மகிளா சமிதி’ அமைப்பின் 1.45 லட்சம் மகளிரின் ஆதரவைப் பெற்றுள்ளது. ஆதரவாளர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.

ஏன் நீங்கள் ஏற்கனவே இருக்கும் ஏதோ ஒரு கட்சியின் உறுப்பினராக சேர்ந்து சேவை செய்யலாமே? என்ற கேள்வி வைக்கப்பட்டால், அதற்கு, ‘ நாங்கள் எங்கள் அடையாளத்தை இழக்க விரும்பவில்லை. பெண்களால் படிக்க முடியும், பெண்களால் தலைமைப் பொறுப்பேற்க முடியும், பெண்களால் சுதந்திரமாக செயல் பட முடியும் என நிரூபிக்க விரும்புகிறோம்.’ என்கிறார் டாக்டர் ஸ்வேதா.

இப்போது இருக்கும் கட்சிகள் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான இடம் கொடுக்காமல் அவர்களைப் புறக்கணிக்கின்றன. இதன் விளைவாகத் தான் பாராளுமன்றத்தின் 545 உறுப்பினர்களில் 11 விழுக்காடு தான் பெண்கள் இருக்கின்றனர்.

நாட்டின் ஏனைய கட்சிகளுக்கு பெண்களைத் தங்கள் பட்டியலில் இணைத்துக் கொள்வதற்கான அழுத்தத்தை NWP கொடுக்கும். அதன் மூலம் கணிசமான எண்ணிக்கையில் பெண்கள் மக்களவையில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டாக்டர் ஸ்வேதா கருதுகிறார்.

பாராளுமன்றத்தில் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடுக்காக, கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்து, நீதிமன்றம் வரை சென்று போராடி, முடிந்த அளவு அழுத்தங்களைக் கொடுத்து என அனைத்து கதவுகளைத் தட்டிப் பார்த்தும் திறக்காததால் தான் இன்று தேசியப் பெண்கள் கட்சி உருவாகி உள்ளது என்று டாக்டர் ஸ்வேதா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ பாராளுமன்றத்தில் பெண்களை சரிக்கு சமமான அளவு பார்க்கும் வரையில் நாங்கள் பின் வாங்கப் போவதில்லை.’ என்று தீர்க்கமாகத் தெரிவிக்கிறார் டாக்டர் ஸ்வேதா.

சாதாரண பணியிடத்தில் இருந்து இந்திய ராணுவம் வரையிலும் பெண்களுக்கான சம உரிமையைப் பெற்றுத் தர NWP பணியாற்றும்.நாட்டின் ஒவ்வொரு பெண்ணின் ஆதரவையும் தேசிய பெண்கள் கட்சி வரவேற்கிறது.

அனைத்து பெண்களும் ஜாதி, மதம் என்று எந்த பேதமும் இன்றி ஓர் குடையின் கீழ் திரள்வோம். மேலும், எங்கள் கருத்தியலைப் புரிந்து கொண்ட ஆண்களின் அரசியல் ஆதரவையும் தேசியப் பெண்கள் கட்சி வரவேற்கிறது.

Indias First National Level Womens Party Launched

Indias First National Level Womens Party Launched

More Articles
Follows