காதல் திரைப்படங்களின் நிலையான வரிசையில் ரீல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதையில் இருக்கும் கதாபாத்திரங்களும் , அதன் தன்மையுமே ஒரு ரொமான்டிக் படத்தின் தரத்தை தீர்மானிக்கிறது. குறிப்பாக தேர்ந்த நடிகர்கள் மட்டுமல்லாமல், அறிமுககங்களையும் பயன்பத்திக்கொள்ளும் திறமையே இப்படங்களின் தனித்துவம் என்று கூறலாம். கதாபாத்திரங்களின் வலிமையை உணர்த்தும் திரைப்படங்களை தமிழ் சினிமா நிறைய கண்டுள்ளது . இத்தகைய காதல் திரைப்படங்களை நிலையாக கொடுத்துவரும் தமிழ் சினிமாவின் வரிசையில் , நம்பிக்கையோடு சேர தயாராகயிருக்கிறது “ரீல்”.

“காதல் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு புதியவை இல்லையென்றாலும், அதன் வடிவமைப்பே அவற்றை தனித்து காட்டுகிறது . தலைப்பு என்பது ஒரு படத்தின் முக்கிய அம்சம்,இப்படத்தின் தலைப்பான “ரீல்” என்பது எதற்காக என்று கேள்விக்கு படத்தின் கதையே பதில் கூறும். நடிகர்கள் உதய்ராஜ் மற்றும் அவந்திகா கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். KPY புகழ் சரத் இப்படத்தில் முழு நேர நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் ,ஒரு குணச்சித்ர நடிகராகவும் இப்படம் வெளிப்படத்தும்.
படத்தின் இறுதியில் வரும் திருப்பங்களும், கூறப்பட்டிருக்கும் கருத்தும் மக்களை வெகுவாக கவரும். கோவை ,மெலுகொட் கோத்தகிரி மற்றும் மைசூர் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெறுகிறது” என்றார் படத்தின் இயக்குனர் முனுசாமி.

“ரீல்” படத்தின் கதையை T.N.சூரஜ் அவர்கள் எழுத , முனுசாமி இயக்குகிறார். ரொமான்டிக் திரைப்படங்களில் , இசையின் பங்களிப்பு சற்று அதிகமாக இருக்கும் , இப்படத்திற்கு சந்தோஷ் சந்திரன் பாடல்களையும் , அச்சு ராஜாமணி பின்னணி இசையும் கவனிக்கின்றனர். சுனல் பிரேம் ஒளிப்பதிவு செய்ய , சாய் சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். ஸ்ரீ முருகா மூவி மேக்கர் தயாரிக்கும் இப்படத்தை விரைவில் வெளிக்கொண்டுவர இருக்கின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் விஜய்-விக்ரம் வாரிசுகள்.; பாய்ஸ் பாணி படமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரம்மாண்ட டைரக்டர் ஷங்கர் அவர்கள் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை முடித்துவிட்டு இளைஞர்களை கவர ஒரு படம் இயக்கவுள்ளாராம்.

இதில் விஜய் & விக்ரமின் வாரிசுகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது விஜய் மகன் சஞ்சய் மற்றும் விக்ரம் மகன் துருவ் ஆகிய இருவரும் நடிக்க வாய்ப்பு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தன் மகன் துருவ்வை ஷங்கர் இயக்கத்தில் தான் அறிமுகப்படுத்த நினைத்தார் விக்ரம்.

ஆனால் பாலா இயக்கத்தில் வர்மா படத்தின் மூலம் அறிமுகமாகிறார் துருவ் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. எனவே இது பாய்ஸ் போல இல்லாமல் இருந்தால் சரிதான்..

மீண்டும் இணையும் விஜய்-அஜித்.; ஏவிஎம் ஆசை நிறைவேறுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் சினிமாவில் நிலவி வரும் ஈகோ பிரச்சினையால் மல்டி ஸ்டார் படங்கள் வருவது இல்லை.

ஆனால் ஒரு சில நடிகர்கள் தன் போட்டி நடிகருடன் நடித்து வருகின்றனர்.

1970 களில் கமலும் ரஜினியும் கிட்டதட்ட 12 படங்களில் இணைந்து நடித்தனர்.

தற்போது விஜய், அஜித் இருவரும் போட்டியாளர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

இவர்கள் இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்தனர்.

தற்போது இவர்களை இணைத்து மெகா பட்ஜட் படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறதாம் ஏவிஎம் நிறுவனம்.

இந்திய சினிமாவின் மிகப்பெரிய நிறுவனம் என்பதால் இருவரும் ஒப்புக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.

அட.. அந்த அதிர்ஷ்டசாலி டைரக்டர் யாருன்னு சொல்லுங்கப்பு..

96 தெலுங்கு ரீமேக்.; என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? என டைரக்டர் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2018-ம் ஆண்டில் வெளியாகி காதலர்கள் மட்டுமில்லாது அனைவரும் கொண்டாடிய படம் ’96’.

பிரேம்குமார் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, பக்ஸ், ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.

இதன் தெலுங்கு ரீமேக்கை பெரிய தொகைக்கு பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு கைப்பற்றினார்.

தெலுங்கிலும் பிரேம்குமாரே இயக்கவுள்ளார்.

விஜய் சேதுபதியாக சர்வானந்த், த்ரிஷாவாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹீரோ & ஹீரோயின் இளவயது கேரக்டர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்தெலுங்கில் பள்ளிக் காலத்து காதலுக்கு பதிலாக கல்லூரி காதலை வைக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர் பிரேம்குமார் கூறியதாவது..

96 படத்தின் அழகே பள்ளி காலத்திலிருந்தே தொடங்கும் அன்பின் பயணம் தான். அதில் மாற்றமில்லை.

ஆனால் தெலுங்கு ரசிகர்களுக்காக சிலவற்றை மாற்றுகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

ரசிகர்களை சந்தித்துக் கொண்டே தளபதி 63ல் நடிக்கும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்களை அடிக்கடி சந்திப்பதும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டுபவர் விஜய்.

எனவே தான், பல ஹீரோக்கள் தங்கள் பட பாடல்களை யூடிப்பில் வெளியிட தன்னுடை பட இசை விழாக்களை ரசிகர்கள் முன்னிலையில் வெளியிட்டும் வருகிறார்.

தற்போது ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லி இயக்கும், தளபதி 63வது படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, நயன்தாரா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இதன் சூட்டிங் தற்போது முதல் சென்னையிலுள்ள பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது.

அங்கு சண்டை காட்சிகள் படமாக்கப்படுகிறதாம்.

இந்த சூட்டிங்கை கேள்விப்பட்ட ரசிகர்கள் அங்கே தினம் தினம் கூடி வருகிறார்களாம்.

எனவே ஓய்வு நேரங்களில் அவ்வப்போது, ரசிகர்களையும் சந்தித்து வருகிறார் தளபதி.

மீண்டும் கமலுடன் இணைய ஆசைப்படும் பேட்ட வில்லன் சிங்காரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேட்ட படத்தில் சைலண்ட் வில்லனாக நடித்து அனைவரையும் அசத்தியவர் நவாசுதீன் சித்திக்.

அடிச்சது யாரு..? என்று இவர் சட்டை காலரை தூக்கி விட்டு பேசும் காட்சி எவராலும் மறக்க முடியாது.

தற்போது தாக்கரே என்ற ஹிந்தி படத்தில் பால் தாக்கரேவாக நடித்திருக்கிறார்.

அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில் ரஜினி மற்றும் கமல் பற்றி பேசியுள்ளார்.

யாரையும் காப்பி அடித்து நடிக்கக் கூடாது. உண்மையாக நடிக்க வேண்டும்.

என்னுடன் நடித்த நடிகர்களில் தமிழில் ரஜினியையும் விஜய் சேதுபதியையும், பிடித்தது.

ரஜினிகாந்த், எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார். ஆனால் இயக்குனர் சொல்வதை மட்டும்தான் செய்கிறார். இது பெரிய வி‌ஷயம்.

கமல் நடிப்பு, ரஜினி நடிப்பு என்று கம்பேர் செய்ய கூடாது. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. கமல் மிகச்சிறந்த நடிகர். அவருடன் ஹேராம் படத்தில், நடித்தேன். ஆனால் அந்த காட்சி படத்தில் இல்லை.

ஆளவந்தான் இந்தியில் டப் செய்யப்பட்ட போது கமலுக்கு இந்தி பயிற்சியாளராக பணிபுரிந்தேன்.

கமலுடன் நடிக்கவேண்டும்”. இவ்வாறு நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows