முழுக்கதையை கேட்ட பிறகே தங்கராஜ் நிர்வாணமாய் நடித்தார்.. : மாரிசெல்வராஜ்

முழுக்கதையை கேட்ட பிறகே தங்கராஜ் நிர்வாணமாய் நடித்தார்.. : மாரிசெல்வராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Mari Selvaraj reveals how Thangaraj acted in nude Sceneநீலம் புரொடக்சன்ஸ் சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள படம் பரியேறும் பெருமாள்.

இயக்குனர் ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், இதன் வெற்றி விழா மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது மாரி செல்வராஜ் பேசியதாவது…

“பரியேறும் பெருமாளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா என்று மிகவும் பயந்தேன். ஆனால் எதிர்பார்த்ததை விட எல்லா தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.

குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் அனைவரும் பாராட்டியது மறக்க முடியாதது. அத்தனை பேருக்கும் நன்றி.

எல்லோரும் முதல் படத்திலேயே இப்படியான காட்சிகளை எடுக்க முடிந்தது எப்படி என கேட்டார்கள்.

எல்லாமே ரஞ்சித் அண்ணா என்கிற ஒருவர் கொடுத்த நம்பிக்கை தான் காரணம். அதற்கெல்லாம் அவருக்கு நன்றி கூறப் போவதில்லை, கடைசி வரை அவர் கூடவே தான் இருப்பேன். என்னுடைய உதவி இயக்குநர்கள், தயாரிப்பு தரப்பினர், கேமராமேன், எடிட்டர் எல்லோருக்குமே எனது நன்றிகள்.

சந்தோஷ் நாராயணன் சார் இந்தப் படத்தை முழுவதுமாக புரிந்து கொண்டு வேலை செய்தார். கதிர், ஆனந்தி, யோகி பாபு எல்லோரும் படத்திற்காக முழுமையாக உழைத்தார்கள், அவர்களுக்கும் நன்றி.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள், நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் அத்தனை பேரும் பாராட்டினார்கள். பரியனின் அப்பாவாக நடிக்க சரியான நபரை தேர்வு செய்ய அலைந்து திரிந்தோம். தமிழ்நாடு முழுக்க சுற்றினோம்.

அதன் பின்னர் நிஜத்திலேயே கூத்துக்கலைஞரான தங்கராஜை பிடித்தோம். அவரை ஒரு சோளக்கொல்லையில் நடு இரவில் சந்தித்தேன். முதலில் ஒரு ஒப்பாரி பாடலை பாட சொன்னேன். அரை மணி நேரம் அவர் பாடியது உருக வைத்தது.

உடனே அவரை தேர்ந்தெடுத்தோம். படத்தில் உள்ளதற்கும், நிஜத்திற்கும் நிறைய வேறுபாடு கொண்டவர் அவர்.

நிஜத்தில் பயங்கரமாக கோபப்பட கூடிய ஒரு ஆள். முக்கியமான அந்த காட்சியில் அழ முடியாது என மறுத்தார், ஆனால் நான் அழுது காண்பித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டார்.

நிர்வாணமாக ஓடும் காட்சியில் நடிக்க முதலில் மறுத்தார். முழுக்கதையையும் விளக்கிய பின்னர் ஒப்புக்கொண்டார். அவர் இன்னும் படம் பார்க்கவில்லை. அவர் படம் பார்க்கும்வரை எனக்கு பதற்றம் இருக்கும்”, என்றார்.

Director Mari Selvaraj reveals how Thangaraj acted in nude Scene

pariyerumal perumal team

சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷின் வடசென்னை

சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷின் வடசென்னை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushதேசிய விருது வென்ற நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டனில் உருவாகியுள்ள படம்

“வட சென்னை “.

கடந்த 23. 9. 18 ஞாயிறு அன்று இப்படத்தின் பாடல்கள் வெளியானது.மேலும் பாடல்களுக்கு சிறந்த விமர்சனங்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.

இத்திரைப்படத்திற்கு காலா, கபாலி படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார்.

இது இவருக்கு 25 வது படம் தனுஷ் இன் வுண்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளது.லைக்கா ப்ரொடொக்சன்ஸ் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் உலகெங்கும் ரிலீஸ் செய்கிறது.

பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய மாபெரும் வெற்றி படங்களை தந்த தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணி இந்த படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

இந்த கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரையிடப்பட இருக்கிறது. அடுத்த மாதம் 11ந் தேதி முதல் 20ந் தேதி வரை பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழா நடக்க இருக்கிறது.

இதில் 3வது நாளில் வடசென்னை திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ் படம் வடசென்னை என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகுமாரின் *கொம்பு வச்ச சிங்கம்டா* டைட்டிலை வெளியிட்ட சூர்யா

சசிகுமாரின் *கொம்பு வச்ச சிங்கம்டா* டைட்டிலை வெளியிட்ட சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sasi kumar in kombu vachcha singam daகடந்த 2012ல் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’.

இப்படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். இவையிரண்டும் தோல்வியை தழுவியது.

தற்போது மீண்டும் சசிகுமாருடன் இணைந்திருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்.

இந்தப் படத்துக்கு ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதன் மோஷன் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

தற்போது இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

தயாரிப்பாளர் சங்க விஷமிகளை விரட்டுங்கள்; *ஒளடதம்* ஹீரோ ஆவேசம்

தயாரிப்பாளர் சங்க விஷமிகளை விரட்டுங்கள்; *ஒளடதம்* ஹீரோ ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nethaji prabhuரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நேதாஜி பிரபு நாயகனாக நடித்து ள்ள படம் `ஒளடதம்`.

இப்படத்தை இயக்கியுள்ளவர் ரமணி. இது மருத்துவ உலகின் மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மெடிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது.

இப்படத்தினை பிரபலப் படுத்தும் முயற்சியாக `ஒளடதம்` பெயர் பொறித்த 3 லட்சம் பேனாக்களை திரையரங்குகளில் விநியோகிக்க உள்ளனர்.

அதற்கான அறிமுக விழாவாக பிரமாண்ட பேனா வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடந்தது. இயக்குநர்கள் பாக்யராஜ், பேரரசு, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் பிரமாண்ட பேனா வெளியிடப் பட்டது.

திரையரங்குகளில் பேனா தரும் போது` தமிழா தமிழில் கையெழுத்திடு ` என்கிற பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவிருக்கிறது படக் குழு.

“ஒளடதம்” விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது

“இங்கே வந்துள்ள பாக்யராஜ் சார் சிறுபடங்களை ஊக்கப்படுத்த இம்மாதிரி சிறுபடங்களின் விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.இது நல்ல விஷயம். அதே போல அவரிடம் நான் கற்றுக் கொண்ட நல்ல விஷயம் தெரிந்தவர்களிடம் பேசும் போது அவர்களைப் பெயர் சொல்லி அழைக்கிறார்.

அப்படிப் பெயர் சொல்லும் போது பெயரை உச்சரிக்கும் போது அன்பு கூடுகிறது.நெருக்கமும் வெளிப்படும். இன்று தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்று முயற்சி தொடங்குகிறார்கள்.

தமிழ்நாட்டில் தமிழன்தான் ஆள வேணடும் என்று பல கட்சிகளில் குரல்கள் ஒலிக்கின்றன. கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இப்படிக் குரல் எழவில்லை.. காரணம் அதற்கான தேவை அங்கில்லை. இங்கு இருக்கிறது.

வேற்று மொழி ஆதிக்கம் பருந்து போல தலைக்கு மேல் வட்டமடிக்கிறது. தமிழ் மொழியையோ கோழிக்குஞ்சுகளைப் போல காப்பாற்ற வேண்டியிருக்கிறது. இன்று தமிழை வளர்ப்பதை விட முதலில் தமிழைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது காரணம் தமிழன் தமிழனாக இல்லை. எனவேதான் தமிழில் கையெழுத்து போடுங்கள் என்று இப்படிக் கேட்க வேண்டியிருக்கிறது.

தமிழில் கையெழுத்து போ டுங்கள் என்று கேட்கிற இப்படிப்பட்ட நிலைக்கு வருத்தமாகவும் இருக்கிறது.

இன்று மருந்தும் செல்போனும் அத்தியாவசியமாகிவிட்டன. இந்த இரண்டும் கேடு தருபவை.மருந்தை மையப்படுத்தி எடுத்துள்ள இப்படம் வெற்றி பெற வேண்டும்.” இவ்வாறு பேரரசு பேசினார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசும் போது,

” தமிழில் தான் எப்போதும் நான் கையெழுத்து போடுவேன். காசோகளிலும் கூடத் தமிழில் தான் கையெழுத்து போடுவேன் ஆனால் தமிழில் கையெழுத்து போடுவதால் தமிழ் வளர்ந்து விடுமா? நான் சைனா போனபோது அங்கு ஆங்கிலமே இல்லாமல இருக்கிறார்கள் அவர்கள் எல்லாவற்றிலும் முன்னேறித்தான் இருக்கிறார்கள்.

ஆங்கிலம் பேசும் ஆட்களைத் தேடிப் பிடிகக வேண்டும். நான் அங்கு போயிருந்த போது தகவல் தொடர்புக்கு சிரமமாக இருந்தது. அண்மையில ஒரு தெலுங்குப்படத்தின் படப்பிடிப்புக்கு கம்போடியா போக வேண்டியிருந்தது.

அப்படிப்போன போது அங்கு அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் தகவல் தொடர்பு பிரச்சினையால் நான் பாதியிலேயே ஊர் திரும்ப வேண்டியிருந்தது. என் பாஸ்போர்ட்டில சீல் போட இடமில்லை என்பதுதான் பிரச்சினை. அது மட்டுமல்ல விமான நிலையத்தில் என்னை ஒரு குற்றவாளியைப்போல நடத்தினார்கள்…

சில நாடுகளில தெரிந்தும் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள் இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன தமிழைக் காப்பாற்ற அரசியல்பூர்வமான நடவடிக்கைகள் வந்தால்தான் முடியும்.

இப்படம்வெற்றி பெற வாழ்த்துக்கள். “இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான நேதாஜி பிரபு பேசும் போது,

” நான் சினிமா எடுப்பது என்று முடிவு செய்தவுடன் புதிதாக ஏதாவது கதை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். 2013-ல் ஒரு மருந்து அதிலுள்ள மூலப்பொருள்கள் தவறானது என்று செய்திகள் வந்தன.

அம்மருந்து தடை செய்யப்பட்டது. சில காலம் கழித்து அதே மருந்து தடை நீக்கம் செய்யப்பட்டது என விளம்பரம் வந்தது. இடையில என்ன நடந்தது? இது பற்றி யோசித்தேன் இக்கதை உருவாகியது.

நாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் பற்றி நம்மிடம உள்ள விழிப்புணர்வு, நாம் சாப்பிடும் மருந்துகள் பற்றி நம்மிடம் இல்லை எவ்வளவோ தடை செய்யபபட்ட மருந்துகள் இங்கு தாராளமாக புழக்கத்தில் உள்ளன இது பற்றிய விழிப்புணர்வு இங்கு இல்லை.

நாங்கள் இப்படத்துக்காக ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனியில் அனுமதி வாங்கி 8 நாட் ள் படமெடுத்துள்ளோம்.

Uபத்தில் 5 ஃபைட், 2 பாடல்கள் உள்ளன. ஒரு விஷயத்தை இங்கே பதிவு செய்தாக வேண்டும் இப்போது புதிதாகப் படமெடுக்க வருபவர்கள் படத்தைக் கூட போராடி எடுத்து விடுகிறார்கள்.

ஆனால் வெளியிடுவது அவ்வளவு சிரமமாக இருக்கிறது. எங்களை ஏமாற்ற இங்கே ஒரு கூட்டம் அலைகிறது. தயாரிப்பாளர் கில்டிலோ, பிலிம் சேம்பரிலோ,தயாரிப்பாளர் சங்கத்திலோ ஒரு தயாரிப்பாளர் என்று மெம்பராகி இருக்கிறார்கள்..

அதைக்காட்டி உங்கள் படம் வெளியிட நான் உதவுகிறேன் என்று வருகிறார்கள். ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு நம்மிடம் காசு பிடுங்குகிறார்கள் அவர்களால் ஒன்றுமேசெய்ய முடியாது. ஆனால் பணத்தைக் கறந்து விடுகிறார்கள். அவர்களிடம் நான் ஏமாற்றப்பட்டதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.இப்படிப்பட்ட விஷமிகளை சங்கத்திலிருந்து நீக்க வேண்டும்.

என்னைப் போன்ற புதிய தயாரிப்பாளர்கள இப்படிப்பட்ட போலிகளிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். இந்த விஷமிகளை சினிமாவிலிருந்து விரட்டினால் தான் சினிமா உருப்படும். ஒளடதம் தமிழில் பெயர் பொறிக்கப்பட்ட மூணு லட்சம் பேனாக்களை திருச்சி கோயம்புத்தூர் மதுரை திருநெல்வேலி சென்னை செங்கல்பட்டு சேலம் திரையரங்குகளில் பேனாவை வழங்க உள்ளோம்.

இதுவும் ஒரு புதிய முயற்சி முயற்சி செய்வதில் எங்களுக்கு ஒரு சந்தோஷம் என்றார்.நாயகனும்,படத்தயாரிப்பாளர், நேதாஜி பிரபு.

இவ்விழாவில் பட நாயகி சமீரா,.நடிகர் விஷ்ணுபிரியன், பட வில்லன் வினாயகராஜ், கவிஞர் தமிழமுதவன், நடிகை பாலாம்பிகா, விநியோகஸ்தர் எம்.சி. சேகர், இணைத் தயாரிப்பாளர் அருண் ராமசாமி, பிஆர்ஓ யூனியன் செயலாளர் பெரு. துளசி பழனிவேல் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே நடிகர் ரஜினி தான்.. : பொன்.ராதாகிருஷ்ணன்

மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே நடிகர் ரஜினி தான்.. : பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and pon radha krishnanமத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சி விமான நிலையத்தில் இன்று (அக்டோபர் 4) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் அரசியல் பேச்சு குறித்த கேள்விக்கு…

“சினிமாவில் இருந்து அரசியல் வருபவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகவும், ஜெயலலிதா ஆகவும் முடியாது.

இன்று மக்களிடம் செல்வாக்கு பெற்ற நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த் மட்டும் தான்.

ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. ஆனால், மக்கள் மத்தியில் ஒரு நல்ல மனிதர் என்ற எண்ணம் உள்ளது. அவர் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா என தெரியாது.” என்றார்.

விஜய்சேதுபதியின் 96 அதிகாலை காட்சிகள் ரத்துக்கு விஷால் காரணம்.?

விஜய்சேதுபதியின் 96 அதிகாலை காட்சிகள் ரத்துக்கு விஷால் காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer JSK speaks against Vishal regarding 96 Movie release issueபிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள படம் ’96’.

ஓரிரு தினங்களுக்கு முன்பே இப்படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சி போடப்பட்டது. நல்ல விமர்சனங்கள் வரவே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

எனவே இன்று வெளியாகும் இப்படத்திற்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு காட்சிகள் திட்டமிடப்பட்டு இருந்தன.

நேற்று இரவு இந்தப் படத்தின் பிரிமீயர் காட்சிகள் அமெரிக்காவில் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், கடைசி நேரத்தில் அவை ரத்து செய்யப்பட்டன.

அதுபோல சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் அதிகாலை சிறப்புக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

இப்படத்தின் பைனான்ஸ் பிரச்சினையில் ஏற்பட்ட கடைசி நேர பஞ்சாயத்துகளால் பட வெளியீடு தாமதம் ஆனது.

இதனிடையே, தனக்கு சேர வேண்டிய பாக்கித் தொகையை ’96’ படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் தர வேண்டி இருந்ததால் படத்தை விஷால் தடுத்து நிறுத்தினார் என தகவல்கள் பரவியது.

இது குறித்து தரமணி, அண்டாவ காணோம் உள்ளிட்ட பல படங்களின் தயாரிப்பாளரான ஜே. சதீஷ்குமார் அவர்கள் வாட்சப் மூலம் ஒரு தகவலைப் பரப்பினார்.

இதுகுறித்து விசாரித்த போது கிடைத்த தகவல்கள் இதுதான்…

விஷால் நடித்த ‘கத்திச்சண்டை’ படத்தைத் தயாரித்த நந்தகோபாலே தான் ’96’ படத்தை தயாரித்துள்ளா.

மேலும், விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்தையும் முதலில் அவர் தான் தயாரிப்பதாக இருந்ததாம்.

‘துப்பறிவாளன்’ படத்தைக் காட்டி பைனான்சியர்களிடம் நந்தகோபால் 21 கோடி ரூபாய் கடன் பெற்றாராம். அதில் 9 கோடியை மட்டும் கொடுத்து விட்டு மீதி 12 கோடி ரூபாய் பாக்கி வைத்தாராம்.

அவர் இழுத்தடிக்கவே கடைசியில் விஷாலே துப்பறிவாளன் படத் தயாரிப்பை ஏற்று படத்தைத் தயாரித்து முடித்து வெளியிட்டார். அந்த சமயத்திலேயே விஷால் மேலும் 6 கோடிகளை விட்டுக் கொடுத்தாராம்.

ஆக மீதி 6 கோடி மட்டுமே பாக்கி இருந்தது.

எனவே மீதமுள்ள பணத்தை 96 வெளியீட்டிற்கு முன்பாக தருவதாக உறுதி அளித்திருக்கிறார் நந்தகோபால். அப்போதும் அவர் தராமல் இழுத்தடித்திருக்கிறார்.

இருந்தபோதிலும் அதில் சில கோடிகளை வாங்கிக் கொண்டு படத்தை வெளியிட கடிதம் கொடுத்துள்ளார் விஷால்.

மீதமுள்ள பணத்தை வெளியீட்டுக்கு முன்பு கொடுக்காத காரணத்தால்தான் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாம்.

தற்போது அந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இப்போது காட்சிகள் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி ‘96’ படத்தில் நடித்ததற்காக வாங்கிய சம்பளம் 7 கோடி. இதில் 4 கோடியை திருப்பிக் கொடுத்து பைனான்சியர் பாக்கியை கொடுக்க ஏற்பாடு செய்தார் என கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக விஷாலிடம் பேச தயாரிப்பாளர் தொடர்ந்து முயற்சித்தும் அவர் போனை எடுக்கவில்லை என்கின்றனர்.

நந்தகோபால் தயாரித்த கத்திச் சண்டை சம்பள பாக்கியை விஷால் விட்டுக் கொடுத்திருந்தால் தயாரிப்பாளர் பைனான்சியர் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்க மாட்டார் என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.

மேலும் கத்திச் சண்டை படம் மிகப் பெரும் நஷ்டம் எனத் தெரிந்தும் விஷால் சம்பளப் பாக்கியை விட்டுக் கொடுக்கவில்லை எனவும் ஒரு தகவல் பரவி வருகீறது.

இவை ஒருபுறம் இருக்க, நல்ல விமர்சனங்களை பெற்ற ’96’ படம் வெளியானால் மற்றொரு படத்திற்குப் பாதிப்பாக இருக்கும் எனவும் அதனால்தான் இந்த நெருக்கடியை வேறு சிலர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Producer JSK speaks against Vishal regarding 96 Movie release issue

More Articles
Follows