தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓரிரு தினங்களுக்கு முன் ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் ஜனநாயகம் தோற்றது. பணநாயகம் வென்றது என பல்வேறு தரப்பினர்கள் தேர்தல் ஆணையத்தை குறை கூறி வருகின்றனர்.
இந்த பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் இன்று தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த்.
தன்னுடைய அரசியல் அறிவிப்பை இந்த சந்திப்பில் அவர் வெளியிடுவார் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதில் ரஜினியுடன் தயாரிப்பாளர் கலைஞானம் (இவர்தான் ரஜினியை பைரவி படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தியவர்) மற்றும் இயக்குனர் மகேந்திரன் இருவரும் கலந்துக் கொண்டனர்.
அவர்கள் பேசியதாவது…
“ரஜினிகாந்த் வீட்டில் இப்போது சுக்ரன் உட்கார்ந்து இருக்கிறார். அருணாச்சலம் படத்தில் என்னையும் ஒரு தயாரிப்பாளராக்கி அழகு பார்த்தவர். அவ்வளவு நல்ல மனிதர்.
அதிர்ஷ்டம் வரும்போது யாரும் குறுக்கே நிற்க முடியாது” என்று வாழ்த்திப் பேசினார் கலைஞானம்.
இயக்குநர் மகேந்திரன் பேசியதாவது..
“சோ ஒரு தீர்க்கதரிசி. அவர் சொன்னது… யாருக்கும் இல்லாத ஈர்ப்பு ரஜினியிடம் இருக்கு. யாருக்கும் துன்பம் தரும்படி ரஜினி நடந்துகொள்ள மாட்டார்.
ஒரு நல்ல தலைவருக்கு தேவையான அனைத்து தகுதிகளும் ரஜினியிடம் உள்ளது என அடிக்கடி மறைந்த சோ என்னிடம் சொல்வார்.
தமிழ்நாட்டுக்கு தற்போது தலைமை என்று யாராவது இருக்கிறார்களா?
சில பேர் பேருக்கு எளிமையாக இருப்பார்கள். உண்மையான எளிமையானவர் ரஜினிகாந்த்.
எதிலும் நிதானமாக இருப்பவர்களால்தான் வெற்றி பெற்று சாதனை படைக்க முடியும். அந்த நிதானம் ரஜினியிடம் அதிகமுண்டு” என்றார்.