ஸ்ரேயா பிறந்த நாளில் 6 மொழிகளில் பர்ஸ்ட் லுக்.; இளையராஜா இசையில் ‘கமனம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சினிமாவுலகில் வசீகர முகத்தாலும், காந்த பார்வை கொண்ட கண்களாலும், தனித்துவமிக்க நடிப்பாலும் முன்னனி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஸ்ரேயா சரண் சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் தனது திரையுலக பயணத்தை தொடங்கிவிட்டார்.

இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் “கமனம்” படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார்.

நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக “கமனம்” படம் உருவாகுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் தயாராகிறது.

நடிகை ஸ்ரேயா சரணை தனது படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைத்த பிரபல இயக்குனர் கிரிஷ் “கமனம்” படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகை ஸ்ரேயா சரணின் பிறந்த நாளான இன்று வெளியிட்டார்.

இசைஞானி இளையராஜா இசையமைக்க, பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார்.

ஞான சேகர் V.S இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்வதோடு மட்டுமில்லாமல் ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோருடன் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

கமனம் படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்குழு:

கதை-திரைக்கதை-இயக்கம்: சுஜனா ராவ்
தயாரிப்பாளர்கள்: ரமேஷ் கருதூரி, வெங்கி புஷதபு, ஞான சேகர் V.S
இசை: இசைஞானி இளையராஜா
DOP: ஞான சேகர் V.S
வசனம்: சாய் மாதவ் புர்ரா
படத்தொகுப்பு: ராமகிருஷ்ணா அராம்
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

Director Krish Launches Shriya Saran First Look In Pan India Film ‘Gamanam’

மறைந்த வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவி புகழ் காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மாரடைப்பால் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 44.

‘அது இது எது’, ‘கலக்கப் போவது யாரு’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார்.

நடிகர் வடிவேலு மாதிரியே இருப்பதாலும் அவரது கெட்டப் போட்டு காமெடி செய்வதாலும் ‘வடிவேல்’ பாலாஜி என அழைக்கப்பட்டார் இவர்.

‘அது இது எது’ நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தொகுத்து வழங்கினார்.

அதில் வரும் ‘சிரிச்சா போச்சு’ ரவுண்டில் வடிவேல் பாலாஜி நிச்சயம் இடம் பெறுவார்.

அப்போது முதலே இருவரும் நல்ல நட்பு கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் வடிவேல் பாலாஜியின் மகன் ஸ்ரீகாந்த், மகள் சத்யஸ்ரீ ஆகியோரின் கல்விச் செலவைத் தான் ஏற்றுக் கொள்வதாக வடிவேலு பாலாஜியின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

வடிவேல் பாலாஜியின் இறுதி சடங்கு இன்று மதியம் 2.30 மணியளவில் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள மயானத்தில் நடைபெறவுள்ளது.

Actor sivakarthikeyan help for vadivel balaji family

வடிவேல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தி விஜய்சேதுபதி நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவி புகழ் காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மாரடைப்பால் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 44.

‘அது இது எது’, ‘கலக்கப் போவது யாரு’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார்.

நடிகர் வடிவேலு மாதிரியே இருப்பதாலும் அவரது கெட்டப் போட்டு காமெடி செய்வதாலும் ‘வடிவேல்’ பாலாஜி என அழைக்கப்பட்டார் இவர்.

இந்த மரண செய்தி அவரது ரசிகர்களை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியது.

வடிவேல் பாலாஜியின் உடல் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் & பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் அவரது குடும்பத்தினரிடம் நிதியுதவியும் வழங்கினார்.

வடிவேல் பாலாஜியின் இறுதி சடங்கு இன்று மதியம் 2.30 மணியளவில் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள மயானத்தில் நடைபெறவுள்ளது.

Makkal Selvan Vijay Sethupathi pays last respect to Vadivel Balaji

கமல்ஹாசனை இயக்க பயப்படும் முருகதாஸ்..; ஏன் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த், விஜயகாந்த், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட கோலிவுட் டாப் ஹீரோக்களை இயக்கியவர் ஏஆர். முருகதாஸ்.

ஆனால் இவர் உலகநாயகன் கமல்ஹாசனை மட்டும இன்னும் இயக்கவில்லை.

இது தொடர்பாக பலர் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கு அவருடைய ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார்.

இதற்கான பதிலாக ஒரு பேட்டியில், ”கமல்ஹாசன் அவர்கள் இந்த நூற்றாண்டின் அற்புத கலைஞர். தனது எல்லா படங்களிலும் சிறந்த பங்களிப்பை கொடுத்தவர்.

அவரை வைத்து நம்மால் படம் இயக்க முடியுமா? அந்தளவு நமக்கு அறிவு உண்டா என்ற பயம் எனக்குள் இருக்கும்.

நிச்சயம் அவரை வைத்து இயக்குவேன். அந்தப்படம் என் வாழ்வில் சிறந்த படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார் ஏஆர். முருகதாஸ்.

ar murugadoss talks about film with kamal haasan

தயாரிப்பாளர்களுக்கு ஒரு வழின்னா.. எங்களுக்கும் ஒரு வழி இருக்கு..;- திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் இணைந்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில்…

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செலுத்தி வந்த கியூப் அல்லது யுஎப்ஓ-க்கான கட்டணத்தை இனி வரும் காலங்களில் செலுத்த முடியாது.

திரைப்பட இடைவேளைகளில் தியேட்டர்களில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் அந்த நாளில் திரையிடப்படும் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பங்கு கொடுக்க வேண்டும்.

ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வருவாயில் ஒரு பகுதியைத் தர வேண்டும்.

இத்துடன் சில கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தன் அண்மை பேட்டியில் கூறியிருப்பதாவது..

தயாரிப்பாளர்கள் சொல்லியுள்ள எந்த நிபந்தனையையும் ஏற்க முடியாது.

அவர்களின் அப்படி ஏற்காவிட்டால் படங்களை ரிலீஸ் செய்ய முடியாது என்கிறார்கள்.

அது அவர்கள் விருப்பம். விரும்பினால் ரிலீஸ் செய்யட்டும்.

விருப்மாவிட்டால் விட்டுவிடட்டும். படத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் அவர்களை நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது.

திரைப்படங்களே ரிலீசாகவில்லை என்றால் கல்யாணம் மண்டபமாக நாங்கள் தியேட்டரை மாற்றிக்கொள்கிறோம்.

தயாரிப்பாளர்களுக்கு வழி இருக்கும் போது, எங்களுக்கு ஒரு வழி இருக்கும்.

தயாரிப்பாளர்கள் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்படுவது வாடிக்கையாகிவிடும். இனி தியேட்டர்கள் இருக்காது.” என தெரிவித்துள்ளார்.

tirupur subramanyam reply to bharathi raja

தல அஜித்தின் 61 படத்தை தயாரிக்கும் ‘பிகில்’ பட புரொடியூசர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன், விஜய் நடித்த பிகில் உள்ளிட்ட படங்களை தயாரித்த நிறுவனம் ஏ.ஜி.எஸ்..

இவர்கள் பிகில் படத்தை தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது.

இதனையடுத்து ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்துள்ளார்.

“சில போலி செய்திகள் பரவி வருகின்றன. எனவே ஏ.ஜி.எஸ். சார்பில் விளக்கம் அளிக்கிறேன்.

நாங்கள் 2020-ம் ஆண்டில் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை.

எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அடுத்த படத்திற்காக காத்திருக்கிறோம்”. என பதிவிட்டு நெட்டிசன்களால் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

More Articles
Follows