தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ‘ஜெய் பீம்’ ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் பல சர்ச்சைகளும் உருவானது.
இந்நிலையில் கோவாவில் நடைபெற்று வரும் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஜெய்பீம்’ படத்தின் இயக்குநர் ஞானவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார்.
அவர் பேசியதாவது… “ஜெய்பீம் என்பது வெறும் வார்த்தையல்ல. அது ஓர் உணர்வு.
மேலும் நாம் கற்கும் கல்வி மட்டுமே மக்களை அதிகாரப்படுத்தும் கருவி என்ற அம்பேத்கரின் சொல்லை வைத்து இப்படம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் ‘ஜெய்பீம்’ படம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை அது பிரதிபலித்தது.” என்று பேசினார்.
இந்தப் பட விழாவில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் இந்திய பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது.
director gnanavel speech in 53rd International Film Festival