தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
மேலும் எவரும் எதிர்பாராத வகையில் சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று உள்ளதால் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
இதனால் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களை கொரோனா பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.
இந்த நிலையில் இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா சென்னையில் இருந்து தேனியில் உள்ள தனது சொந்த ஊரான அல்லிநகரத்துக்கு அனுமதி பெற்று சென்றுள்ளார்.
உடல் நலமில்லாமல் இருக்கும் தன் சகோதரியை பார்க்க சென்றுள்ளார்.
அந்த மாவட்ட எல்லையில் இயக்குனருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.
கொரோனா தொற்று எதுவும் இல்லாததால், அவரை ஊருக்கு செல்ல அனுமதித்தனர்.
ஆனாலும் அதிகம் பாதிப்புக்குள்ளான சென்னை சிவப்பு மண்டலத்தில் இருந்து பாரதிராஜா வந்துள்ளதால், அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி, நகராட்சி அதிகாரிகள் அவரது வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்களாம்.
Director Bharathiraja quarantined him self