தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.
அப்போது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் போலீசாரை தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டு அது வைரலானது.
இதை கண்டிக்கும் வகையில் ரஜினி தன் ட்விட்டரில் “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் இருக்கும் காவலர்கள் தாக்கப்படுவது தான்” என பதிவிட்டு இருந்தார்.
எதற்கும் வாய் திறக்காத ரஜினிகாந்த், இதற்கு மட்டும் வாய் திறக்கிறாரா? என கடுமையான கண்டனங்களை பாரதிராஜா தெரிவித்திருந்தார்.
மேலும் ரஜினி தமிழர் இல்லை. அவர் தமிழர்களின் ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழ்கிறார். கன்னடர்களின் தூதுவர் அவர் எனவும் விமர்சித்திருந்தார்.
பாரதிராஜாவின் இந்த அறிக்கை ரஜினி ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது.
எனவே அவர்களும் பாரதிராஜாவை விமர்சித்து வருகின்றனர்.
பாரதிராஜா தன் மகன் மனோஜை சினிமாவில் (தாஜ்மஹால் என்ற படத்தில்) அறிமுகப்படுத்தும்போது ரஜினியை வைத்தே அந்த விழாவை நடத்தினார்.
அதுபோல் பாரதிராஜா திரைப்பட நடிப்பு பயிற்சி நிறுவனம் ஒன்றை தொடங்கும்போது அதையும் ரஜினியை வைத்தே திறக்க செய்தார்.
இப்படி தன் வாழ்க்கையில் ஒவ்வொரு முக்கியமான நிகழ்வுகளுக்கும் ரஜினி என்ற சிறந்த மனிதர் தேவைப்பட்டார். ஆனால் தற்போது ரஜினியை தரக்குறைவாக விமர்சிக்க இவருக்கு என்ன தகுதியுள்ளது.?
ரஜினிகாந்த் வேறுமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்ததாக கூறப்பட்டாலும் அவரை வேறு மாநிலத்தவர்கள் மதராசி என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் இங்குள்ளவர்கள்தான் அவரை கன்னடர் என்று சொல்கிறார்கள்.
ரஜினிகாந்த் தன் மனைவியை தமிழ்நாட்டில் இருந்துதான் தேர்ந்தெடுத்தார். அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கு தனுஷ் என்ற தமிழரை மணமுடிக்க செய்தார். அவர் நினைத்தால் அதை தடுத்து இருக்கலாம். ஆனால் தமிழனாக வாழ்ந்து காட்டி வருகிறார்.
ஆனால் தமிழ் தமிழன் என்று வாய் கிழிய பேசும் பாரதிராஜா தன் மகன் மனோஜ்க்கு மருமகளாக கேரளத்து நடிகை நந்தனாவைதான் மண முடிக்க செய்தார். அப்போது அவரது தமிழ் பற்று என்ன ஆனது?
இப்படி பச்சோந்தி போல மாறிவரும் பாரதிராஜா இனி பச்சோந்தி ராஜா என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Director Bharathiraja became like Chameleon says Rajinikanth fans