விஜய்சேதுபதியுடன் இணைந்த பாலா…. ரசிகர்கள் உற்சாகம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீனுராமசாமி இயக்கிய தர்மதுரை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் படத்தின் நாயகன் விஜய்சேதுபதி, இதன் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இயக்குனர் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பாலா பேசியதாவது….

விஜய்சேதுபதி மிகவும் யதார்த்தமான நடிகர்.

அவருடைய படங்களைப் பார்த்திருக்கிறேன். மிகச் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருப்பது பெருமை” என்றார்.

இதனை கேட்ட திரளான ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

சென்னையிலதான் சூப்பர் பிகர்ஸ் இருக்காங்க… தேடி அலையும் நாயகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ். P மற்றும் எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில் E. சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கன்னா பின்னா”.

தியா கதையை எழுதி, இயக்குவதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.

வன்மம் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்த ‘அஞ்சலி ராவ்’ நாயகியாக நடித்திருக்கிறார்.

ரோஷன் சேதுராமன் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஜெரால்டு ராஜமாணிக்கம். பாடல்களை ஸ்ரீதர் ராமசாமி எழுத, படத்தொகுப்பு செய்துள்ளார் வெஸ்லி.

இப்படம் பற்றி இயக்குனர் தியா சொல்லும்போது…

“சூப்பர் பிகருன்னா அவங்க சென்னையிலதான் இருப்பாங்க அப்படின்னு நினைக்கிற ஒரு நாயகன். அவங்களதான் கல்யாணம் கட்டிக்கனும் என திருச்சியில் இருந்து சென்னைக்கு வருகிறார்.

படம் ஆரம்பம் முதல் முடிவு வரை நகைச்சுவையை மட்டும் நம்பி இந்தப்படத்தை எடுத்திருக்கிறோம்.

என் வாழ்க்கையில் என் நண்பர்கள் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை கற்பனை கலந்து கொடுத்து உள்ளோம்.

இதில் நிஜ பவுன்சர்கள் பலர் நடித்துள்ளனர். பார்ப்பதற்கு பிரமாண்டமான உருவத்தில் இருக்கும் இவர்கள் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் எனக்கு நண்பர்கள் என்பதால், கடைசி வரை இப்படத்தின் கதையை அவர்கள் கேட்கவே இல்லை.

ரசிகர்களின் சிரிப்புக்கு நாங்கள் உத்திரவாதம்.” என்றார்.

நாளைய இயக்குனர் குறும்பட நிகழ்ச்சியில் சிறந்த இயக்குனராக விருது பெற்றவர் தியா என்பது குறிப்பிடத்தக்கது.

தன் வாழ்க்கையை மாற்றியவருடன் சூர்யா மீண்டும் இணைவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் எல்லா நடிகர்களுக்கும் பேர் சொல்லும் படியாக சில படங்களே அமைந்திருக்கும்.

சூர்யாவுக்கு அப்படி அமைந்த சூப்பர் ஹிட் படம்தான் ‘காக்க காக்க’.

கௌதம் மேனன் இயக்கிய இப்படத்தில் ஜோதிகாவுடன் ஜோடி சேர்ந்திருந்தார் சூர்யா.

இப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், எனக்கு ஒரு ஸ்பெஷலான படம் எனவும் சூர்யாவின் ஈடுபாடு இல்லையென்றால் அது சாத்தியமாகி இருக்காது எனவும் கௌதம் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த சூர்யா… “எனக்கும் ஜோதிகாவுக்கும் பிடித்த படம். என் வாழ்க்கையையே மாற்றிய படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் இருவரிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கியுள்ளதாக தெரிகிறது.

எனவே சூர்யா மீண்டும் இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

காலையில் ‘லவ்’… இரவில் ‘ரெமோ’…. கலக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று (ஆகஸ்ட் 2) விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இருமுகன் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இப்படத்தில் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் லவ்.

இதில் நர்ஸ் வேடம் ஏற்று நடிக்கிறார்.

காலையில் நடைபெற்ற இவ்விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

இந்நிலையில் இன்றே பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் ரெமோ படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார் சிவா.

இதன் படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது.

இதன் சூட்டிங் நிறைவை ஒரு விழா போல கொண்டாடி அசத்தியுள்ளனர் படக்குழுவினர்.

‘ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்….’ ரஜினி மகள்கள் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் #HitToKill என்று ரஜினி ட்வீட் செய்திருந்தார் என்பதை பற்றி பார்த்தோம்.

ஆனால் ரஜினியின் ட்வீட்டர் அக்கௌண்டை யாரோ சில விஷமிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்களாம்.

எனவே இதுகுறித்து, ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவர்கள் தெரிவித்துள்ளதை இங்கே புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளோம்.

 

 

ஆறு மாதங்களுக்கு பிறகு ரஜினி ட்வீட்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி ரிலீஸ், அமெரிக்கா ஓய்வு என அனைத்தையும் முடித்து கொண்டு அண்மையில் சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.

அதன்பின்னர் கபாலி வெற்றிக்கு தனது நன்றியை மக்களுஙக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சற்றுமுன் #HitToKill என்ற வார்த்தையை மட்டுமே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

எனவே இதற்கு பலரும் பல மாதிரியான காரணங்களை கண்டுபிடித்து சொல்லி வருகின்றனர்.

கொசுவை அடித்து கொல் என்றும் தெரிவிக்கின்றனர்.
(Kill the diseases out..coz if the mosquitos r killed..diseases will be killed)

என்ன அர்த்தம் இருந்தாலும் தலைவர் சொன்னதால் இந்த #HitToKill என்ற வார்த்தை தற்போது ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி விசாரணை படத்தை பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.

கிட்டதட்ட ஆறு மாதங்களுக்கு பிறகு ரஜினி ட்வீட் செய்திருக்கிறார். இது ரஜினியின் 30வது ட்வீட் ஆகும்.

More Articles
Follows