தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கொரோனா தொற்றை தடுக்க மக்கள் ஒன்றாக கூடுவதை தவிர்க்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அவர்களுக்கு உதவ பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது.
இந்த நிலையில் இயக்குனர் அட்லீ ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
இதில் ரூ.5 லட்சம் பெப்சிக்கும், ரூ.5 லட்சம் இயக்குனர்கள் சங்கத்திற்கும் வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.
விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கிய அட்லி அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.