விரும்பினாலும் விரும்பா விட்டாலும் திணிப்பு.; நீட் தேர்வை எதிர்கொள்ள அமீர் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, கடந்த மே மாதம் 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக நாளை 2020 செப்டம்பர் 13 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்வை நடத்த வேண்டாம் என சில மாநில அரசுகள், அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், திரை பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், தேர்வு நடத்தியே தீருவோம் என்ற முனைப்பில் மத்திய அரசு தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் அமீர் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில்..

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. நாம் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நம் மீது வழியே திணிக்கப்பட்டுள்ளது. நாளை நீட் தேர்வு நடக்க இருக்கிறது.

நீட் தேர்வுக்கான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் கூட, இந்த தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் நமக்கு இருக்கிறது. உங்களால் நிச்சயம் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்.

உங்களால் முடியும் என்ற நம்பிக்கையோடும், உங்களது பெற்றோர்களின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, நீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். வெற்றி பெறுவோம். நிச்சயமாக சூழ்ச்சிகளில் நாம் தோற்றுவிட கூடாது என்ற காரணத்திற்காகவும், எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். வெற்றி உங்கள் பக்கம். வாழ்த்துகள். என்று கூறியிருக்கிறார்.

Director Ameer requests students who appear neet exam

நீட் தேர்வு பயம்.; மாணவர்கள் தற்கொலை.. ; கமல் & வைரமுத்து வருத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு மாணவர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன் அரியலூரில் நீட் அச்சம் காரணமாக விக்னேஷ் என்ற மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில், இன்று மதுரையில் ஒரு மாணவி ஜோதிஸ்ரீ துர்கா நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தால் என்ன செய்வது? என்ற காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தொடர் தற்கொலைகள் மாணவர்கள் & பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் மநீம தலைவர் கமல்ஹாசன்…

“மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன?” என்றார்.

மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும்.

நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை. செய்வோம் அதை..” என தெரிவித்துள்ளார்.

வைரமுத்து கூறியுள்ளதாவது…

ஓ!
மாணவ மகன்களே! மகள்களே!

நீட் என்பது தேர்வுமல்ல;
தற்கொலை என்பது தீர்வுமல்ல.

பிறக்கும் யாருக்கும் தங்களை
அழிக்கும் உரிமை இல்லை.

அழிக்க வேண்டியது அநீதியைத்தான்;
உயிர்களை அல்ல.

நீட் தேர்வு என்பது சமூக அநீதி;
முதலில் அதை அழிப்போம்.

நீங்கள் வாழப் பிறந்தவர்கள்.
#NEET #BanNEET

kamal haasan and vairamuthu tweets on NEET

இப்ப இல்லேன்னா எப்பவுமே இல்ல..; அண்ணாத்த ஆர்டர் போட்டும் அடங்காத ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் கூட இல்லை.

எனவே நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்க வேண்டும் சின்னத்தை அறிவிக்க வேண்டும் என தமிழகமெங்கும் அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி வந்தனர்.

இதனையடுத்து இனி யாரும் ரஜினி தொடர்பாக போஸ்டர் ஒட்டக்கூடாது என அறிவிப்பு வெளியிட்டது ரஜினி தலைமை மக்கள் மன்றம்.

ஆனாலும் இதனை மீறி ரஜினி ரசிகர்கள் திண்டுக்கல் & கிருஷ்ணகிரி உள்ளிட்ட நகரங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டர்களில்…
“நாச்சிக்குப்பத்தின் மன்னன் ஆட்சி மலரட்டும்”, “திராவிட அரசியல் இனி போதும்”…

“அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்; இப்போ இல்லைன்னா இனி எப்பவும் இல்லை” என்ற வாசகங்கள் உள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Rajini Fans put up posters in many districts urging him to take political plunge

BREAKING மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார்..; அவரின் வாழ்க்கை குறிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக பத்திரிகை உலகில் குறிப்பிடத்தக்க மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் (வயது 63 ) இன்று (12-09-2020) காலமானார்.

உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

திசைகள் இதழில் தன் எழுத்துப் பணியைத் தொடங்கியவர் பிறகு குமுதம் பத்திரிகையில் பகுதி நேர நிருபராகப் போனார். அங்கே அப்போது இணையாசிரியராக இருந்தவர் திரு ரா.கி.ரங்கராஜன்.

அதனால் இவர் பெயர் மாற்ற வேண்டிய சூழல். எனவே ரங்கராஜனான இவர் சுதாங்கன் ஆனார்.

1982 இறுதியில் விகடன் நிறுவனத்தில் புதிதாக துவங்க இருந்த ஜூனியர் விகடனின் முதல் நிருபராக சேர்ந்தார்.

பத்து ஆண்டுகள் அங்கே பணி புரிந்தார் . 1986ம் ஆண்டு கிராமப்புற ரிப்போர்ட்ங்கிற்காக கொல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையின் விருதை பெற்றார்.

80 களில் நாடு முழுவதும் கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டது என மத்திய அமைச்சர் ஒருவர் அறிவித்தார் .

கொத்தடிமை முறை நடைமுறையில் உள்ளது என ஆதாரபூர்வமாக நிரூபித்ததுடன் நிற்காமல் தமிழக காவல்துறை உதவியுடன் ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக சிக்கி இருந்த தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்ட பெருமையும் சுதாங்கனுக்கு சேரும்.

எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அவரது சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டியில் மக்கள் நல திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை என கள நிலவரங்களை செய்தியாக்கியவர் சுதாங்கன்.

அன்றைய அமைச்சர்கள் மறுப்பு அறிக்கை வெளியிட்டபோது தொகுதியில் நலப்பணிகள் நடக்கவில்லை என்பதை வீடியோ ஆதாரங்களாக முதன்முதலில் வெளியிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட அன்றைய முதல்வர் எம் ஜி ஆர் தொகுதிக்கான நலப் பணிகளை செய்ய உத்தரவிட்டார் என்பது வரலாறு.

1992ம் வருடம். ஜூனியர் விகடனின்பொறுப்பாசிரியர் பொறுப்பில் இருந்து வெளியேறி தினமணி நாளிதழில் பொறுப்பாசிரியராக சேர்ந்தார்.
நிர்வாகம் இரு குழுமங்களாக மாறிய நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மும்பைக்காக தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை துவக்கி அதன் துவக்க ஆசிரியராக ஆனார்.

1996ம் வருடத்திலிருந்து தொடர்ந்து விஜய், ராஜ், ஜெயா தொலைக்காட்சிகளில் அரசியல் விமர்சகனாக பேட்டி எடுத்த அனுபவம் இவருக்கு உண்டு.

தொடர்ந்து 36மணி நேரம் 19தேர்தல் முடிவுகளை விஜய டிவியில் கொடுத்த அனுபவம் உண்டு.

நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு தொடர்கதை விகடனில் எழுதியவர். எம்.ஜி.ஆர். எம்.ஆர். ராதா கொலை முயற்சி வழக்கின் ஒரு பதிவாக தினமணி கதிரில் சுட்டாச்சு சுட்டாச்சு என்கிற பெயரில் 52வாரங்கள் வந்த தொடர் பின்னர் புத்தகமாக வந்தது.

கற்பனை சாராத கட்டுரை தொகுப்புதான் தேதியில்லாத டைரி. இதுவும் இப்போதும் பலரால் பாதுக்காக்கப்படும் ஆவணம் என்றால் அது மிகையல்ல.

Senior journalist Sudhangan passes away

கோவளம் பீச்சில் சர்ஃபிங் கற்றுக்கொள்ளும் ‘சிங்கப்பெண்’ காயத்ரி ரெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிகில் படத்தில் சிங்கப் பெண்களில் ஒருவராக நடித்தவர் காயத்ரி ரெட்டி.

அந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய துணிச்சலையும் அறிவுக்கூர்மையும் மெருகேற்றிக் கொள்ள சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு விளையாட்டை
தன் நண்பரின் அறிவுறுத்தலின்படி, கோவலம் கடற்கரை அருகே உள்ள Bay of Life Surfing School மூலம் கற்றுக்கொண்டு கடல் அலைகளுடன் மோதி விளையாடி வருகிறார்.

இப்போது இவரைப் பார்த்து இன்னும் சில பெண்கள் இந்த விளையாட்டைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் தான் ஒரு சிங்கப்பெண் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் காயத்ரி ரெட்டி.

மிஷ்கின் என்னை மறந்திருக்கலாம்; அவர் சொன்ன அறிவுரையால் உயர்ந்தேன்… – பாடலாசிரியர் கதிர் மொழி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தண்ணி வண்டி’ படத்தில் வரும் பாடலை ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்தப் பாடலை எழுதியவர் கதிர் மொழி .

‘தண்ணி வண்டி’ படத்தின் மூலம் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மாணிக்க வித்யா மற்றும் இசையமைப்பாளர் மோசஸ் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இது எனக்குப் பத்தாவது படம்.

எனக்கு முதல் பாடல் வாய்ப்பு கொடுத்து அறிமுகப் படுத்தியவர் ‘உச்சிதனை முகர்ந்தால்’ இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள்.

‘என் பாட்டுச் சத்தம் கேட்டு தீப்பிடிக்குது காத்து’ என்ற வரியை பார்த்துப் பாராட்டி அந்த வாய்ப்பு வழங்கினார்.

பின்பு இயக்குநர் பாக்யராஜ் அவர்கள் :சித்து +2 ‘என்ற படத்திற்கு எழுதினேன்.ஆனால் அது இடம் பெறாமல் போனது.

கவிஞர் அறிவுமதி அய்யா அவர்கள் நான் பாடல் எழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் நிறைய மெட்டுகள் கொடுத்து பயிற்சி செய்ய ஊக்கப் படுத்தினார்.

பின்பு ‘சபாஷ் சரியான போட்டி’ ,’திரு.வி. க. பூங்கா’ போன்ற படங்களுக்கு எழுதினேன்.கால வேகத்தில் திருமணம், சென்னையை விட்டு பிரிவு என்று காலங்கள் உருண்டு ஓடினாலும் பாடலுக்காக மீண்டும் சென்னை வந்தேன்.

நான் வாய்ப்பு தேடிய காலத்தில் மிஷ்கின் அவர்கள் கூறிய வார்த்தைகளை இன்றும் பின்பற்றுகிறேன்.
நீ பாடல் துறையில் வளர வேண்டுமானால் கல்லூரி படிப்பை முடித்து ஒரு நல்ல வேலையில் அமர்ந்து உன்னுடைய லட்சியத்தை அடைய முயற்சி செய் என்று அறிவுரை வழங்கினார்.
என் வரிகளைப் பாராட்டி அவரே ஒரு விலையுயர்ந்த வாக்மேனும் பரிசளித்தார்.
அவர் கூறிய படி நான் இன்று SDNB வைஷ்ணவா கல்லூரியில் உதவிப் பேராசிரியராக உள்ளேன்.

என்னை மிஷ்கின் சார் மறந்திருக்கலாம்.

கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்கள் எப்போதும் என் கவிதைகளையும் பாடல்களையும் உற்சாகமும் ஊக்கமும் தந்து இன்னும் என் பாடல் பயணத்தின் கூடவே வரும் ஓர் ஆசானாக திகழ்கிறார்.

மீண்டும் பாலாஜி தரணிதரன் அவர்களின் ‘ஒரு பக்க கதை’ தான் என்னைச் சென்னையில் குடியேற வைத்தது.அதில் ஒரு அழகான பாடல்
அமைந்தது.அது எனக்கு பெரிய அடையாளம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தந்தது.

:என்னோடு விளையாடு’ வில் நான் எழுதிய காலை தேநீர் பாடல் தான் எனக்கு பெரிய வரவேற்பையும் வாழ்த்துக்களையும் பெற்றுத் தந்தது.

அடுத்து வெங்கட சுப்ரமணியம் ‘மைக் டெஸ்டிங்’ என்ற படத்திற்கு பாடல் எழுதினேன்.அது இன்னும் வெளிவரவில்லை.

கன்னட மொழிபெயர்ப்பு படத்திற்கும் எழுதியுள்ளேன்.அதுவும் வெளி வரவேண்டியுள்ளது.

‘தண்ணி வண்டி’ பாடல் வாய்ப்பு மோசஸ் அவர்கள் மூலமாக கிடைத்தது.
ஒரு இரவில் 11 மணிக்கு டியூன் அனுப்பி எழுதப்பட்டது.

எனது பாடல் பயணத்தில் ஒரு நண்பனாகவும் விலகாத பயணத்தின் வழிப் போக்கனா கவும் மோசஸ் அவர்கள் இருப்பதாக உணர்கிறேன்.
இசையை உணர்ந்து அவர் நினைக்கும் வரிகள் வரும் வரை சமரசம் செய்யாத தன்மையும் இந்த வெற்றிக்கு காரணமாக உணர்கிறேன்.

அவரால்தான் இயக்குநர் மாணிக்க வித்யா அறிமுகம் கிடைத்தது.வரிகளின் ரசனைக் காரராக வேலை வாங்குவதில் கண்டிப்பானவராகவும் இருந்ததும் இந்த வெற்றிக்கு காரணம் எனலாம்.

தயாரிப்பாளர் சரவணன் அவர்கள் நேரில் வாழ்த்திய நிமிடம் என் வாழ்வில் மறக்க முடியாதது.

பாடலை முழுமையாகக் கேட்டு மனதார இயக்குநர் கே.பாக்யராஜ் சார் பாராட்டினார். அது ஆஸ்கார் விருது போல் பெருமைப்பட வைத்தது.பாக்யராஜ் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

இயக்குநர் விஜய் மகேந்திரன் அவர்கள் பாடல் வரிகளையும் இசையையும் பாராட்டி வாழ்த்தியதை எனக்கு கிடைத்த பூங்கொத்தாகக் கருதுகிறேன்.

அண்ணாதுரை இயக்குநர் சீனிவாசன்
ஸ்டான்லி , அனிஸ், அனந்த் ராஜ் என நிறைய இயக்குநர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

அறிவுமதி அய்யாவின் பாடல் பற்றிய பாராட்டுதலும்
அப்பாவுக்கு எதுக்கு நன்றி என்ற வாஞ்சயும் கண்களில் கண்ணீர் வரவழைத்தனர்.

எண்ணம்தான் வாழ்க்கை என்பது நான் எங்கு சென்றாலும் என் பாடல் என்னை விட்டு விலகாது என்பதை இத்தருணம் உணர்த்துகிறது.
எப்போதும் என்னோடு இருக்கும் தோழி செந்தமிழ் கோதைக்கு நன்றி.

இன்னும் என்னை இயங்க வைக்கும் என் கல்லூரி SDNB வைணவ கல்லூரிக்கும் நன்றி.

lyricist kathir mozhi talks about mysskin

More Articles
Follows