ஆதிராஜனின் அருவா சண்ட பட டீசரை அமீர் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து ஆதிராஜன் எழுதி இயக்கும் ‘அருவா சண்ட’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

புதுமுகம் ராஜா நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, மதுரை சுஜாதா, காதல் சுகுமார், விஜய் டிவி சரத் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.

இந்தப்படம் காதல் சண்டையையும், கபடிச் சண்டையையும் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

தரண் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார்.

கௌரவக் கொலைகளின் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் கல்லேரி கலை அமைக்க, வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார்.

பரபரப்பான திரைக்கதையோடு உருவாகும் ‘அருவா சண்ட’ படத்தின் டீஸரை, இயக்குநர் அமீர் வெளியிட்டார். ’டீஸர் நன்றாக இருக்கிறது,

படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்” என்று அமீர் பாராட்டினார். ஒயிட் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை வி.ராஜா தயாரித்திருக்கிறார்.

Director Ameer launch Adhirajans Aruva Sanda movie teaser

மக்கள் மன்றத்தை பலப்படுத்த அரசியல் கதையில் ரஜினி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 25 வருடங்களாக சினிமாவில் அரசியல் வசனம் பேசினார் ரஜினிகாந்த்.

எனவே அவரின் அரசியல் பிரவேசம் இந்த ஆண்டுகளில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போதுதான் அதற்கான நேரம் அமைந்துள்ளதாக கூறி, காலத்தின் கட்டாயத்தால் அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்தார் ரஜினிகாந்த்.

அதன்படி இத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனது ரசிகர் மன்றங்களை அதிரடியாக ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்படுவதாக அறிவித்தார்.

இவரின் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 மற்றும் காலா படங்கள் இந்தாண்டுக்குள் வெளியாகவுள்ளன.

எனவே தனது மன்றத்தை பலப்படுத்தும் விதமாகவும் இன்றைய அரசியலுக்கு ஏற்ப ஒரு கதையை தயார் செய்ய சொல்லியிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அது சங்கர் இயக்கும் முதல்வன்2 படமாக கூட இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Superstar Rajini going to act in Political story soon

பொங்கல் தினத்தில் கபாலி-மெர்சல் படங்களின் மெகா விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016ல் ரஜினி நடித்த கபாலி படம் வெளியாகி தமிழ் சினிமா வரலாற்றில் சாதனை படைத்தது.

அதுபோல் 2017ல் வெளியான விஜய்யின் மெர்சல் படம் வசூல் சாதனை படைத்தது.

தற்போது 2018 பொங்கல் தினத்தில் இந்த இரு நடிகர்களும் தங்கள் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து தரவுள்ளனர்.

மெர்சல் படம் ஜனவரி 14ல் ஜீ டிவியில் மாலை 4 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது.

அதுபோல் ஜனவரி 15ல் கபாலி படம் சன் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது.

On 2018 Pongal days Kabali and Mersal movies will be telecasted in Channels

சிம்பு-ஓவியா மேரேஜ் போட்டோ; பெயரை கெடுக்கும் விஷமிகளால் டென்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது அதில் பங்கேற்ற ஆரவ்வை காதலிப்பதாக ஓவியா அறிவித்தார்.

ஆனால் அந்த காதல் முறிந்துபோனாலும், ஓவியாவுக்கு ரசிகர்கள் அதிகளவில் குவிந்தனர்.

இந்நிலையில் இந்த புத்தாண்டு தொடக்கத்தின் போது சிம்பு இசையில் ஓவியா பாடிய மரண மட்டை என்ற ஆல்பம் வெளியானது.

இது ரசிகர்கள் மத்தியில் பாப்புலராகி வரும் நிலையில் திடீரென சிம்புவும் ஓவியாவும் திருமணம் செய்துக் கொண்டதுபோல ஒரு போட்டோ இணையத்தில் வெளியானது.

இது முற்றிலும் கிராபிக்ஸ் செய்த படம் என்பது தெளிவாகிவிட்டது.

ஆனால் வேலை வெட்டி இல்லாமல் இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபடும் அந்த கிராபிக்ஸ் விஷமிகளால் இரு தரப்பும் டென்ஷனில் இருக்கிறதாம்.

Simbu Oviya marriage edited photo goes viral

ரஜினி அரசியல் டயலாக்கை பாடலாக்கிய கமல் அண்ணன் சாருஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார் ரஜினி.
அப்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார்.
அந்த பேச்சின் போது… மீடியாக்களைப் பார்த்துதான் தனக்குப் பயம் என்றும், மைக்கை நீட்டி, ‘உங்க கொள்கைகள் என்ன?’னு ஒருத்தர் கேட்டார். என்னது கொள்கைகளா? எனக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு…’ சின்ன பசங்க… என்று நகைக்சுவையாக பேசினார்.

ரஜினியின் இந்த வார்த்தையை பலரும் விமர்சித்து பேசியிருந்தனர்.

அப்போது ‘எனக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு’ என்ற இந்த வார்த்தையும் இணையத்தில் டிரெண்டானது.

இந்நிலையில், இந்த டயலாக்கையும் திரையுலகினர் விட்டுவைக்கவில்லை.

இந்த வார்த்தையை வைத்து ஒரு பாடலையும் உருவாக்கிவிட்டனர்.

கமல் அண்ணன் சாருஹாசன் நடித்துள்ள தாதா 87 படத்தில் இந்த வார்த்தையை வைத்து ஒரு புரோமோ பாடலை உருவாக்கியுள்ளார் இப்பட இயக்குனர் விஜய் ஸ்ரீ.

இப்பாடலுக்கு லியாண்டர் லீ இசையமைக்க, ஜனகராஜ் மகன் நவீன் ஜனகராஜ் பாடியுள்ளார்.

பொங்கல் விருந்தாக இப்பாடல் வெளியாகவுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தில் ஜனகராஜ் நடிக்கிறார்.

நீயா? நானா? கோபிநாத்தின் மண்ட பத்தரம்; கைகொடுத்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் தனக்கான ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர்களில் முக்கியமானவர் நீயா நானா கோபிநாத்.

சின்னத்திரை நிகழ்ச்சிகள் தவிர இவர் புத்தகங்களும் எழுதி வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியிருந்தார்.

வாங்காதீங்க சொன்னாலும் நாங்க வாங்குவோம்ல என பலரும் இந்த புத்தகத்தை வாங்க விற்பனையில் சாதனை படைத்தது.

அண்மையில் மற்றொரு புத்தகம் எழுதியுள்ளார்.

அந்த புத்தக தலைப்பை ரசிகர்களே தேர்வு செய்யலாம் என தெரிவித்திருந்தார்.

அதன்படி ரசிகர்கள் தேர்வு செய்த புத்தக பெயரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

அந்த புத்தகத்திற்கு மண்ட பத்திரம் என பெயரிட்டுள்ளார்.

இந்த புத்தகம் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

Actor Suriya launched Anchor Gopinaths Manda Patharam book

Suriya Sivakumar
‏Verified account @Suriya_offl

‘Some Books leave us free and some Books make us free’ -RalphEmerson. Glad to launch my good friend @Gobinath_C ‘s next book #MandaPatharam Life’s understandings in simple words, is your strength Gobi Congrats!! #ChennaiBookFair

More Articles
Follows