தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இங்கு பல அரசியல் அதிரடி நிகழ்வுகளுக்கு பஞ்சமிருக்காது. அது பழகி போன ஒன்று.
ஆனால் தற்போது டில்லியில் முதல் முறையாக, டீசல் விலை பெட்ரோலை விட அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது பொதுமக்கள், மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், 18வது நாளாக டெல்லியில் டீசல் விலை 48 காசுகள் உயர்த்தப்பட்டதால், லிட்டர் 79.88 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில் பெட்ரோல் விலை உயர்த்தப்படாததால், லிட்டர் 79.76 ரூபாயாக இருந்தது.
இதன் மூலம் இந்திய வரலாற்றில் முதல்முறையாக பெட்ரோலை விட டீசல் அதிக விலைக்கு விற்பனையானது.
பெட்ரோல் இன்ஜின் கார்களை விட டீசல் இன்ஜின் கார்கள் அதிக மைலேஜ் தரும்.. பராமரிப்பு செலவும் குறைவு..
ஆயுட் காலமும் அதிகமாக இருக்கும்.
அத்துடன் பெட்ரோல் விலையை காட்டிலும் டீசல் விலை எப்போதும் மிக குறைவாக இருக்கும்.
ஆனால் இந்த அதிரடி டீசல் விலை உயர்வால் டீசல் கார் ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.