தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
தற்போது ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில் வருகிற மே 3 வரை இது அமலில் இருக்கும்.
இதனையடுத்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய மாநில அரசுகளுக்கும் மற்றும் சினிமா சங்கங்களுக்கும் ரூ. 1.30 கோடியை நன்கொடையாக கொடுத்தார் நடிகர் விஜய்.
பிரதமர் நிவாரண நிதியாக ரூ.25 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதியாக ரூ.50 லட்சமும், கேரள முதல்வர் நிவாரண நிதியாக ரூ.10 லட்சமும், பெப்சி அமைப்புக்கு ரூ.25 லட்சமும், கர்நாடகா முதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும், ஆந்திரமுதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும், தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும், புதுவை முதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் என பிரித்து கொடுத்திருந்தார்.
இவையில்லாமல் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் விஜய் பணம் அனுப்பியுள்ளதாகவும் மக்களுக்கு நிர்வாகிகள் ரசிகர்கள் உதவி வருவதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 1000 நிர்வாகிகளுக்கு தலா ரூ.5000 அனுப்பியுள்ளதாகவும், (ஆக 50 லட்சம்) இந்த பணத்தின் மூலம் தேவையான மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
Did Vijay gave Corona relief fund to his fans Association