ஐட்டம் பாட்டுக்கு பாலைய்யாவுடன் ஆட தமன்னா கேட்ட சம்பளத்தால் ஆடிப்போன டீம்.; நடிகை விளக்கம்

ஐட்டம் பாட்டுக்கு பாலைய்யாவுடன் ஆட தமன்னா கேட்ட சம்பளத்தால் ஆடிப்போன டீம்.; நடிகை விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகை தமன்னா. இவர் தற்போது நடிகர் ரஜினியுடன் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் தெலுங்கில் பிரபலமான நடிகர் பாலகிருஷ்ணா நடித்து வரும் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆட ரூ.5 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதனால் அவரை படக்குழு நிராகரித்து விட்டதாக செய்திகள் பரவியது.

தற்போது இது போன்ற செய்திகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமன்னா கூறியுள்ளதாவது..

“அணில் ரவி புடி இயக்கத்தில் நடிப்பது பிடிக்கும். மேலும் நடிகர் பாலையா மீது நான் பெரும் மரியாதை வைத்துள்ளேன்.

ஒரு பாடலுக்கு ஆட அதிக சம்பளம் கேட்டதாக ஆதாரமற்ற செய்திகளை தவிர்க்குமாறு நான் ஊடகங்களுக்கு கேட்டுக்கொள்கிறேன்” என தமன்னா விளக்கம் அளித்துள்ளார்.

Did Tamannah demands Rs.5 crore to do a song in balakrishna’s nbk108

என் குருநாதரால் அறிமுகம்.; நல்ல நடிகரை சினிமா இழந்தது.; சரத்பாபு மறைவுக்கு கமல் இரங்கல்

என் குருநாதரால் அறிமுகம்.; நல்ல நடிகரை சினிமா இழந்தது.; சரத்பாபு மறைவுக்கு கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரத்பாபு.

தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே இவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இன்று மே 22ஆம் தேதி சிகிச்சை பலனின் நடிகர் சரத்பாபு காலமானார்.

அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து நடிகரும் மநீம கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தன் இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவரின் அந்த பதிவில்…

“சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்.

காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது.அவருக்கு என் அஞ்சலி” என பதிவிட்டுள்ளார்.

Kamal Haasan pays tribute to actor Sarath Babu

AK MOTO RIDE நடிகர் அஜித்குமார் தொடங்கிய புதிய அமைப்பு

AK MOTO RIDE நடிகர் அஜித்குமார் தொடங்கிய புதிய அமைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவர் சினிமா மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு துறைகளில் ஆர்வம் கொண்டவர்.

பைக் ரேஸ், ஃபார்முலா கார் ரேஸ், விமானம் ஓட்டுதல், பைக்கில் உலகம் சுற்றுதல், சமையல் கலை, துப்பாக்கி சுடுதல், போட்டோகிராஃபி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இவர் தனித்திறமை வாய்ந்தவர்.

ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தை தொடங்குவதற்குள் பைக் எடுத்துக் கொண்டு ஊர் முழுக்க சுற்றி வருவது இவரது வழக்கம்.

இந்த நிலையில் இவர் பைக் ரைடருக்கு ஒரு புதிய அமைப்பை தொடங்கியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு…

இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன்: ‘வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்’.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் *ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride)* என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும்.

பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்து, உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு வழங்கும்.

தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள்.

*வாழு வாழ விடு*

– *அஜித்குமார்*

AK MOTO RIDE is a new organization started by actor Ajith Kumar

சூப்பர் ஸ்டாருக்கு 1.. உலகநாயகனுக்கு 2.; ரி-ரீலீஸ் போட்டியில் மோதும் கமல் – ரஜினி

சூப்பர் ஸ்டாருக்கு 1.. உலகநாயகனுக்கு 2.; ரி-ரீலீஸ் போட்டியில் மோதும் கமல் – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2006-ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் ‘வேட்டையாடு விளையாடு’.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இப்படத்தை மாணிக்கம் நாராயணன் தயாரித்திருந்தார்.

இப்படத்தில் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட பலர் நடிப்பில் வெளியானது.

இந்நிலையில், கமல் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் ரீ ரிலீஸ் வரும் ஜூன் மாதம் செய்யவுள்ளதாக வெளியான அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடைய செய்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்யவுள்ளதாக தயாரிப்பாளர் எஸ் தானு தெரிவித்திருந்தார்.

மேலும், ரஜினி கடந்த வருடம் 2022 ஆம் ஆண்டு தன்னுடைய ‘பாபா’ படத்தை ரீ ரிலீஸ் செய்தார்.

பல திரையரங்குகளில் இந்த படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியது.

இதன்மூலம் தோல்வி படம் என சொல்லப்பட்ட ‘பாபா’ படத்தை வெற்றி படமாக்கி இருந்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டையாடு விளையாடு

kamal haasan’s vettaiyadu vilaiyadu to rerelease from june

இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான ராஜ் மரணம்.; நடந்தது என்ன?

இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான ராஜ் மரணம்.; நடந்தது என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட இசையமைப்பாளர்களான, தோட்டகுரு சோமராஜு மற்றும் சலூரி கோட்டேஷ்வர் ராவ் ஆகியோர் ‘ராஜ்-கோடி’ என்ற பெயரில் இசை ஆர்வலர்களுக்கு அறிமுகமானவர்கள்.

90 காலக்கட்டத்தில் தென்னிந்திய இசையமைப்பாளர்களில் பிரபலமான ஒருவராக திகழ்ந்த இரட்டை இசையமைப்பாளர்கள் ‘ராஜ்-கோடி’.

இருவரும் சுமார் 180 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

ராஜ் – கோடி இசையில் வெளியான 3000 பாடல்களில், சுமார் 2,500 பாடல்களை பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் கே.எஸ்.சித்ரா ஆகியோர் பாடியுள்ளனர்.

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் ஆரம்ப காலத்தில் இசையமைப்பாளர்கள் ராஜ்-கோட்டி இசைக் குழுவில் 8 ஆண்டுகள் கீ-போர்டு பிளேயராக வேலை பார்த்து வந்த ரஹ்மானை கை தூக்கிவிட்டவர் இசையமைப்பாளர் ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் ராஜ் ஹைதராபாத் குகட் பாலியில் உள்ள ஃபோரம் மால் அருகே வசித்து வருகிறார்.

கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த ராஜ்.

இந்நிலையில், வீட்டில் இருந்த ராஜ் நேற்று குளியலறையில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மயக்கமான அவரை மீட்டு குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இசையமைப்பாளர் ராஜை பரிசோதித்த மருத்துவர்கள், விழுந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இசையமைப்பாளர் ராஜ் மறைவுச் செய்திக் கேட்டு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ராஜின் இறுதி சடங்குகள் ஹைதராபாத்தில் உள்ள மகாபிரஸ்தானத்தில் இன்று நடைபெறுகிறது.

telugu music director raj passes away

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத்பாபு; உண்மையாக்கிய ஹைதராபாத்  டாக்டர்கள்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத்பாபு; உண்மையாக்கிய ஹைதராபாத்  டாக்டர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழம்பெரும் தென்னிந்திய திரைப்பட நடிகர்களில் ஒருவர் சரத் பாபு.

நடிகர் சரத்பாபு கடந்த மாதம் 20-ஆம் தேதி ஐதராபாத்தில் கச்சிபௌலி எனும் இடத்தில் உள்ள தனியார் அனுமதியில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

சரத்பாபுவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

இப்படியொரு சூழலில் நேற்று ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

கமல், குஷ்பு உள்பட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அது வதந்தி என சரத்பாபுவின் சகோதரர் மகன் ஆயுஷ் தேஜாஸ் மற்றும் உறவினர்கள் சொன்னபிறகே பொய் ஊடகங்கள் அமைதி காத்தன.

இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நடிகர் சரத்பாபு இன்று மே 22ம் தேதி காலமானார். அவருக்கு வயது71.

மேலும், நடிகர் சரத்பாபு இன்று இறந்ததால் ஏற்கனவே, வந்த வதந்திகளுக்கு சரத்பாபு முற்றுப்புள்ளி வைத்ததாகவும் அதனை ஹைதராபாத் டாக்டர்கள்  உண்மையாக்கியதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Sarathbabu put an end to rumours, Hyderabad doctors made it come true

More Articles
Follows