தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த சில நாட்களாகவே வடமாநிலங்களை மழை அச்சுறுத்தி வருகிறது.
உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெய்த கனமழையினால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
மேலும் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தொலை தொடர்பு சாதனங்கள் செயல் இழந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சத்ரா பகுதியில் கயாட்டம் என்ற மலையாள படக்குழுவைச் சேர்ந்த 30 பேர் சிக்கியுள்ளனர். இதில் நாயகியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.
இவர் தான் தற்போது தனுஷ் நடித்து வரும் அசுரன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் தனுஷை விட வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை மஞ்சுவாரியர் சேட்டிலைட் தொலைபேசி மூலம் தனது சகோதரரை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கூறினாராம்.
இதனையடுத்து அவரது சகோதரர் கேரளாவை சேர்ந்த மத்திய மந்திரி முரளிதரனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அவர் இமாச்சலப் பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாகூருக்கு தகவல் கூற தற்போது படக் குழுவினரை மீட்டுள்ளனர்.
நிலைமை சீரானதை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
Dhanushs Asuran movie heroine Manju Warrier stuck in flood