பொங்கல் விருந்தாக டபுள் ட்ரீட் வைக்கும் நடிகர் தனுஷ்

பொங்கல் விருந்தாக டபுள் ட்ரீட் வைக்கும் நடிகர் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanushபொங்கல் விருந்தாக விஜய்யின் மாஸ்டர் & சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது.

ஜெயம் ரவியின் பூமி படம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் தன் ரசிகர்களுக்கு தனுஷும் விருந்து வைக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய பட டைட்டில் டீசர் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த டீசர் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறதாம்.

மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ டிரைலரும் பொங்கல் தினத்தன்று தியேட்டர்களில் ரிலீசாகும் எனச் சொல்லப்படுகிறது.

Dhanush treat to his fans on pongal

விஜய்யை பார்க்க ஆசைப்பட்ட விஜய்சேதுபதியின் அம்மா..; மனம் குளிர பேசிய தளபதி

விஜய்யை பார்க்க ஆசைப்பட்ட விஜய்சேதுபதியின் அம்மா..; மனம் குளிர பேசிய தளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi motherலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா, கௌரி, ஆண்ட்ரியா, சாந்தனு ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் சென்சார் செய்யப்பட்டு ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி தமிழ், ஹிந்தி & தெலுங்கு மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்த நிலையில் ஒரு பிரபல பத்திரிகைக்கு விஜய் உடன் நடித்த அனுபவம் பற்றி விஜய்சேதுபதி பேட்டி கொடுத்துள்ளார்.

அதில்… “விஜய் சார் சாதாரண விஷயம்கூட பெருசா பேச மாட்டார். ‘ஏன் சார், பேசவே மாட்டேங்கிறீங்க’ன்னு கூட அவர்கிட்ட கேட்டுட்டேன். அவர் இயல்பு அப்படி என்பதை தெரிஞ்சிக்கிட்டேன்.

என் அம்மா விஜய் சாரைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க. எனக்கே அது ஆச்சர்யமாத்தான் இருந்துச்சு.

ஷூட்டிங் ஸ்பாட் கூட்டிவந்து, அவருடன் போட்டோ எடுக்கவெச்சேன்.

‘என் பையன் ஒழுங்கா வேலை பார்க்கிறானா’ன்னு அம்மா கேட்டாங்க. அவங்க மனசு குளிருற அளவுக்குப் பேசிட்டார். விஜய் சார், ரொம்ப நன்றி சார்.”

இவ்வாறு அந்த பேட்டியில் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதி #master #MasterFilm

Vijay Sethupathi on his mother meeting Thalapathy Vijay

அறவழிப் போராட்டம் வேண்டாம் Vs வேண்டும்..; உடையும் ரஜினி சாம்ராஜ்யம்..? டேமேஜ் ஆன இமேஜ்ஜை சரி செய்வாரா சூப்பர் ஸ்டார்..?

அறவழிப் போராட்டம் வேண்டாம் Vs வேண்டும்..; உடையும் ரஜினி சாம்ராஜ்யம்..? டேமேஜ் ஆன இமேஜ்ஜை சரி செய்வாரா சூப்பர் ஸ்டார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் தன் உடல்நிலை காரணமாகவும் அரசியல் பிரவேசத்தில் இருந்து பின் வாங்கினார் நடிகர் ரஜினிகாந்த்.

தன் உடல்நிலையை கவனிக்கும் மருத்துவர்களின் அறுவுறுத்தலைத் தொடர்ந்து கட்சி ஆரம்பிக்கும் முடிவை திரும்பப் பெறுவதாக நீண்ட அறிக்கையாக தெரிவித்தார் ரஜினி.

இதனால் தங்களின் 25 ஆண்டு கனவு கோட்டை நொறுங்கிவிட்டதாக ரஜினி ரசிகர்களும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.

தங்களுக்கு அரசியல் ஆசை காட்டி மோசம் செய்துவிட்டதாகவும் அவரை மீண்டும் அரசியலுக்கு அழைக்கவும் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வருகிற ஜனவரி 10-ம் தேதி வள்ளுவர் கோட்டம் “அறவழிப் போராட்டத்துக்கு ரஜினி ரசிகர்கள்” அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் விடுத்துள்ள அறிக்கையில்:

”ரஜினி ரசிகர் மன்றத்தினர், மக்கள் மன்றத்தினருக்கு வணக்கம்.

நமது தலைவர் தன்னுடைய உடல்நிலை குறித்தும் மருத்துவர்கள் ஆலோசனைகளை மீறி அரசியலுக்கு வந்தால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் மூலம் தன்னை நம்பிவரும் மக்கள் துன்பப்படக்கூடாது என்ற நல்லெண்ணப்படியும்தான் அரசியலுக்கு வரமுடியாத சூழல் குறித்து நம் அன்புத் தலைவர் வெளிப்படையான தெளிவான அறிக்கை ஒன்றைக் கொடுத்திருந்தார்.

அதன் பின்னரும் அவரை அரசியலில் ஈடுபடச் சொல்லி கட்டாயப்படுத்துவதற்காக போராட்டங்களில் ஈடுபடச்சொல்லி கட்டாயப்படுத்துவதற்காக போராட்டங்களில் ஈடுபடப் போவதாக சில ரசிகர்கள் பேசிவருவது அவரை மேலும் நோகடிக்கச் செய்யும் செயல்.

*இந்தப் போராட்டத்திற்காக ஒரு சிலர் அதற்கான செலவுக்கென்று கூறி நிதி வசூல் செய்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது மிகவும் வருந்தத்தக்கது.*

நம் தலைவரின் மீது அன்பும் அவர் நலனில் அக்கறையும் கொண்ட நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்களும் ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு சுதாகர் தன் கைப்பட கடிதம் எழுதி அறிக்கையாக வெளியிட்டார்.

இது வெளியான சில மணி நேரங்களில்… “தலைவரை அரசியலுக்கு அழைக்கும் நாங்கள் நிதி வசூல் செய்கிறோமா? என ரஜினி ரசிகர்கள் ஆவேசமடைந்தனர்.

இதனையடுத்து.. “நிதி வசூல் என்கிற எனக்கு வந்த செய்தியை அறிக்கையாக வெளியிட்டேன். அது அனைத்து ரஜினி ரசிகர்களையும் குறிப்பிடுவதாக சிலர் திசை திருப்புகின்றனர்.

யார் மனமாவது புண்பட்டு இருந்தால் அதற்கு நான் வருந்துகிறேன்” என தன் ட்விட்டரில் மன்னிப்பு கடிதம் வெளியிட்டார் சுதாகர்.

ஆனாலும் “ஜனவரி 10ல் அறவழிப் போராட்டம்” நடந்தே தீரும் என ரஜினி ரசிகர்கள் சென்னையை நோக்கி புறப்பட்டு வருகின்றனர்.

ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள் போராட்டம் வேண்டும் எனவும் மறுபக்கம் ரஜினி மன்றத்தினர் போராட்டம் வேண்டாம் எனவும் பிளவுப்பட்டு நிற்கின்றனர்.

தானா சேர்ந்த ரஜினி சாம்ராஜ்யம் சரிந்து விழுகிறதா? என்கிற சந்தேகம் தற்போது நடுநிலையார்களுடன் எழத் தொடங்கியுள்ளது.

45 ஆண்டுகளில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட ரஜினி இமேஜ் தற்போது டேமேஜ் ஆகி வருவதை சூப்பர் ஸ்டார் சரி் செய்வாரா? என்பதை பார்ப்போம்.

Wll rajinikanth breaks his silence ?

VOTE FOR THE RIGHT CANDIDATE..; விஜய்யின் ‘மாஸ்டர்’ ப்ளான் பிரச்சாரம்

VOTE FOR THE RIGHT CANDIDATE..; விஜய்யின் ‘மாஸ்டர்’ ப்ளான் பிரச்சாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா, கௌரி, ஆண்ட்ரியா, சாந்தனு ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.

இப்படம் தணிக்கை செய்யப்பட்டு ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி தமிழ், ஹிந்தி & தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

ஹிந்தியில் ‘விஜய் தி மாஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தினமும் மாலை 6 மணிக்கு 20 நொடி புரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் மாஸ்டர் பட ஸ்டில்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

ஒரு ஸ்டில்லில்.. “VOTE FOR THE RIGHT CANDIDATE” என்ற வாசகம் உள்ளது. இது கல்லூரி தேர்தல் காட்சி போல உள்ளது.

இன்றைய புரோமோ வீடியோவில்… “அரசியல் கட்சி ஆளுங்க காலேஜ்க்குள் நுழைந்து விட்டதாக டயலாக் வருகிறது. எனவே அவர்களை அடித்து விரட்டிவிட காலேஜ் புரபொஷர் விஜய் விரைந்து செல்வதாக காட்சிகள் உள்ளது.

எனவே இதில் அரசியல் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என நம்பலாம்.

Master Vijay

Thalapathy Vijay’s political scenes in Master

‘ரவுடி பேபி’ படத்தில் சந்தீப் கிஷனை மிரட்டும் வில்லனாக பாபி சிம்ஹா

‘ரவுடி பேபி’ படத்தில் சந்தீப் கிஷனை மிரட்டும் வில்லனாக பாபி சிம்ஹா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bobby Simhaதெலுங்கு சினிமா படத்தில் பிரபலமான நடிகர் சந்தீப் கிஷன் ‘யாரு டா மகேஷ்?’ என்ற பட மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.

அதன் பின் ‘மாநகரம்’, கண்ணாடி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்து தமிழக மக்களிடம் பிரபலமானார்.

தற்போது தெலுங்கு சினிமாக்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

ஹிப் ஹாப் ஆதியின் ‘நட்பே துணை’ என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கை தயாரித்து நாயகனாக நடித்துள்ளார் சந்தீப் கிஷன்.

இந்த படத்திற்கு தெலுங்கில் ‘ஏ1 எக்ஸ்பிரஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளனர்.

இப்படத்தைத் தொடர்ந்து, கோனா வெங்கட் தயாரிப்பில் ஜி.நாகேஸ்வர ரெட்டி இயக்கத்தில் உருவாகும் ‘ரவுடி பேபி’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சந்தீப் கிஷன்.

இப்படத்துக்கு செளவ்ரஷ்டா ராம் என்பவர் இசையமைக்கிறார்.

தற்போது இப்பட வில்லனாக பாபி சிம்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் போலீஸ் அதிகாரியாக என்கௌண்டர் ரவி என்ற கேரக்டரில் நடிக்கிறார்.

‘டிஸ்கோ ராஜா’ என்ற தெலுங்குப் படத்தில் ஏற்கெனவே பாபி சிம்ஹா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bobby Simha plays antogonist in Rowdy Baby

தியேட்டர்களில் 50% சீட் அனுமதியென்றால் ‘மாஸ்டர்’ மட்டுமே ரிலீஸ்.; சிக்கலில் ‘ஈஸ்வரன்’.? யார் சொன்னாங்க தெரியுமா?

தியேட்டர்களில் 50% சீட் அனுமதியென்றால் ‘மாஸ்டர்’ மட்டுமே ரிலீஸ்.; சிக்கலில் ‘ஈஸ்வரன்’.? யார் சொன்னாங்க தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் மாதம் 17ந் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு கடந்தாண்டு தீபாவளி சமயத்தில் நவம்பர் 10 முதல் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து திரையரங்குகளை திறக்க அனுமதியளித்து உத்தரவிட்டது.

அப்போது 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டது.

எனவே இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டியும் இருக்கையில் தடுப்பு வைத்தும் தடுத்து வைத்தும் தியேட்டர்கள் இயங்கி வந்தன.

இதனால் சிறிய படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ரிலீசாகின.

இந்த நிலையில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என விஜய், சிம்பு உள்ளிட்ட திரையுலகினர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்

இவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு முன்பே மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளதை சமூக ஆர்வலர்கள் எதிர்த்தனர்.

தியேட்டர்கள் மூடிய அரங்கு என்பதால் இது ஆபத்தானது. அங்கு கொரோனா எளிதில் பரவும் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

தமிழக அரசின் உத்தரவை மத்திய அரசின் உள்துறை அமைச்சகமும் கண்டித்துள்ளது.

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன்.?

கொரோனா தடுப்புக்கான மத்திய அரசின் வழிகாட்டு விதிகளுக்கு ஏற்ப புதிய உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்… ” 100% ரசிகர்கள் அனுமதி என்ற உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற்றால் ‘மாஸ்டர்’ படம் மட்டுமே வெளியிடப்படும்.

ஒருவேளை விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் தள்ளிப் போனால் மட்டுமே சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படம் தியேட்டர்களில் வெளியிட முடியும்” இவ்வாறு திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu theatre owners’ association head Tiruppur Subramaniam has said they will give first preference for Thalapathy in Master

tirupur subramaniam

More Articles
Follows