தனுஷுக்கு ஜிவி. பிரகாஷ்.; ஜிவி.க்கு தனுஷ்..; அடடே.. என்ன ஒரு காம்பினேசன்.!

தனுஷுக்கு ஜிவி. பிரகாஷ்.; ஜிவி.க்கு தனுஷ்..; அடடே.. என்ன ஒரு காம்பினேசன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷின் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஜிவி. பிரகாஷ்.

அண்மையில் வெளியான தனுஷின் அசுரன் பட வெற்றிக்கு முக்கிய காரணங்களில் பின்னணி இசையும் ஒன்று.

இந்த நிலையில் தற்போது இந்த காம்போ மீண்டும் இணைந்துள்ளதாக ஜி.வி தெரிவித்துள்ளார்.

“ஜெயில் படம் நன்றாக வந்துள்ளது. மிக விரைவில் வெளிவரும்.

இப்படத்தில் “காத்தோட….” எனும் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்,

இப்பாடலும் விரைவில் வெளிவரும்” என தெரிவித்துள்ளார்.

Dhanush sung in GV Prakash Jail

விஜய் ரசிகர்கள் இல்லாமல் ‘மாஸ்டர்’ இசை விழா.; சன் டிவியில் லைவ்.!

விஜய் ரசிகர்கள் இல்லாமல் ‘மாஸ்டர்’ இசை விழா.; சன் டிவியில் லைவ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அண்மையில் இப்பட படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக படக்குழு அறிவித்தது.

இதையடுத்து மார்ச் மாதம் முழுக்க மாஸ்டர் படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

ஏப்ரல் 9-ம் தேதி படத்தைத் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கெனவே குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மார்ச் 15-ம் தேதி மாலை 6.30 மணிக்கு படத்தின் இசைவெளியீட்டு விழா நேரலையாக ஒளிபரப்படும் என சன்டிவி அறிவித்துள்ளது.

இவ்விழாவில் திரைத்துறை பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

விஜய் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்படுகிறது. ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் விழா நடைபெறும் எனத் தெரிகிறது.

Vijays Master Audio launch on 15th March Sun Tv Live show

பின்னணி இசை கோர்ப்பு பணிக்காக சிங்கப்பூர் பறந்த ‘பப்ஜி’ டைரக்டர் விஜய்ஸ்ரீ.

பின்னணி இசை கோர்ப்பு பணிக்காக சிங்கப்பூர் பறந்த ‘பப்ஜி’ டைரக்டர் விஜய்ஸ்ரீ.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ புகழ் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள கிரைம் திரில்லர் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

தற்போது இணையதளத்தில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரு இணைய விளையாட்டு எப்படி இளைஞர்களின் வாழ்வோடு விளையாடி வருகிறது என்பதை நாம் செய்திகளில் படித்துவரும் இந்த வேளையில், முற்றிலும் புதிய கோணத்தில் அந்த விளையாட்டையும் ஒரு பாத்திரமாகக் கொண்டு, ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா தத்தா, மைம் கோபி, மொட்ட ராஜேந்திரன், அனித்ரா நாயர், ‘நாடோடிகள்’ சாந்தினி, ஆராத்யா, சான்டிரியா, ஜூலி, ஆதித்யா கதிர், யோகி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவில், சி எஸ் பிரேம்குமார் படத்தொகுப்பை கவனிக்க, ‘தாதா 87’ திரைப்படத்திற்கு இசையமைத்த லியாண்டர் லீ மார்ட்டி இப்படத்திலும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.

ஒரு கிரைம் திரில்லராக உருவாகிவரும் இந்த படத்திற்கு பின்னணி இசையின் முக்கியத்துவம் கருதி, இசை கோர்ப்பு மற்றும் ஒலிப்பதிவு பணிகள், சிங்கப்பூரில் உள்ள அதி நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட ஆர்டன்ட் ஸ்டுடியோவில், பிரபல ஒலிவல்லுநர் டேனியல் வாங் முன்னிலையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ புகழ் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவுபெற்றிருக்கும் நிலையில், இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படம் வருகின்ற கோடை விடுமுறை கால வெளியீடாக அமையும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

Pubg director Vijay Sri fly to Singapore for Music score

அஜித் பெயரில் பேஸ்புக் அக்கௌண்ட்; அறிக்கை வெளியிட்ட தல.!

அஜித் பெயரில் பேஸ்புக் அக்கௌண்ட்; அறிக்கை வெளியிட்ட தல.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித்… தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவர்.

இவர் தன் பட விழாக்களில் கூட கலந்துக் கொள்ள மாட்டார். ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட எந்த சமூக வலைத்தளத்திலும் இவர் இல்லை.

இந்த நிலையில் அஜித் பெயரில் பேஸ்புக் கணக்கு ஒன்று இன்று தொடங்கப்பட்டுள்ளது.

அதில் அஜித்குமாரின் அறிக்கை போல ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில்… நான் பல வருடங்களுக்கு முன் அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் ஒதுங்கி இருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன்.

இதற்கான காரணங்களை பலமுறை நான் தெரிவித்திருந்தேன்.

இந்நிலையில் மீண்டும் சமூக வலைத்தளத்தில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.

அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என் உத்தியோகபூர்வ முகப்புத்தகம் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, இதன் மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம்.

மேலும் இதை காரணமாக வைத்து சமூக வலைத்தளங்களில் எனது ரசிகர்கள் எந்தவிதமான தவறான செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

அதில் அஜித்குமாரின் கையெழுத்தும் உள்ளது.

இதையடுத்து மகிழ்ச்சியில் தல அஜித் ரசிகர்கள் ஏராளமானோர் இதில் இணைந்தனர்.

இந்நிலையில் அஜித் தரப்பில் அவரது வழக்கறிஞர் MS பரத் அவர்கள் அது போலியான பேஸ்புக் கணக்கு என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்க இருக்கிறார்களாம்.

Ajiths legal statement regarding his fake FB account

IMG_20200307_162252

அதர்வா முரளியின் புதிய படத்தில் இணையும் நடிகை லாவண்யா திரிபாதி !

அதர்வா முரளியின் புதிய படத்தில் இணையும் நடிகை லாவண்யா திரிபாதி !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atharvaa murali and lavanya tripathiஅதர்வா முரளி நடிப்பில் புதுமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நாயகியாக நடிகை லாவண்யா திரிபாதி
ஒப்பந்தமாகியுள்ளார்.

படம் குறித்து இயக்குநர் ரவீந்திர மாதவா கூறியது…

எங்கள் படத்திற்கு ஹீரோயின் தேர்ந்தெடுப்பது என்பது மிகக் கடினமான பணியாக இருந்தது. இப்படத்தின் நாயகி பாத்திரத்தை முழுமையாக வடிவமைத்த பிறகு இக்கதாப்பாத்திரத்தில் நடிக்க நல்ல கவர்ச்சியான, மென்மை மிகுந்த நேர்த்தியான, நாயகியாக இருக்க வேண்டும் தேடினோம். அதே நேரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கும் திறமையும் வேண்டும் என்று நினைத்தோம். கண்மூடித் திறக்கும் நேரத்தில் வந்து போகக்கூடிய பாத்திரம் அல்ல இது. படம் முழுதும் பயணம் செய்யும் அழுத்தமான சக்தி வாய்ந்த பாத்திரம். யோசித்துகொண்டிராமல் தெளிவாக முடிவை எடுக்கும் பாத்திரம். மற்றவர்கள் மீது வலியை திணிக்கும் படத்தின் வில்ல பாத்திரத்தை நேரடியாக கேள்விக்குள்ளாக்கும் கனமான பாத்திரம். இத்தனை குணங்கள் நிறைந்த வலுவான பாத்திரத்திற்கு பல ஹீரோயின்களை யோசித்து அலசி, அவர்களை தேர்வு செய்ய கருத்தில் கொண்டோம். அத்தனையும் கடந்து தான் இறுதியாக லாவண்யா திரிபாதியை இந்த கதாப்பாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தோம். இந்தப்படம் அவருக்கு ஒரு முக்கியமான படமாக இருக்குமென்பது உறுதி என்றார்.

இயக்குநர் ரவீந்திர மாதவா ஒரு MBA பட்டதாரி. புகழ்மிகு இயக்குநர்களான பூபதி பாண்டியன், சுசீந்திரன், கொரட்டால சிவா ஆகியோரிடம் பணியாற்றியவர். இப்படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்கிறார், வில்லனாக நடிக்க, நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது. சக்தி சரவணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை கலை செய்ய, சரவணன் சண்டை பயிற்சி இயக்கம் செய்கிறார். கலை இயக்குநராக ஐயப்பன் பணியாற்றுகிறார்.

பிந்துமாதவி, தர்ஷனா பானிக் நடிக்கும் “யாருக்கும் அஞ்சேல்” !

பிந்துமாதவி, தர்ஷனா பானிக் நடிக்கும் “யாருக்கும் அஞ்சேல்” !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yaarukkum Anjaelஇரண்டே படங்கள் இயக்கியிருந்தாலும், இரண்டிலும் புதுமையான களத்தில் நேர்த்தியான கதை சொல்லலில் ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார். அவர் படங்களை வழங்கும் முறையினை காட்டிலும், அவர் படங்களுக்கு வைக்கும் தலைப்பு அதி அழகாக அனைவரையும் கவர்ந்துவிடுகிறது.

“புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” தலைப்புகள் இளைஞர்கள் மனதை கொள்ளைகொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் தற்போது பிந்து மாதவி, தர்ஷனா பானிக் ஆகியோரை முதன்மை பாத்திரங்களாக வைத்து இயக்கி வரும் திரில்லர் படத்திற்கு என்ன தலைப்பு என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவியது. இந்த நிலையில் லிட்டில் சூப்பரஸ்டார் சிலம்பரசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து இப்படத்தின் தலைப்பான “யாருக்கும் அஞ்சேல்” தலைப்பினை வெளியிட்டுள்ளார்கள். வெளியான நொடியிலேயே அனைவரையும் கவர்ந்து, வைரலாக இத்தலைப்பு பகிரப்பட்டு வருகிறது.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இதுகுறித்து கூறியதாவது…

இந்தப்படத்தில் மிக கடினமாக இருந்தது இப்படத்திற்கு தலைப்பு வைக்கும் பணிதான். பல விதமான தலைப்புகளை அலசி, இறுதியாக “யாருக்கும் அஞ்சேல்” எனும் இத்தலைப்பை தேர்ந்தெடுத்தோம். ரசிகர்கள் முழுப்படத்தினையும் பார்த்து முடிக்கும் போது, இந்த தலைப்பு தான் மிகச்சரியானது என்பதை உணர்வார்கள். படத்தின் தலைப்பை அன்பிற்காக நடிகர் சிலம்பரனும், நடிகர் விஜய் சேதுபதியும் வெளியிட்டது எங்களுக்கு பெரு மகிழ்ச்சி. அவர்கள் வெளியிட்டதால், படத்தின் தலைப்பு பெரிய அளவில் ரசிகர்களை சென்றடைந்துள்ளது என்றார்.

படத்தின் தற்போதைய நிலை குறித்து கூறும்போது…

இப்படத்தின் முழுப்படப்பிடிப்பையும் 30 நாட்களில் ஊட்டியில் முடித்துவிட்டோம். தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வெகு விரைவில் அப்பணிகளும் முடிவடையவுள்ளது.

இரண்டு சகோதரிகள் தங்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை விற்க தங்களது சொந்த ஊருக்கு பயணமாகிறார்கள். அவர்கள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை, அவர்கள் அதை எதிர்கொள்ளும் விதத்தை, உளவியல் ரீதியில் அணுகும் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. சகோதரிகளாக பிந்து மாதவியும் தர்ஷனா பானிக்கும் நடித்திருக்கிறார்கள்.

Third Eye Entertainment சார்பில் தேவராஜுலு மார்க்கண்டேயன் “யாருக்கும் அஞ்சேல்” படத்தை தயாரித்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக், டிரெயல்ர், இசை வெளியீடு மற்றும் திரை வெளியீடு பற்றி மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

More Articles
Follows