‘தலைவா’ பிரச்சினை நமக்கு எதுக்கு..? தனுஷ் டீம் எஸ்கேப்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் விஜய் இணைந்த படம் தலைவா.

இப்படம் வெளியாக முடியாமல் பல பிரச்சினைகள் சந்தித்தது.

எனவே இப்படத்தின் தலைப்பின் கீழ் பயன்படுத்தப்பட்ட TIME TO LEAD (தலைமை ஏற்க இதுவே தருணம்) என்ற வார்த்தையை அகற்றிய பின்னர் படம் வெளியானது.

இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இன்று வரை இதுவரை உறுதியான தகவல்கள் இல்லை.

இந்நிலையில் தனுஷ் நடித்துள்ள கொடி படம் வருகிற அக். 28ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் தெலுங்கு பதிப்பு போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இப்படத்திற்கு தெலுங்கில் தர்மயோகி (தர்ம மகரிஷி) என தலைப்பிட்டு, அதன்கீழ் THE LEADER (தலைவர்) என பெயரிட்டுள்ளனர்.

ஆனால், தமிழில் தலைப்பிற்கு கீழ், எந்தவிதமான வார்த்தைகளும் இடம்பெறவில்லை.

ஒருவேளை தலைவா படத்தின் போது விஜய்க்கு ஏற்பட்ட பிரச்சினை தனக்கு ஏற்பட்டு விடக்கூடாதோ என்பதற்காக, ஆந்திராவில் மட்டும் இப்படி டிசைன் செய்துள்ளார்களோ? என கிசுகிசுக்கப்படுகிறது.

ரஜினியை போல் விஜய்க்கும் மாஸ் காட்டுவாரா வைரமுத்து?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்.ஜி.ஆருக்கு கண்ணதாசன் மற்றும் வாலியின் வரிகள் பெரும் புகழ் சேர்த்தன.

அந்த வகையில், ரஜினிக்கும் வைரமுத்துவின் வரிகள், பக்கபலமாய் அமைந்தன.

இந்நிலையில் பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பைரவா படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறாராம்.

அதில்
‘பட்டைய கிளப்பு, பட்டைய கிளப்பு பைரவா…
பட்டி தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பு பைரவா’ என்ற பாடல் விஜய்யின் அறிமுக பாடலாய் அமைந்துள்ளதாம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்பாடலை மிகப்பிரம்மாண்டமாய் படமாக்கியுள்ளார்களாம்.

ரஜினிக்கு மாஸ் காட்டிய வைரமுத்துவின் வரிகள், விஜய்க்கும் அப்படி அமையுமா என்பதை பொங்கல் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

விஜய்சேதுபதி-டி.ஆர் கூட்டணியில் இணைந்த ‘கெத்து’ நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் இணைந்து நடித்து வரும் கவண்.

இந்த தலைப்பின் விளக்கத்தை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் விக்ராந்தும் நடித்திருக்கிறாராம்.

‘கற்க கசடற’, ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், கெத்து படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இன்று தனுஷ்-சிவகார்த்திகேயன்-அனிருத் சந்திப்பு நடைபெறுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் இந்த பெயர்களை இணையத்தில் டைப் செய்தாலே இவர்கள் மூவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கும்.

ஆனால் இதெல்லாம் சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது.

தற்போது இவர்களின் நட்பு வட்டத்தில் சில விரிசல்கள் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று தனுஷின் ‘கொடி’ படத்தின் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீட்டு விழா ஆந்திராவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெறுகிறது.

இதே இடத்தில் ரெமோ படத்தின் தெலுங்கு பதிப்பின் பிரஸ்மீட்டும் நடைபெறுகிறது.

இதில் சிவகார்த்திகேயன், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.

ஒரே இடத்தில் இரண்டு விழாக்களும் நடைபெறுவதால் இவர்கள் சந்தித்து பேசுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ரஜினியுடன் மீனா நடித்ததை போல, அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஷாலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எங்கேயோ கேட்ட குரல் மற்றும் அன்புள்ள ரஜினிகாந்த் ஆகிய படங்களில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மீனா.

பின்னர் வளர்ந்து குமரியாகி எஜமான், முத்து, வீரா உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்தார்.

இதே போல காதல் மன்னன் படத்தில் அஜித்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாலு.

இவரது சமீபத்திய பேட்டியில் இவர் கூறியதாவது…

“என் அம்மா சொல்லிதான் எனக்கு தெரியும் நான் அஜித் சாருடன் நடித்தேன் என்பதே.

காதல் மன்னன் சூட்டிங்கில் அஜித் என்னை கொஞ்சிக் கொண்டிருப்பாராம்.

தற்போது நான் வளர்ந்து விட்டேன். இப்போது அவருடன் ஒரு சின்ன கேரக்டரிலாவது நடிக்க வேண்டும் என ஆசை வந்துவிட்டது.

அதுபோல் அவரிடம் இந்த ப்ளாஷ்பேக் சொல்லி, அவருடன் ஷெஃல்பி எடுத்துக் கொள்ளவும் ஆசை” என தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதியுடன் கைகோர்க்கும் த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

த்ரிஷா நடிப்பில் நாயகி படம் அண்மையில் வெளியானது. ஆனால் படம் வந்ததா? என்பதே தெரியாத அளவுக்கு ஓடி ஒளிந்துக் கொண்டது.

இதனையடுத்து, விரைவில் கொடி, மோகினி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன.

தற்போது அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ‘சதுரங்கவேட்டை -2’ மற்றும் ‘கர்ஜனை’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் முதன்முறையாக விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

விஜய்சேதுபதி நடித்த, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் பிரேம்குமார்.

இவர் இயக்கவுள்ள ஒரு படத்தில்தான் இந்த ஜோடி இணைகிறது.

More Articles
Follows