தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்பார்கள். ஆனால் தற்போது நம் நாட்டில் அந்த முதுகெலும்பே வளைந்துள்ளது எனலாம்.
அதிலும் தமிழ்நாட்டு விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசம்.
கடந்த 4 மாதங்களாக இவர்களின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய கோரி வினோதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தினம் ஒரு விவசாயி தற்கொலை என்ற செய்திகளை பார்க்க முடிகிறது.
ஒரு சில பிரபலங்கள் இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வறட்சியால் பலியான 125 குடும்பங்களை தேர்ந்தெடுத்து ஒரு குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி செய்துள்ளார் தனுஷ்.
இதற்காக கிட்டதட்ட ரூ. 80லட்சம் முதல் ஒரு கோடி வரை செலவு செய்ய செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தனுஷின் நண்பரும் இயக்குனமான சுப்ரமணிய சிவா மற்றும் தனுஷ் ரசிகர்கள் இதற்கான பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த தொகையை யார் மூலமாகவும் கொடுக்காமல், முதல் கட்டமாக 125 குடும்பங்களை நேரில் வரவழைத்து கொடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கும் இதுகுறித்து தனுஷ் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த உதவியை விளம்பரப்படுத்த வேண்டாம் எனவும் தனுஷ் தரப்பில் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
Dhanush helped 125 farmers family and sponsor Rs 80 lakhs to them