தனுஷின் உதவி முன் உதாரணமாக அமையும்… பிரசன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வறட்சியால் பாதிக்கப்பட்ட 125 விவசாயிகளின் குடும்பத்திற்கு நடிகர் தனுஷ் உதவினார் என்பதை பார்த்தோம்.

ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா ரூ- 50 ஆயிரம் கொடுத்தார். மேலும் தன்னால் முடிந்தவரை இன்னும் செய்வேன் என உறுதியளிந்திருந்தார்.

இந்நிலையில் தனுஷின் இந்த உதவி குறித்து நடிகர் பிரசன்னா தன் ட்விட்டர் பதிவிட்டுள்ளதாவது….

நீங்கள் செய்த உதவி மிகப்பெரியது. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். இது போல் பலரும் உதவி செய்ய இது முன் உதாரணமாக இருக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.

Dhanush help will Inspire many to contribute says Prasanna

Prasanna‏Verified account @Prasanna_actor
God bless @dhanushkraja for his extraordinary gesture to help poor farmers. This will inspire many to contribute. #helpTNfarmers

தல ஸ்பெஷல் நாளில் தளபதி ரசிகர் ஜிவி பிரகாஷ் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் சினிமாவில் நுழைந்து நாளையோடு (ஆகஸ்ட் 3) 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

எனவே இதனை தல ரசிகர்கள் படு உற்சாக கொண்டாடி வருகின்றனர்.

சில தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் கூட திரையிடப்பட உள்ளன.

இந்நிலையில் ஜிவி பிரகாஷ் தான் நடித்துள்ள நாச்சியார் படத்தின் மோசன் போஸ்டரை நாளை வெளியிடுகிறாராம்.

ஜிவி. பிரகாஷ் தளபதி நடிகரின் தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாச்சியார் படத்தை பாலா இயக்க, நாயகியாக ஜோதிகா நடித்துள்ளார்.

GV Prakashs Naachiyar motion poster release on 3rd August

விஜய் ரசிகர்களை ஏமாற்றிய ஏஆர். ரஹ்மான்-அட்லி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் என்றாலே உடனே நினைவுக்கு வருவது அவரது டான்ஸ்தான்.

அதுபோல் தான் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் ஒரு பாடலாவது பாடிவிடுவார்.

எனவே, அட்லி இயக்கத்தில்உருவாகிவரும் மெர்சல் படத்தில் நிச்சயம் விஜய் பாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

காரணம்… மெர்சல் தயாரிப்பாளருக்கு இது 100வது படம்.

மேலும் விஜய்யும் ஏஆர். ரஹ்மானும் சினிமாவில் நுழைந்து தற்போது 25வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளனர்.

இத்தனை சிறப்புமிக்க படத்தில் விஜய் தன் சொந்த குரலில் பாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால் இப்படத்தில் விஜய் பாட வாய்ப்பை எதுவும் ஏஆர் ரஹ்மான் ஏற்படுத்தவில்லையாம்.

எனவே ரஹ்மான் மீது வருத்தத்தில் இருக்கிறார்களாம் விஜய் ரசிகர்கள்.

Vijay doesnot sung any song in Mersal movie

 

ரஜினி-அஜித்துடன் ஓவர்; விஜய்-சிவகார்த்திகேயனுக்காக கருணா வெயிட்டிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலகலப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் கருணாகரன்.

குறைந்த காலக்கட்டத்திலேயே மளமளவென நிறைய படங்களில் நடித்து விட்டார்.

ரஜினியுடன் லிங்கா, தனுஷ்டன் தொடரி, அஜித்துடன் விவேகம் படங்களில் நடித்துவிட்டார்.

மேலும் உப்பு கருவாடு என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்துவிட்டார்.

ஆனால் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களில் இதுவரை நடிக்கவில்லை.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் சிவகார்த்திகேயனுடன் நடிப்பீர்களா? எனக் கேட்டுள்ளார்.

அவருடன் நடிக்க காத்திருக்கிறேன் என ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

அதனைக் கண்ட சிவகார்த்திகேயன், அது விரைவில் நடக்கும் என தெரிவித்துள்ளார்.

Karunakaran wish to act with Vijay and Sivakarthikeyan

பிக்பாஸ்ல யாரையும் தப்பா பேசாதே… சதீஷுக்கு சிம்பு அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்களை அல்லது பேசாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் போலிக்கிறது.

அந்தளவிற்கு நிகழ்ச்சி பாப்புலாராகிவிட்டது.

மக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இந்த நிகழ்ச்சி பற்றி தங்களை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகைகள் ஸ்ரீபிரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர்கள் ரோபோ சங்கர், நடன இயக்குனர் சதீஷ் ஆகியோர் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இதில் நடன இயக்குனரும் நடிகருமான சதீஷ், ஓவியா ஆதரிக்கும் வேளையில் மற்ற போட்டியாளர்களை ஏதாவது சொல்லி கமெண்ட் செய்து வருகிறார்.

முக்கியமாக ஜீலியை திட்டிக் கொண்டே இருக்கிறார்.

இதனை பார்த்த சிம்பு சதீஷுக்கு ஒரு ட்வீட் செய்துள்ளார்.

யாரையும் தவறாக பேச வேண்டாம். நமக்கு யாரை பிடிக்கிறதோ அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம்.

கண்டிப்பாக தவறுகளை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என பதிவிட்டுள்ளார்.

Dont scold anybody in Bigg Boss show Simbu advice to Dancer Sathish

மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படத்திற்கு சர்ட்டிபிகேட் தர மறுக்கும் சென்சார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எக்ஸ்ட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வி. மதியழகன், ஆர். ரம்யா தயாரித்திருக்கும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்திற்கு சென்சார் மறுக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் ‘திலகர்’ படத்தில் நடித்த துருவா ஹீரோவாகவும், இரண்டு பேர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். ஒருவர் ஐஸ்வர்யா தத்தா. இன்னொருவர் அஞ்சனா.

இவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’கோபி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் வளவன், ‘நான் மகான் அல்ல’ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் சென்சார் அதிகாரிகளால் தணிக்கை செய்ய பார்க்கப்பட்டது.

இதுகுறித்து இயக்குநர் ராகேஷ் கூறியதாவது,

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்திய கதையாகும்.

ஒவ்வொரு நாளும் பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தும் சமூக விரோத சம்பவங்கள் நிறைய நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

அதை செய்திகளாகப் படிக்கிறோம். தொலைக்காட்சிகளில் சிசிடிவியினால் பதிவு செய்யப்பட்ட வீடியோவாகப் பார்க்கிறோம். சமூக வலைதளங்களில் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். அங்கெல்லாம் சென்ஸார் தலையிடுவதில்லை.

அப்போதெல்லாம் அதனால் மக்களின் மனம் பாதிக்கப்படுகிறதா இல்லையா என யாரும் தடை விதிப்பதில்லை.

ஆனால் அதையே மக்களுக்கும் பெண்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக எடுத்தால் பிரம்பை தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறது சென்ஸார்.

நான் சொல்லியிருக்கும் கதையை இங்கு நடக்கவில்லையென்றோ, அவை சமூக தளங்களில் வலம் வரவில்லையென்றோ சென்ஸார் அதிகாரிகளால் மறுக்கமுடியவில்லை. ஆனால் எந்த சான்றிதழும் தராமல் மறுக்க மட்டும் முடிந்திருக்கிறது.

இன்ன இன்னதான் படமாக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டி முறையாவது சென்ஸார் போர்டால் முன்னாடியே தரப்பட்டிருந்தால் அப்படிப்பட்ட காட்சிகளையோ வசனங்களையோ படமாக்குவதைத் தவிர்க்கலாம். ஆனால் அப்படியொன்று இங்கு இல்லையே.

எடுத்த படத்தையே பார்க்க ஒருமாதம் இழுத்தடிக்கும் இவர்களிடம் ஸ்கிரிப்ட் கொடுத்து படிக்கச் சொல்லி ஓகே வாங்கி படம் பண்ணமுடியுமா? எடுத்த பின் நம் கருத்துச் சுதந்திரம் சிக்கி சின்னாப் பின்னமாகி துண்டு துக்கடாவாகி வெளி வருகிறது.

இப்போது என் படத்திற்கு சென்ஸார் ‘யு/ஏ’ அல்லது ‘ஏ’ சான்றிதழாவது தாங்க என்று வாதாடி, அழுதும் கூட கேட்டுப் பார்த்துவிட்டேன். எந்த சான்றிதழும் தரவில்லை. ரிவைஸிங் கமிட்டிக்கு போங்க என்று சொல்லிவிட்டார்கள்.

பெண்களுக்கான, சிறுவர்களுக்கான விழிப்புணர்வு படம் இது.

சிகரெட் பிடிக்காதீர்கள் என்பதை சிகரெட் பிடிப்பதுபோல் காட்டித்தானே எச்சரிக்கிறார்கள்? அதுபோல சமூக விரோத சம்பவங்களைக் காட்டித்தான் என் படத்தில் எச்சரிக்கை செய்துள்ளேன். அதற்கு ரிவைஸிங் கமிட்டியா?

ஒரு நல்ல படம் இப்படி பாடாய்ப் படணுமா? சமீபத்தில் ‘தரமணி’ படத்திற்கும் இப்படியொரு கொடுமை நடந்திருக்கிறது.

படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரம் இந்த சினிமாவில் மட்டும் இவ்வளவு கடுமையாக தாக்கப்படுகிறது. இதற்கு வழிகாட்டும் முறையையாவது உருவாக்கித் தாருங்கள் என மிகுந்த மன வருத்தத்துடன் குறிப்பிட்டார் இயக்குநர் ராகேஷ்.

படத்தின் ஒளிப்பதிவை பிஜி முத்தையா கையாள, இசையை ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’,’உறுமீன்’ படத்தின் இசையமைப்பாளர் அச்சு மேற்கொள்கிறார், எடிட்டிங்கை ஷான் லோகேஷ் கவனிக்க, பாடல்களை பா.விஜய், மீனாட்சி சுந்தரம் எழுத, கலையை ரெம்போன் பால்ராஜ் (பாபநாசம், தனி ஒருவன்) செய்ய, சண்டைப் பயிற்சி செய்துள்ளார் விமல்.

Censor refuse to give certificate for Marainthirunthu Paarkum Marmam Enna

More Articles
Follows