தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2004ல் திருமணம் செய்துக் கொண்டார் நடிகர் தனுஷ்.
17 வயதில் சினிமாவில் அறிமுகமான தனுஷ் 22 வயதில் திருமணம் செய்தார்.
அப்போது நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவனுக்கு கூட திருமணம் நடக்கவில்லை என்பதும் தனுஷை விட ஐஸ்வர்யா மூத்தவர் என்பது சலசலப்பை ஏற்படுத்தியது.
ரஜினிகாந்தின் இல்ல திருமண விழா என்பதால் அப்போது கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர் இந்த திருமண விழாவில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த தனுஷ் ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இவர்களுக்கு யாத்ரா ராஜா மற்றும் லிங்கா ராஜா என பெயரிட்டனர். இவர்கள் தாத்தா ரஜினி மீது பாசமாக இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது 18 வருட மணவாழ்க்கைக்கு பிறகு தன் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.
தனுஷ் அறிக்கையில்…
18 வருடங்கள் நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்புபவர்கள் என ஒருவரையொருவர் ஒன்றாக இணைத்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
இன்று நாங்கள் ஒருவரை ஒருவர் பிரியும் இடத்தில் நிற்கிறோம். ஐஸ்வர்யாவும் நானும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம்.
மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கவும்.” என்று தெரிவித்துள்ளார்.
இதே குறிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஐஸ்வர்யா தனுஷ், “கேப்ஷன் தேவையில்லை என நினைக்கிறேன். உங்கள் அனைவரின் புரிதலும், அன்பும்தான் மிக தேவையானது” என குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவும் அஸ்வின் என்ற கணவரை விவாகரத்து செய்தார். 2010ல் திருமணம் செய்து 2017ல் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகன் பிறந்தான்.
2019 முதல் தற்போது 2வது கணவர் விசாகனுடன் வாழ்ந்து வருகிறார் சௌந்தர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
Dhanush announces separation from wife Aishwarya after 18 years