தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தில் 8 கோடி மக்கள் வாழ்கிறார்கள் என்றால், அதில் 1 கோடி மக்கள் சென்னையில் வாழ்வதாக கூறப்படுகிறது.
சென்னையை தேடி தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். ஒரு சிலர் பொருட்களை வாங்க வந்தாலும், பலர் இங்கு வேலைத் தேடி செட்டிலாகவே வருகிறார்கள்.
ஏழை மக்கள் முதல் கோடீஸ்வரன்கள் வாழும் நகரம் இது.
இங்கு 50 ரூபாய்க்கும் 1 சாப்பாடு கிடைக்கும். 2000 ரூபாய்க்கும் 1 சாப்பாடு கிடைக்கும்.
இதில் திருமணமாகாத பேச்சுலர்கள் பாடு படு திண்டாட்டம்தான். ஹோட்டல்களை நம்பியே அவர்கள் வாழ்கிறார்கள்.
எனவே அவர்களை ஈர்க்க புதுப்புது உணவகங்கள் அன்றாடம் திறக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு சில ஹோட்டல்கள் மட்டுமே நல்ல தரத்துடன் உணவை மக்களுக்கு கொடுக்கிறது.
பல ஹோட்டல் ஓனர்களுக்கு சுவை என்றால் என்ன? என்பதே தெரியாது.
இந்நிலையில் இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஒரு ரயிலை போலீஸ் அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அதில் 1000 கிலோ நாய்க்கறி இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் உள்ள மிகப்பெரிய ஹோட்டலுக்கு நாய்க்கறி சப்ளை செய்யப்படுவதாக அப்போது தெரிய வந்துள்ளது.
இதில் எந்த எந்த ஹோட்டல்களுக்கு தொடர்பு உள்ளது என்பது இதுவரை தெரியவில்லை.
சென்னையில் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி உணவகங்கள் அதிகம் உள்ளன. அப்படியிருக்கையில் நாய்க்கறி எதற்கு? என்ற சந்தேகம் தற்போது சென்னைவாசிகளிடையே ஏற்பட்டுள்ளது.
இதனையறிந்த காற்றின் மொழி தயாரிப்பாளர் தனஞ்செயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த செயலை கண்டிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
Dhananjayan BOFTAVerified account @Dhananjayang 1h1 hour ago
இதை எல்லாம் படிக்கும் போது மனம் பதபதைக்கிறது. அக்கிரமம். எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி வாழ்கிறார்கள்.” என பதிவிட்டுள்ளார்.
Dhananjayan tweet about 1000 kg of Dog meat seized in Chennai