சென்னையில் 1000 கிலோ நாய்க்கறி; தயாரிப்பாளர் தனஞ்செயன் கண்டனம்

சென்னையில் 1000 கிலோ நாய்க்கறி; தயாரிப்பாளர் தனஞ்செயன் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dog meat in chennaiதமிழகத்தில் 8 கோடி மக்கள் வாழ்கிறார்கள் என்றால், அதில் 1 கோடி மக்கள் சென்னையில் வாழ்வதாக கூறப்படுகிறது.

சென்னையை தேடி தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். ஒரு சிலர் பொருட்களை வாங்க வந்தாலும், பலர் இங்கு வேலைத் தேடி செட்டிலாகவே வருகிறார்கள்.

ஏழை மக்கள் முதல் கோடீஸ்வரன்கள் வாழும் நகரம் இது.

இங்கு 50 ரூபாய்க்கும் 1 சாப்பாடு கிடைக்கும். 2000 ரூபாய்க்கும் 1 சாப்பாடு கிடைக்கும்.

இதில் திருமணமாகாத பேச்சுலர்கள் பாடு படு திண்டாட்டம்தான். ஹோட்டல்களை நம்பியே அவர்கள் வாழ்கிறார்கள்.

எனவே அவர்களை ஈர்க்க புதுப்புது உணவகங்கள் அன்றாடம் திறக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு சில ஹோட்டல்கள் மட்டுமே நல்ல தரத்துடன் உணவை மக்களுக்கு கொடுக்கிறது.

பல ஹோட்டல் ஓனர்களுக்கு சுவை என்றால் என்ன? என்பதே தெரியாது.

இந்நிலையில் இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஒரு ரயிலை போலீஸ் அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அதில் 1000 கிலோ நாய்க்கறி இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்தனர்.

சென்னையில் உள்ள மிகப்பெரிய ஹோட்டலுக்கு நாய்க்கறி சப்ளை செய்யப்படுவதாக அப்போது தெரிய வந்துள்ளது.

இதில் எந்த எந்த ஹோட்டல்களுக்கு தொடர்பு உள்ளது என்பது இதுவரை தெரியவில்லை.

சென்னையில் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி உணவகங்கள் அதிகம் உள்ளன. அப்படியிருக்கையில் நாய்க்கறி எதற்கு? என்ற சந்தேகம் தற்போது சென்னைவாசிகளிடையே ஏற்பட்டுள்ளது.

இதனையறிந்த காற்றின் மொழி தயாரிப்பாளர் தனஞ்செயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த செயலை கண்டிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

Dhananjayan BOFTA‏Verified account @Dhananjayang 1h1 hour ago
இதை எல்லாம் படிக்கும் போது மனம் பதபதைக்கிறது. அக்கிரமம். எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி வாழ்கிறார்கள்.” என பதிவிட்டுள்ளார்.

Dhananjayan tweet about 1000 kg of Dog meat seized in Chennai

சிம்புக்கு நன்றி.; மயில்சாமிக்கு சிரிப்பு.. ஜோதிகாவை பாராட்டிய சூர்யா

சிம்புக்கு நன்றி.; மயில்சாமிக்கு சிரிப்பு.. ஜோதிகாவை பாராட்டிய சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaதனஞ்செயன் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள படம் காற்றின் மொழி.

இப்படத்தில் ஜோதிகா, விதார்த், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, மயில்சாமி, லட்சுமி மஞ்சு ஆகியோருடன் சிம்புவும், யோகிபாபுவும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை பார்த்த நடிகர் சூர்யா படக்குழுவை பாராட்டி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

அதில், சிம்பு, லட்சுமி மஞ்சு, யோகிபாபுவிற்கு நன்றி கூறியுள்ள சூர்யா, மயில்சாமி நடித்த காட்சிகளின்போது என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Suriya Sivakumar‏Verified account @Suriya_offl

Thank you #Simbu & @LakshmiManchu for making it even more special and Mylsamy sir I rolled down laughing.. Sure our audience and the raving reviews will give #KaatriMozli it’s deserving success #JoCareerBest

2.0 ரிலீசுக்காக மகேஷ் பாபுவின் தியேட்டரை திறந்து வைக்கும் ரஜினி

2.0 ரிலீசுக்காக மகேஷ் பாபுவின் தியேட்டரை திறந்து வைக்கும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mahesh babu theatresதெலுங்கு சினிமாவில் முன்னணி நடிர்களில் ஒருவர் மகேஷ்பாபு.

டோலிவுட் சினிமாவின் இளவரசர் என்ற செல்லப் பெயரும் இவருக்கு உண்டு.

இவர் ஏசியன் சினிமாஸ் உடன் இணைந்து ஐதராபாத்தில் பிரமாண்டமான திரையரங்க மால் ஒன்றை நிறுவியுள்ளார்.

ஏஎம்பி சினிமாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரையரங்கில் முதல் படமாக அமீர்கான் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற படத்தை முதல் படமாக திரையிட இருந்தார்.

அந்த தொடக்க விழாவிற்கு அமீர்கானை வரவழைக்கவும் ஏற்பாடு நடந்தது.

ஆனால் அமீர்கான் பிசியாக இருக்கவே அவர் வரவில்லையாம்.

இந்நிலையில் முதல் படமாக ரஜினியின் 2.0 படத்தை திரையிட மகேஷ் பாபு முடிவு செய்திருக்கிறாராம்.

அதனையொட்டி ரஜினியை அழைத்திருக்கிறார்களாம்.

திறப்பு விழாவுக்கு சென்றால் அது 2.0 படத்திற்கான விளம்பரமாகவும் அமையும் என்பதால் ரஜினியும் இதில் கலந்துகொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவ-23ல் ரிலீசாகும் *கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்*

நவ-23ல் ரிலீசாகும் *கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthikeyanum Kaanamal Pona Kadhaliyum will be released on 23rd Nov 2018டுவிங்கிள் லேப்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’. கதையின் நாயகர்களாக தீபக், எஸ்.பிளாக் பாண்டி, எஸ்.எஸ்.ஜெய்சிந்த் நடிக்கிறார்கள்.

கதாநாயகிகளாக ஹரிதா, மலர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் கொட்டாச்சி, ‘ஓகே ஓகே’ மதுமிதா, மிப்பு, ஹேமா, மகேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் எம்.ஏ.பாலா இயக்கியுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் பணியாற்றியவர். சினிமா மீது உள்ள ஆர்வத்தால் டிப்ளோமா பிலிம் மேக்கிங் படித்து விட்டு, பல குறும்படங்களையும், டெலி பிலிம்களையும் இயக்கியுள்ளார்.

தன்னுடைய காதலியைத் தொலைத்துவிட்டு, தேடுகிற கார்த்திகேயனின் வாழ்க்கையில் நடக்கும் விபரீதமான நிகழ்வுகளும், சம்பவங்களும் திரைக்கதையாக உருவாக்கி சுவாரஸ்யமாய், கமர்ஷியல் அம்சங்களுடன் இயக்கி இருக்கிறார் இயக்குனர் எம்.ஏ.பாலா.

இப்படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

மேலும் ‘நண்பர்களால் உருவாகும் எங்கள் படம் போல், ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ திரைப்படமும் நண்பர்களால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நட்பு என்றும் நிலைக்கட்டும், படம் வெற்றி பெறட்டும்’ என்று படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

எப்.ராஜ் பரத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு டேவிட் ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 23ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

Karthikeyanum Kaanamal Pona Kadhaliyum will be released on 23rd Nov 2018

காதுகளிலும் இனிக்கும் *காற்றின் மொழி*.; சுரேஷ் காமாட்சி பாராட்டு

காதுகளிலும் இனிக்கும் *காற்றின் மொழி*.; சுரேஷ் காமாட்சி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Suresh Kamatchi praises Kaatrin Mozhi movie teamராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான காற்றின் மொழி திரைப்படம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

இப்படத்தை பார்த்த தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி கூறியுள்ளதாவது…

“மொழி”யின் ஆக்ரமிப்பு இன்னும் நெஞ்சைவிட்டு அகலாத நிலையில் “காற்றின் மொழி”யை திருமதி ஜோதிகாவும்.. இயக்குநர் ராதா மோகனும் அழுத்தம் திருத்தமாய் பேசி நெஞ்சில் ஆணியடித்த மாதிரி பதிய வைத்திருக்கிறார்கள்.

பெண்களின் உரிமையை பெண்களே ரசிக்கும் வகையில் படம் பிரம்மாதப்படுத்துகிறது. இந்தி ரீமேக் என்றாலும் அதை தமிழ்படுத்தும்போது படுத்தி எடுத்துவிடுவார்கள். ஆனால் இது அழகுபடுத்தப்பட்டிருக்கிறது.

இன்னும் மெருகேறி நிற்கிறது ஜோதிகா அவர்களின் நடிப்பில்.. விதார்த் இயல்பான நடிகன். யதார்த்த நாயகன். வாழ்ந்திருக்கிறார். மிகப்பெரிய பலம் ஜோதிகா அவர்களும் விதார்த்தும்..

தேர்ந்தெடுத்து இப்படத்தை தமிழுக்கு கொண்டு வந்திருக்கும் திரு தனஞ்செயனுக்கும் எனது வாழ்த்துகள்.

காற்றின் மொழி எல்லோர் காதுகளிலும் இனிக்கட்டும்.”

என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Producer Suresh Kamatchi praises Kaatrin Mozhi movie team

கஜா-வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினி ஆறுதல்; உதவியவர்களுக்கு பாராட்டு

கஜா-வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினி ஆறுதல்; உதவியவர்களுக்கு பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis message about Gaja Cyclone and Rajini Makkal Mandram rescue activitiesகடந்த 5 நாட்களாகவே தமிழகத்தை ஒரு சொல் ஆட்டிப் படைத்தது என்றால் அது கஜா தான்.

புயல் மையம் கொண்டுள்ளது. 800 கி.மீ. தொலைவில் உள்ளது. இன்று இரவு வரும். நாளை வரும்.

வலுவடைந்துள்ளது. வலுவிழந்துவிட்டது என பல்வேறு வானிலை தகவல்கள் வந்தன.

இதனால் தமிழக மாணவர்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை.

இதனால் புயல் வருமா? வராதா? என கிண்டல் செய்து பல கிரியேட்டர்கள் மீம்ஸ் செய்து வெளியிட்டனர். மீடியாக்களையும் கலாய்த்தனர்.

இந்நிலையில் இன்று நவம்பர் 16ஆம் அதிகாலை 1 மணியளவில் காரைக்கால், நாகப்பட்டினம் முதல் வேதாரண்யம், புதுக்கோட்டை வரை தன் கோரத் தாண்டவத்தை காட்டியது கஜா.

30க்கும் மேற்ப்ட்டோர் உயிர் இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன. மக்கள் பால், மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் அந்த பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் தன் ட்விட்டர் பக்கத்தில் கஜா புயல் குறித்து கூறியுள்ளதாவது…

Rajinikanth‏Verified account @rajinikanth
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆறுதல்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உதவிகளைச் செய்துவரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டுகிறேன். நமது நிவாரண உதவிகள் தொடரட்டும்.” என ரஜினி தெரிவித்துள்ளார்.

Rajinis message about Gaja Cyclone and Rajini Makkal Mandram rescue activities

More Articles
Follows