ஆன்மிக அரசியல் அப்டேட்ஸ்: ரஜினியை சந்திக்க வருகிறார் கெஜ்ரிவால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவே எதிர்பாராத சமயத்தில் எந்த பின்பலபும் இல்லாமல் மக்கள் ஆதரவுடன் கட்சி ஆரம்பித்து சில மாதங்களிலேயே ஆட்சிக்கு வந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு போட்டியாக எந்த கட்சியுமே தேசியளவில் பெயர் எடுக்காத போது இந்திய தலைநகர் டெல்லியிலேயே ஆட்சி அமைத்தவர் அவர்.

ஒரு மிகச்சிறந்த இந்தியாவை உருவாக்கவேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வரும் இவர் தன் போன்ற மாற்று சிந்தனை கொண்டவர்களை ஆதரித்தும் வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் அரசியல் அவதாரம் எடுக்க தயாரான நடிகர் கமல்ஹாசனை சந்திக்க சென்னை வந்திருந்தார். அப்போது இருவரும் அரசியல் குறித்து பேசினர்.

அதுபோல் சில தினங்களுக்கு முன் நடிகர் விஷால் அவர்கள் ஆர்கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முயன்ற போது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரசியல் கட்சியை அறிவித்து இந்தியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரஜினிகாந்த் விரைவில் சந்திக்க சென்னை வருகிறாராம் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால்.

இந்த சந்திப்பு இந்தியளளவில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் என சொல்லப்படுகிறது.

Delhi CM Arvind Kejriwal wish to meet Rajini regarding Politics

ரூ. 60 கோடி வசூலை தாண்டியது வேலைக்காரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வேலைக்காரன் படம் கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியானது.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

முதல் வார இறுதியிலேயே ரூ 36 கோடி வரை வசூல் செய்திருந்தது.

தற்போது வரை தமிழகத்தில் மட்டும் ரூ 45 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

உலகம் முழுவதும் இப்படம் ரூ 60 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் இன்னும் தெலுங்கில் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyans Velaikkaran box office collection crossed Rs 60 crores

ரஜினி அறிவித்த இரண்டே நாளில் மன்றத்தில் இணைந்த 50 லட்சம் பேர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் ரஜினிகாந்த்.

அன்று அவர் அறிவித்த போது ஆன்மிக அரசியலை தான் நாடவிருப்பதாக தெரிவித்தார். அது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கும் விளக்கம் அளித்துள்ளார்.

ஆன்மீக அரசியல் என்றால்… உண்மையான, நேர்மையான, நாணயமான அரசியல். எந்த விதமான சாதி மத சார்பும் இல்லாத, அறம் சார்ந்த அரசியல் ஆகும்” என தெரிவித்தார் ரஜினி.

இதனையடுத்து ஜனவரி 1 புத்தாண்டு அன்று மாலை வேளையில் ரஜினிமன்றம் என்ற இணையதளம் பற்றி அறிவித்தார்.

ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைவரும் தங்கள் பெயருடன வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து இணையலாம் என தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு வந்த சில நிமிடங்களிலேயே பலரும் அந்த இணையதளத்தை தொடர்பு கொண்டதால் அந்த இணையதளமே முடங்கியது.

இந்நிலையில் இரண்டு நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Nearly 50 lakhs peoples joined in Rajini Mandram website

இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடனான சந்திப்பின் நிறைவு நாளான டிசம்பர் 31 2017-ல் அரசியலுக்கு வருவது உறுதி எனவும் தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும் அறிவித்தார்.

சில மாதங்களுக்கு மற்ற அரசியல் கட்சியையும் தலைவர்கள் பற்றியும் விமர்சிக்க வேண்டாம் என அப்போது தெரிவித்திருந்தார்.

எனவே ரஜினியின் அறிவிப்பு இத்துடன் நிற்கும் என கூறப்பட்டது.

ஆனால் அதிரடியாக ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு விஷயத்தை செய்து தமிழக அரசியல் உலகை பரபரப்பாக்கி வருகிறார்.

2018 புத்தாண்டு அன்று ரஜினி மன்றம் என்ற இணையதளம் பற்றி அறிவித்தார். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

இந்நிலையில் இன்று இந்திய அரசியலின் மூத்த தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் மாலை 6.30 மணியளவில் சந்திக்கவிருக்கிறார்.

வருடந்தோறும் புத்தாண்டு சமயத்தில் கருணாநிதியை ரஜினி சந்திப்பது வழக்கம். ஆனால் இம்முறை ஒரு அரசியல் கட்சியின் தலைவராக சந்திக்கவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

விஜய்யுடன் மீண்டும் கீர்த்தி சுரேஷ்; கன்பார்ம் செய்தது சன்பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெர்சல் படத்துக்கு பிறகு ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

பல படங்களை சன்பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்திருந்தாலும், எந்திரன் படத்திற்கு பிறகு விஜய் 62 படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்நிலையில் படத்தின் நாயகியையும் உறுதிசெய்துள்ளனர். அவர்தான் கீர்த்தி சுரேஷ்.

இதற்கு முன்பே இவர்கள் பைரவா படத்தில் டூயட் பாடியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

விரைவில் இப்பட சூட்டிங் துவங்கவுள்ளது. படத்தை 2018 இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ரஜினி கட்சியில் இணைய லைக்காவிலிருந்து ராஜுமகாலிங்கம் ராஜினாமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தை லைக்கா நிறுவனம் ரூ. 400 கோடியில் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த லைகா நிறுவனத்தின் தென்னிந்திய செயல் பிரிவு தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார் ராஜு மகாலிங்கம்.

தற்போது அவர் ரஜினியின் ஆன்மிக அரசியலில் இணைய தன் பதவியை ராஜினாமாசெய்துள்ளார்.

அவருக்குப் பதிலாக கருணாமூர்த்தி பணிபுரிவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியோடு இணைந்திருப்பது குறித்து ராஜு மகாலிங்கம் கூறியதாவது…

ரஜினியை நான் நெருக்கமாக கவனித்தேன். அவரது கடமை உணர்வு, நேர்மை, அர்ப்பணிப்பு என்னை அவரது கட்சியின்பால் ஈர்த்துள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

ரஜினி கட்சியில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும், முதல் நபராக பிரபலமான ஒருவர் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows