தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் ஜனவரி 9ல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டிக்கெட்டுகள் முன்பதிவில் சாதனை படைக்கும் எனத் தெரிகிறது. சில தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய உடனே டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்துவிட்டன.
அதிகாலை காட்சிகளின் டிக்கெட்டு முன்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டதில் தர்பார் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது என போலீசார் அறிவித்துள்ளனர்.
மேலும் இனி எந்த நடிகரின் பட சிறப்பு காட்சிக்கும் கிருஷ்ணகிரியில் அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளனர்.
விஜய் நடித்த பிகில் பட ரிலீசின் போது கிருஷ்ணகிரியில் சிறப்பு காட்சிகள் திரையிட கால தாமதம் ஆனது.
அப்போது ஆர்வக் கோளாறில் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சுமார் 40 பேர் வரை கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இந்த ரகளை சம்பவத்தின் எதிரொலியாகவே தர்பார் பட சிறப்பு காட்சிக்கும் போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனையறிந்த ரஜினி ரசிகர்கள் கடுப்பில் இருக்கிறார்களாம். அவர்கள் செய்த தவறுக்கு எங்களுக்கு ஏன் காட்சிகள் மறுக்கப்படுகிறது.
நாங்களும் அவர்களும் ஒன்றா? என இணையத்தளங்களில் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
Darbar special shows cancelled Rajini fans condemned Vijay fans