உங்களுடன் இருப்பேன்… முதல்வர் நிவாரண நிதிக்கு மோகன்லால் உதவி

உங்களுடன் இருப்பேன்… முதல்வர் நிவாரண நிதிக்கு மோகன்லால் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Covid19 crisis Mohanlal donates Rs 50 lakhs to CM Relief Fundமலையாளிகள் பலர் அயல்நாடுகளில் வசித்து வருகிறார்கள்.

இதனால் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக கேரளாவில் தான் பரவ ஆரம்பித்தது.

இந்தியாவில் கேரள மாநிலத்தில் கொரோனா வீரியம் அதிகளவில் காணப்பட்டது.

தற்போது இதனை தடுக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு தனது சார்பில் 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

இது குறித்து மோகன்லால் கூறியுள்ளதாவது… “முதல்வர் பினராயி விஜயன் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது.

என்னால் ஆன ஒரு சிறிய பங்களிப்பாக, மக்களுக்கு வகையில் உதவும் விதமாக இந்த 50 லட்சம் ரூபாயை ஏற்றுக்கொள்ள வேண்டும்.. தொடரட்டும் உங்கள் பணி.. உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்”என முதல்வருக்கான கடிதத்தில் கூறியுள்ளார் மோகன்லால்.

இதற்கு முன்பு கேரள திரைப்பட தொழிலாளர்களுக்கு 10 லட்ச ரூபாய் மோகன்லால் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Covid19 crisis Mohanlal donates Rs 50 lakhs to CM Relief Fund

யூடியுப் சேனல் தொடங்கிய ஹன்சிகா & ரகுல் பிரித்தி சிங்

யூடியுப் சேனல் தொடங்கிய ஹன்சிகா & ரகுல் பிரித்தி சிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hansika and Rakul Preet Singh launches their own YouTube channelதிரை நட்சத்திரங்கள் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் அக்கௌண்ட் வைத்துள்ளனர்.

இதில் தினமும் தங்கள் பட தகவல் மற்றும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று யுடிப் சேனலை துவங்கி அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா தனக்கென யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார்.

என்னுடைய வாழ்க்கைக்கு உள்ளே சென்று, என் உண்மையான பக்கத்தை அறிந்துகொள்ள தயாராக இருங்கள் என தன் யூடிப் சேனல் பற்றி கூறியுள்ளார் ஹன்சிகா.

இவரைத் தொடர்ந்து நடிகை ரகுல் பிரித்தி சிங்கும் யூடிப் சேனலை தொடங்கியுள்ளார். இதன் மூலம் வரும் வருவாயை கொரோனா தடுப்பு பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கவிருக்கிறாராம்.

Hansika and Rakul Preet Singh launches their own YouTube channel

https://www.instagram.com/p/B-rsj-5huVD/?utm_source=ig_embed

மீண்டும் நடிகர்களுக்கு கோரிக்கை வைத்த பெஃப்சி ஆர்கே. செல்வமணி

மீண்டும் நடிகர்களுக்கு கோரிக்கை வைத்த பெஃப்சி ஆர்கே. செல்வமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rk selvamaniஇன்று மார்ச் 8 செய்தியாளர்களை சந்தித்தார் பெப்சி தலைவர் ஆர்கே. செல்வமணி.

அப்போது அவர் பேசியதாவது… “கொரோனா கொடுமையான நோய். தற்போது வரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.

அமெரிக்கா, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளே இதனை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.

இந்தியாவில் போதுமான அளவிற்கு வென்டிலேட்டர் வசதி இல்லை. இந்த நோய் வந்துவிட்டால் அதனை தடுக்க முடியாமல் போய் விடும்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பெஃப்சி சார்பாக திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ நிதியுதவி கேட்டிருந்தோம்.

தற்போது வரை 2 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி பெப்சிக்கு கிடைத்துள்ளது.

இவையில்லாமல் 2400 அரிசி மூட்டைகள் நன்கொடையாக கிடைத்துள்ளன.

திரைப்பட தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த உதவி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது .

திரைப்பட கலைஞர்கள் இந்த நேரத்தில் அரசுக்கு நிதி உதவி வழங்க வேண்டும்.

பெஃப்சி சார்பாக 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கவுள்ளோம்.

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

தல தளபதி பற்றி சைக்கோ நடிகை அதிதி ராவ் பேச்சு

தல தளபதி பற்றி சைக்கோ நடிகை அதிதி ராவ் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aditi rao hydariமணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ மற்றும் ‘செக்கச்சிவந்த வானம்’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை அதிதி ராவ்.

சமீபத்தில் வெளியான மிஷ்கினின் ‘சைக்கோ’ படத்திலும் நடித்திருந்தார்.

தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை அதிதி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது நெட்டிசன் தளபதி விஜய்யுடன் எப்பொழுது நடிக்கப்போகிறீர்கள் என கேட்க, அதற்கு அவர் ‘தளபதி விஜய்யிடம் கேளுங்கள்” என்று பதிலளித்தார்.

பின்னர் தல அஜித் குறித்து சொல்லுங்கள் என்று மற்றொரு ரசிகர் கேட்க, நிரந்தரமான கிளாஸ் ஆனவர் அஜித் என பதிலளித்தார்.

கொரோனாவிடம் தப்பித்தது எப்படி..? ஹாரிபாட்டர் கதாசிரியர் விளக்கம்

கொரோனாவிடம் தப்பித்தது எப்படி..? ஹாரிபாட்டர் கதாசிரியர் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

JK Rowlingஉலகில் பல புத்தகங்கள் இருந்தாலும் நிறைய பேரால் வாசிக்கப்பட்ட கவரப்பட்ட புத்தகம் என்ற பெருமை ‘ஹாரிபாட்டர்’ புத்தகத்திற்கு உண்டு.

இப்புத்தகம் விற்பனை பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்த புத்தகத்தை எழுதியவர் பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங் என்பவர் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

அதன்பின்னர் அதிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜேகே ரவ்லிங் கூறும்போது, “எனக்கும் கொரோனா தொற்று குறித்த அறிகுறிகள் தென்பட்டன.

அப்போது குயீன்ஸ் மருத்துவமனை டாக்டர் ஒருவர் அதிலிருந்து எப்படி மீளலாம் என சில டிப்ஸ்களை கொடுத்திருந்தார்..

என் கணவரின் ஆலோசனைப்படி வீட்டிலிருந்தபடியே அவற்றை மேற்கொண்டேன். இப்போது நான் பூரண குணமாகிவிட்டேன்.

அந்த டிப்ஸை உங்களுக்கும் தருகிறேன்.. ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருங்கள்” என கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த டாக்டர் குறித்த வீடியோவையும் இணைத்துள்ளார் ஜே.கே.ரவ்லிங்.

கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா

கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

music director sathyaநெடுஞ்சாலை, எங்கேயும் எப்போதும், காஞ்சனா-2, இவன் வேற மாதிரி, தீயா வேலை செய்யணும் குமாரு, ஒத்த செருப்பு போன்ற ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் சி.சத்யா.

இவர் தற்போது கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார்.

‘விழுத்திரு
தனித்திரு
வரும் நலனுக்காக
நீ தனித்திரு’
என்ற இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் பாடலை இன்ஜாமம் எழுதியுள்ளார்.

பின்னணி பாடகர்கள் சத்ய பிரகாஷ், சத்யன் மகாலிங்கம், அபி (கனடா), சுதர்சனன் அசோக்(அமெரிக்கா), கணேசன் மனோகரன், இன்ஜாமம் ஆகியோருடன் இசை அமைப்பாளர் சி.சத்யாவும் இணைந்து பாடியுள்ளார்.

பாடல் உருவாக்கம் பற்றி சி.சத்யா கூறியதாவது…
“முன்பு அறிவியல் வளர்ச்சி குறைவு.
அதனால் இசைக் கலைனஞர்கள் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் இணைந்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இப்போது அறிவியல் வளர்ச்சியடைந்துள்ளது.

தற்போதுள்ள தடை உத்தரவு காலத்தில்
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இசையமைப்பாளராக என்னுடைய பங்களிப்பை வழங்க முடிவு செய்தேன்.

இதில் பாடியவர்கள், பாடல் எழுதியவர் அனைவரும் ஆன்-லைன் மூலம் பாடியும், எழுதியும் கொடுத்தார்கள்.

தொடர்ந்து சில ஆல்பங்களை வெளியிடவுள்ளேன்” என்றார்.

இவர் தற்போது எழில் இயக்கியுள்ள ‘ஆயிரம் ஜென்மங்கள்’, சுந்தர்.சி இயக்கும் ‘அரண்மனை -3’, ‘ராங்கி’ உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

Hope all safe .
This song is my small contribution to create an awareness to the people with co-musicians. Here is the link of YouTube channel.

https://www.youtube.com/channel/UCGRAiGR09SGw6ViRVybIlyQ

More Articles
Follows