தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலக மக்களையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகிறது.
உலகளவில் கொரோனா வைரஸ் இதுவரை 48 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த வைரசால் 1.2 மில்லியனுக்கும் அதிகமானோர் இறந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி தலைமையகத்தில் ஐ.சி.எம்.ஆர்-ன் மூத்த விஞ்ஞானி ரஜ்னிகாந்த் கூறுகையில்…
“கொரோனா தடுப்பூசி நல்ல செயல்திறனைக் காட்டியுள்ளது. எனவே அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஒருவேளை பிப்ரவரியில் வெளியிடப்பட்டால்… கோவாக்சின் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி என்ற பெருமை கிடைக்கும்.” என தெரிவித்துள்ளார் ரஜ்னிகாந்த்.
Covid -19 vaccine could arrive early by 2021 says ICMR scientist Rajinikanth