தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனால் வியாபாரிகள், வேலைக்கு செல்வோர், தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இதனை எதிர்கொள்ள மத்திய-மாநில அரசுகள் நிவாரண நிதி திரட்டி மக்களும் வழங்கி வருகின்றன.
ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக நடித்த அக்ஷய்குமார் ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கினார்.
இவரின் இந்த செயலை பலரும் பாராட்டினர்.
தற்போது மும்பை மாநகராட்சிக்கும் இன்னும் ரூ.3 கோடி வழங்கி இருக்கிறார் இந்த உயர்ந்த மனிதர்.
மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், முக கவசங்கள், கொரோனா பரிசோதனை கருவிகள் போன்றவற்றை தயார் செய்வதற்காக இந்த தொகையை அவர் வழங்கி உள்ளதாக அக்சய்குமார் தெரிவித்துள்ளார்.
“நம் மக்களை கொரோனாவிடம் இருந்து பாதுகாக்க இரவு-பகலாக வேலை செய்துவரும் காவல் துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், தொண்டு அமைப்பினர், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி.
தற்போதைய சூழ்நிலையில் வீட்டில் இருந்து தனது பாதுகாப்பையும், தனது குடும்பத்தினர் பாதுகாப்பையும் உறுதி செய்பவரே சூப்பர் ஸ்டார்” எனவும் அக்சய்குமார் குறிப்பிட்டுள்ளார்.
Covid 19 Akshay Kumar donates Rs 3 crores to the BMC