தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வைரஸ் கொரோனா கடந்த 6 மாதங்களாக உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகளே மிரண்டு வருகின்றன.
இதை தடுக்க தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்தியாவின் புனேயை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரானாவுக்கு COVAXIN என்ற தடுப்பூசியை கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டு பிடித்துள்ள இந்த மருந்து பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பிறகு, விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனை வெற்றியடைந்ததால், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளதாம்.
COVAXIN தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது.
அடுத்த மாதம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவேளை இந்த சோதனை வெற்றி பெற்றால் உலகையை அச்சுறுத்தும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த நாடாக இந்தியாவுக்கு பெருமை கிடைக்கும்.
கொரோனாவை வெல்ல காத்திருப்போம்… அதுவரை வீட்டில் இருப்போம்..
Covaxin India to hold human trial of Covid 19 vaccine in July