செப்டம்பர் 30-க்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த ஐகோர்ட் கெடு

செப்டம்பர் 30-க்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த ஐகோர்ட் கெடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalநடிகர் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது.

அதாவது 1 வருடத்தை கடந்துவிட்டது. ஆனால் சங்க தேர்தல் நடைபெறவில்லை.

இதனையடுத்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள என்.சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.

எனவே சிறப்பு அதிகாரி நியமனத்தை ரத்து செய்து, விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என விஷால் சார்பிலும் சங்க உறுப்பினரான ராதாகிருஷ்ணன் என்பவரின் தரப்பிலிருந்தும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறப்பு அதிகாரியின் நியமனத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

மேலும் இந்தாண்டு 2020 ஜூன் 30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் தற்போது கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதை கருத்தில் கொண்டு, ஜூன் 30 என்ற காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கை தொடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடித்து, அது குறித்த அறிக்கையை அக்டோபர் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் சூர்யாவுக்கு இனி புதிய குரல்..; டப்பிங் கலைஞர் மாற்றம்

நடிகர் சூர்யாவுக்கு இனி புதிய குரல்..; டப்பிங் கலைஞர் மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sathyadev actorசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா இணைந்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று.

ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா பொது முடக்கத்தால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழைப் போல சூர்யாவுக்கு தெலுங்கிலும் நல்ல மார்கெட் உள்ளது.

எனவே தெலுங்கிலும் இந்த படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.

தெலுங்கில் ஆகாசம் நீ ஹதுரா என்ற பெயரில் ரிலீசாகிறது.

சூர்யாவின் தெலுங்கு பதிப்பு படங்களுக்கு ஸ்ரீனிவாஸ மூர்த்தி என்ற டப்பிங் கலைஞர் தான் குரல் கொடுத்து வந்தாராம்.

தற்போது பிரபல நடிகர் சத்திய தேவ் என்பவர் சூர்யாவுக்கு டப்பிங் பேசியிருக்கிறாராம்.

ஏன் இந்த டப்பிங் கலைஞர் மாற்றம் என்ற விவரம் தெரியவில்லை.

ஆஸ்பத்திரியில் அஜித்.. வைரலாகும் வீடியோ.. காரணம் என்ன..?

ஆஸ்பத்திரியில் அஜித்.. வைரலாகும் வீடியோ.. காரணம் என்ன..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith shaliniஎந்தவொரு பொது நிகழ்ச்சி மற்றும் சினிமா நிகழ்ச்சிகளிலும் தலை காட்டாதவர் தல அஜித்.

இவரை பார்க்க வேண்டுமென்றால் திரையில் தான் பார்த்தாக வேண்டும்.

தப்பி தவறி இவர் பொது இடத்தில் எங்கேயாவது தென்பட்டால் இவரை பார்க்க கூட்டம் அலை மோதும்.

அப்படிதான் அஜித்தின் நேற்றைய வீடியோ வைரலானது.

நடிகர் அஜித் மருத்துவமனையில் மாஸ்க் அணிந்த படி இருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

‘எதற்காக அவர் மருத்துவமனை சென்றார் ?’ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தன் மனைவி ஷாலினியின் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் அஜித்தின் அப்பா உடல் நலமில்லாமல் இருப்பதால் அவரை பார்க்க அவர்கள் சென்றிருக்கலாம் எனவும் ஒரு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

ரூ. 2 கோடிக்கு 200 பேர் முதலீடு; சத்யராஜ் பார்த்திபன் விஜய்சேதுபதி கூட்டணி

ரூ. 2 கோடிக்கு 200 பேர் முதலீடு; சத்யராஜ் பார்த்திபன் விஜய்சேதுபதி கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 2 மாதங்களாக பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகள் நடைபெறவில்லை.

பல கோடிகள் புரளும் சினிமாவை இந்த ஊரடங்கு கடுமையாக பாதித்துள்ளது. அதிலிருந்து மீள பல புதிய யுக்திகளை திரைத்துறையினர் கையாள உள்ளனர்.

இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, பிரமிட் நட்ராஜன் ஆகியோர் கூட்டணியில் 2 கோடி ரூபாய் செலவில் புதிய படம் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது.

கதையின் நாயகனாக சத்யராஜ் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர் பார்த்திபன் மற்றும் விஜய் சேதுபதி. இப்படத்தை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் பணிபுரியும் நடிகர்கள் யாருக்கும் சம்பளம் கிடையாது. சொன்ன பட்ஜெட்டில் 2 மாதங்களில் படத்தை முடித்து விட்டு ரிலீஸுக்கு பின் பிசினஸ் செய்து வரும் பணத்தில் அவரவரின் மார்க்கெட் மதிப்புக்கு ஏற்ப தொகை பிரித்து அளிக்கப்படும்.

மேலும் படத்தின் பட்ஜெட்டான 2 கோடியை 200 பங்குகளாகப் பிரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் மூலம் ஒருவர் அதிகபட்சமாக 10 பங்குகளை வாங்கி கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.

விருப்பமுள்ளவர்கள் தானாக முன்வந்து முதலீடு செய்யலாம் என்றும், முழுக்கதையும் தயாராகி, படப்பிடிப்பிற்கு முந்தைய நாளின் போதே முதலீடு ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் முதலில் நேரடியாக திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும், அதன் பிறகு 100 நாட்கள் அல்லது 10 வாரங்கள் இடைவேளைக்கு பிறகே ஒடிடி பிளாட்ஃபார்மில் வெளியாகும் எனவும் தெரிய வந்துள்ளது.

தமிழக அரசின் கொரோனா விழிப்புணர்வுக்காக மனோ பாலாவை இயக்கிய கணேஷ் பாபு

தமிழக அரசின் கொரோனா விழிப்புணர்வுக்காக மனோ பாலாவை இயக்கிய கணேஷ் பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mano bala ganesh babuநமது தமிழக அரசு மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதி தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் இந்த சூழலில்,அதற்கான விழிப்புணர்வு விளம்பரப் படங்களையும் எடுத்து வருகிறது.

அந்த வரிசையில் கட்டில் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இ.வி.கணேஷ்பாபு சில கொரோனா விழிப்புணர்வு விளம்பரப்படங்களை இயக்கி வருகிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது. கொரானா விழிப்புணர்வு விளம்பரப்படங்களை இயக்க வாய்ப்பளித்த தமிழக அரசுக்கு நன்றி. தொலைக்காட்சி மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்து கொண்டிருக்கும் இப்படிப்பட்ட விழிப்புணர்வு விளம்பரங்களை இயக்குவதில் பெருமைப்படுகிறேன்.

நடிகர் மனோபாலா அவர்களை வைத்து நான் இயக்கிய விளம்பரப் படம் தற்போது பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு நமது தமிழகத்தின் கொரானா விழிப்புணர்வை உலகம் முழுக்க கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது.

மேலும் திரைப்பிரபலங்களை வைத்தும் சில அரசு விளம்பரப்படங்களை இயக்கி வருகிறேன். விழிப்புணர்வை சீரியசாக மட்டுமல்ல நகைச்சுவையாகவும் சொல்ல முடியும் என்பதை நான் இந்த படங்களை இயக்கும்போது செழியன் குமாரசாமி அவர்கள் மூலமாக கற்றுக் கொண்டேன் என்றார் கட்டில் திரைப்பட இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு

ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி; கோழி முட்டையில் மஞ்சள் கருவுக்கு பதிலாக பச்சை கரு

ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி; கோழி முட்டையில் மஞ்சள் கருவுக்கு பதிலாக பச்சை கரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

A green yolk Hen egg goes viral in Kerala scientists Confusedகேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஷிகாபூதின்.

இவரின் கோழி பண்ணையில் 6 கோழிகள் பச்சை மஞ்சள் கருவுடன் கூடிய முட்டைகள் இட்டு வருகின்றன.

வழக்கமாக கோழி முட்டை என்றாலே மஞ்ச கருக்களே இருக்கும்.

எனவே இந்த சந்தேகத்தை போக்க கோழிகள் இட்ட முட்டைகளை அடைகாக்க வைத்து குஞ்சு பொரிக்க செய்தனர். அந்த கோழிகளும் பச்சை கரு முட்டையை இட்டுள்ளது.

இதனையடுத்து இந்த அதிசயத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார் அந்த நபர்.

இதனையறிந்த பேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கோழிகள் ஏதேனும் வித்தியாசமான தீவனங்களை சாப்பிட்டதால் இதுபோன்ற பச்சை மஞ்சள் கரு முட்டையிடுவதற்கு வாய்ப்பிருக்கு என தெரிவித்துள்ளனர்.

ஆனால் தான் எந்த ஒரு வித்தியாசமான தீவனமும் கொடுக்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்த பச்சை முட்டைக்கு பின்னணி உள்ள ரகசியத்தை கண்டறிய மூன்று வாரங்கள் தேவைப்படும் என இந்த துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தக் கோழிகளை பல்கலைக்கழகத்தில் வைத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

கோழிகள் மூன்று வாரத்திற்கு பிறகு மஞ்சள் கரு முட்டை போட்டால் பண்ணையில் வித்தியாசமான தீவனங்கள் வழங்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்படும்.

அப்படி இல்லை என்றால் மூன்று வாரங்களுக்குப் பிறகும் பச்சை கருமுட்டை போட்டால் அதற்கான சரியான காரணங்களை கண்டறிய கூடுதல் ஆய்வுகள் தேவைப்படும் என தெரிவித்துள்ளனர்.

A green yolk Hen egg goes viral in Kerala scientists Confused

More Articles
Follows