தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினியின் கபாலி, காலா மற்றும் விக்ரமின் இருமுகன் ஆகிய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணி புரிந்தவர்கள் அன்புமணி மற்றும் அறிவுமணி.
இவர்கள் இரட்டை சகோதரர்கள் என்பதால் அன்பறிவ் என்றே அழைக்கப்பட்டனர்.
இவர்கள் இருவரும் தென்னிந்திய சினிமா மற்றும் சின்னத்திரை சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்திலிருந்து கடந்த 16-ந்தேதி நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் சங்கத்தலைவர் சோம சுந்தர் மற்றும் செயலாளர் வி.மணிகண்டன் ஆகியோர் சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ் பணிபுரியும் படப்படிப்பு தளத்திற்கு சென்று படப்படிப்பையும் தடுத்து நிறுத்தினார்கள்.
இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர் அன்பறிவ்.
எனவே வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆதிகேசவலு, அன்பறிவ் மீதான நடவடிக்கையை கட்டுப்படுத்த இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அன்பறிவ் பணிபரியும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவர்களின் பணிக்கு குறுக்கீடு செய்ய கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Court Order in action brothers Anbarivu Association issue