சிம்பு வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

சிம்பு வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவி இயக்கத்தில் சிம்பு, தமன்னா, ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்த படம் ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’.

அந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைய சிம்புவே காரணம் என புகார் அளித்து அவர் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்து இருந்தார்.

இதனையடுத்து தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு கருத்துக்களை கூறி வருவதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழக்கை பதிவு செய்து இருந்தார் சிம்பு.

இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், அப்போதைய நடிகர் சங்க தலைவர், தயாரிப்பாளர் சங்க தலைவர் உள்ளிட்டோரையும் எதிர்மனுதாரர் என சேர்ந்திருந்தார் நடிகர் சிம்பு.

இந்த வழக்கு இன்று மார்ச் 9ல் விசாரணைக்கு வந்தது.

ஆனால் எதிர்பாராத தீர்ப்பை கோர்ட் வழங்கியள்ளது.

கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகியும் எழுத்துபூர்வமான வாதத்தை தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்யவில்லை என்பதால் ஒரு லட்சம் ரூபாய் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தொகையை வரும் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த வழக்கை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது கோர்ட்.

Court fined producer council in STR case

சங்கர் இயக்கத்தில் இணையும் ஜிவி பிரகாஷ் & பாரதிராஜா

சங்கர் இயக்கத்தில் இணையும் ஜிவி பிரகாஷ் & பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஜிவி பிரகாஷ்.

பிஸியான இசையமைப்பாளராக இருந்தாலும் அதை விட பிசியான நடிகராகவும் உள்ளார். மேலும் தான் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கும் இசையைமத்து வருகிறார்.

இந்த நிலையில் அறிமுக இயக்குனர் சங்கர் என்பவர் இயக்கவுள்ள ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து இசையமைக்க உள்ளார்.

இதற்கு ’கள்வன்’ என டைட்டில் வைக்கப்பட உள்ளதாம்.

முக்கிய வேடத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடிக்க உள்ளார்.

விரைவில் இப்பட போஸ்டர் மற்றும் மற்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

GV & Bharathi Raja joins for a new film

பிரபாஸ் – ஸ்ருதி ஜோடி உடன் இணையும் ‘லூசிபர்’ டைரக்டர்

பிரபாஸ் – ஸ்ருதி ஜோடி உடன் இணையும் ‘லூசிபர்’ டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பாகுபலி’ படங்களுக்கு பிறகு பிரபாஸின் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதால் படங்களும் பான் இந்தியா படமாக உருவாகிறது.

மேலும் படத்தின் பட்ஜெட்டும் ரூ. 100 கோடி முதல் 200 கோடி வரை தொடுகிறது.

நாளை மறுநாள் மார்ச் 11ல் பிரபாஸ் பூஜா ஹக்டே நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் வெளியாகவுள்ளது.

தற்போது பிரபாஸின் அடுத்த படமான ’சலார்’ என்ற படத்தில் படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ரவி பஸ்ருர் இசையில் இந்த படம் தயாராகி வருகிறது. இதில் ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல மலையாள ஹீரோவான பிரித்விராஜ் வில்லனாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இவர்தான் மோகன்லால் நடித்த ‘லூசிபர்’ மற்றும் ‘டாடி பிரோ’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘சலார்’ படம் இரண்டு பகுதிகளாக உருவாகி வருவதும் ஒவ்வொன்றும் ரூ. 150 கோடி பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Lucifer director joins Prabhas in salaar

தெலுங்கில் விஜய் தனுஷ் சிவகார்த்திகேயன்..; மலையாளத்தில் சூர்யா

தெலுங்கில் விஜய் தனுஷ் சிவகார்த்திகேயன்..; மலையாளத்தில் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தற்போது நேரடியாக மலையாள படத்தில் நடிக்க சூர்யா முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சூர்யா நடித்துள்ள ’எதற்கும் துணிந்தவன்’ படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இப்பட புரமோஷன் பணிகளுக்காக நேற்று கேரளா சென்றிருந்தார்.

இந்த புரமோஷன் விழாவில்… மலையாள இயக்குனர் அமல் நீரத் தன்னிடம் ஒரு கதை சொன்னதாகவும் அதில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சூர்யா தெரிவித்தார்.

இந்த படம் உறுதியானால் இது சூர்யா நடிக்கும் நேரடி மலையாள படமாக அமையும்.

தற்போது விஜய்யின் 66வது படம் நேரடி தெலுங்கு படமாக உருவாகிறது.

அதுபோல் தனுஷ் நடிக்கும் SIR ’வாத்தி’ படமும் மற்றும் சிவகார்த்திகேயனின் 20வது படமும் நேரடி தெலுங்கு படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அதுபோல் விஜய்சேதுபதியும் நேரடி தெலுங்கு படம், மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்து வருவது நாம் அறிந்த ஒன்றுதான்.

தமிழ் நடிகர்கள் மற்ற மாநில மொழி படங்களில் கவனம் செலுத்தி வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Actor Suriya to work in Malayalam film

‘மங்காத்தா’ பாணியில் அஜித்-61.; ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட் வைக்கும் வினோத்

‘மங்காத்தா’ பாணியில் அஜித்-61.; ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட் வைக்கும் வினோத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேர்கொண்டப் பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து 3வது முறையாக அஜித், வினோத், போனி கபூர் கூட்டணி இணைந்துள்ளது.

அஜித்தின் 61வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் மார்ச் 18ல் தொடங்கவுள்ளதாம்.

இதில் நாயகியாக தபு நடிக்கவுள்ளார். மற்றொரு நாயகியாக அதிதி ராவ் நடிப்பார் என கூறப்படுகிறது. பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் இந்த படம் கொள்ளையடிக்கும் கும்பல் குறித்து படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. அஜித் நடித்த மங்காத்தா படமும் இதே பாணியில்தான் உருவானது.

ஆனால் அதில் ஒரு அஜித் இருந்தார். ஆனால் AK 61 படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரு வேடங்களில் அஜித்தே நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.

Director H Vinoth twist in AK 61

‘புஷ்பா’ – ‘பொன்னியின் செல்வன்’ வரிசையில் ‘துருவ நட்சத்திரம்’

‘புஷ்பா’ – ‘பொன்னியின் செல்வன்’ வரிசையில் ‘துருவ நட்சத்திரம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒவ்வொரு படம் ரிலீசின்போது விமர்சனத்தில் அடிக்கடி வரும் வார்த்தை படத்தின் நீளம்… தான். இன்னும் கொஞ்சம் எடிட் செய்திருக்கலாம் என்பார்கள்.

அண்மையில் வெளியான அஜித்தின் ‘வலிமை’ படத்திற்கும் இந்த கமெண்ட் வந்தது. எனவேதான் படத்தின் நீளத்தை 15 நிமிடம் வெட்டினர்.

ஒருவேளை படம் ரொம்ப நீ……ளமாக இருந்தால் அதனை இரண்டு பாகங்களாக வெளியிடும் திட்டத்தில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகுபலி உருவானபோதே அதனை 2 பாகங்களாக எடுத்தார் ராஜமௌலி. அண்மையில் வெளியான புஷ்பா படமும் இப்படித்தான் உருவானது.. முதல் பார்ட் வெளியாகிவிட்டது.

பொன்னியின் செல்வன் படத்தையும் மணிரத்னம் இரண்டு பாகங்களாகவே உருவாக்கி வருகிறார். முதல் பாகம் செப்டம்பர் 30ல் ரிலீசாகவுள்ளது.

வடசென்னை படமும் இரண்டு பாகங்களாக உருவான நிலையில் முதல் பாகம் மட்டும் ரிலீசாகிவிட்டது. இரண்டாம் பாகம் இன்னும் தயாராகவில்லை.

இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தையும் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

2017ல் தொடங்கப்பட்ட இந்த படத்தின் பாடல்கள் டீசர்கள் அவ்வப்போது வரும். ஆனால் பல பிரச்சினைகளால் படம் வெளியாகவில்லை.

தற்போது பிரச்சினைகளுக்கு இயக்குநர் கௌதம் தீர்வு கண்டுள்ளதால் விரைவில் படத்தை 2 பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம்.

முதல் பாகத்தை 2022 ஜீன் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தில் விக்ரம் உடன் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, அர்ஜீன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதில் இடம்பெற்ற ‘ஒரு மனம் நிக்க சொல்லுதே….’ என்ற பாடலின் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதெல்லாம் இருக்கட்டும்.. முதல்ல ஒரு பார்ட் ரிலீஸ் செய்ங்கப்ப்பூ.. என ரசிகர்கள் கமெண்ட் கேட்கிறதே..

Chiyaan Vikram’s Dhruva Natchatiram movie updates here

More Articles
Follows