தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆதிக் ரவி இயக்கத்தில் சிம்பு, தமன்னா, ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்த படம் ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’.
அந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைய சிம்புவே காரணம் என புகார் அளித்து அவர் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்து இருந்தார்.
இதனையடுத்து தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு கருத்துக்களை கூறி வருவதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழக்கை பதிவு செய்து இருந்தார் சிம்பு.
இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், அப்போதைய நடிகர் சங்க தலைவர், தயாரிப்பாளர் சங்க தலைவர் உள்ளிட்டோரையும் எதிர்மனுதாரர் என சேர்ந்திருந்தார் நடிகர் சிம்பு.
இந்த வழக்கு இன்று மார்ச் 9ல் விசாரணைக்கு வந்தது.
ஆனால் எதிர்பாராத தீர்ப்பை கோர்ட் வழங்கியள்ளது.
கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகியும் எழுத்துபூர்வமான வாதத்தை தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்யவில்லை என்பதால் ஒரு லட்சம் ரூபாய் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தொகையை வரும் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த வழக்கை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது கோர்ட்.
Court fined producer council in STR case