தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பு தன் தாக்குதலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலும் இது தீவிரமடைந்து வருகிறது.
இந்த வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். தற்போது 3 நாட்களை கடந்துள்ளோம்.
ஊரடங்கு உத்தரவால் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாபெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் நிவாரண நிதி கேட்டு வருகின்றன.
இந்த நிலையில், 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த அக்ஷய் குமார், கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதுவரை நிதி அளித்த நடிகர்களிலேயே இவர் தான் உச்சம்.
Corona Akshay Kumar pledges 25 crore to Prime Minster Cares fund