தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டெங்கு காய்ச்சல் நோயால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே ஒரு சிலர் தாங்களே டாக்டர் ரேஞ்சுக்கு சமூக வலைத்தளங்களில் மருத்துவம் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
நிலவேம்பு கசாயம் மற்றும் பப்பாளி இலை சாப்பிட்டால் டெங்கு காய்ச்சலை தடுக்கலாம் என செய்திகள் வந்தன.
திடீரென டெங்கு காய்ச்சலுக்கு வழங்கப்படும் நிலவேம்புக் குடிநீரால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியது.
ஆனால் அந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அரசு சார்பில் தெரிவித்தனர்.
இந்நிலையில் நிலவேம்பு குடிநீர் பற்றி கருத்து தெரிவித்திருந்தார் கமல்.
அதில், ‘சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்கக் கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர், நிலவேம்புக் குடிநீர்குறித்து கமல் தவறானத் தகவல்களைப் பரப்புவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.
Complaint filed against Kamal for false accusation about Nilavembu Kudineer