தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தமிழகமெங்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் கர்நாடகாக்காரர் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதால், அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு கமலும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்.
அவரின் ட்விட்டர் பக்கத்தில்…
கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா?
சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?” என கேள்வி கேட்டிருந்தார்.
இத்துடன் சில நிமிடங்களுக்கு பிறகு மற்றொரு ட்வீட்டில் கர்நாடகா மற்றும் ரஜினியுடன் தாம் கொண்டிருக்கும் நட்பை சேர்த்து ஒரு பதிவிட்டுள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த நாகேஷ் எனது குரு, சரோஜா தேவி, ராஜ்குமார், ரஜினிகாந்த், அம்பரீஷ் ஆகியோர் எனது சொந்தம்.
இதையும், துணைவேந்தர் நியமனத்தையும் மத்திய, மாநில அரசுகள் ஒப்பிட கருதினால் அது நகைச்சுவையாகும்.
எப்படியிருந்தாலும், தமிழகத்திற்கு காவிரி நீர் தான் வேண்டும்” என கமல் தெரிவித்துள்ளார்.
Kamal HaasanVerified account @ikamalhaasan 11m11 minutes ago
Mr.Nagesh One of my Gurus. Mrs. S Mr. Rajkumar anna Mrs. Sarojadevi and my friends Mr. Rajnikanth and Mr. Ambresh are my own.That was a humorous quip at the central and state governments Not a swipe at the Chancellor . Nevertheless TN needs water.
Comparing my friendship with Rajini in Cauvery issue will be humorous says Kamal