தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தமிழக அரசின் வழிகாட்டுதல்களின் படி சென்னை ஓமந்தூர் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டார் நடிகர் விவேக்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அரசு மருத்துவமனையில் தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.
மேலும் பொதுமக்கள் யாரும் தடுப்பூசி குறித்து அச்சம் கொள்ள வேண்டாம். அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.” எனவும் கேட்டுக் கொண்டார்.
ஆனால் அடுத்த நாள் திடீரென உயிரிழந்தார்.
இதனால் நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என தகவல்கள் பரவியது.
‘‘பசுமை கலாம்’ அமைப்பில் விவேக் பெயரை இணைக்க நடிகர் செல் முருகன் திட்டம்’
இதனையடுத்து விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதன் பின்னர் தேசிய மனித உரிமை ஆணையம் மத்திய சுகாதார ஆணையத்திற்க கடிதம் ஒன்று அனுப்பியது.
அதில் நடிகர் விவேக் மரணம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க வேண்டுமாறு குறிப்பிட்டு இருந்தது.
அதன்படி விசாரணை மேற்கொண்ட தேசிய தடுப்பூசி ஆய்வுக்குழு வல்லுநர்கள் நடிகர் விவேக் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்துள்ளனர்.
நடிகர் விவேக் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரழந்து விட்டதாக வல்லுநர் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comedy Actor Vivek’s death not related to vaccine, Union govt’s AEFI panel confirms