செல்ல குழந்தைகள் வாங்கிய வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் ஆகிய காமெடி நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோவாகி விட்டதால், காமெடி நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே சூரி மற்றும் யோகி பாபு படங்களுக்கு நல்ல மார்கெட் உள்ளது.

முக்கியமாக சூரியின் காமெடிக்கும் பலத்த வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் இவர் அவர் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு சிவகார்த்திகயேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

ஆனால், சூரியோ, மகள் வெண்ணிலா, மகன் சர்வான் வாங்கிக் கொடுத்த பிரமாண்டமான வீட்டில் முதன் முறையாக ஆடம்பரமாக கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

அந்த வீடியோவை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Actor Soori‏ @sooriofficial
என் மகள் வெண்ணிலாவும் மகன் சர்வானும் வாங்கிக் கொடுத்த பிரமாண்டமான வீட்டில் முதன்முறையாக ஆடம்பரமாக என் பிறந்த நாளை கொண்டாடினேன்… வீடு வாங்கிக் கொடுத்த செல்லங்களுக்கு நன்றி!

அவரது குழந்தைகள் பத்து வயதுக்கு உட்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comedian Soori celebrated his birthday in his Childrens new home

அந்த லிங்க் இதோ…

https://twitter.com/sooriofficial/status/1033985543447568384

அம்மா சரிகாவுக்கு ராக்கி கட்டி ரக்‌‌ஷா பந்தன் கொண்டாடிய ஸ்ருதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆகஸ்ட் 26 நேற்று இந்தியா முழுவதும் ரக்‌‌ஷா பந்தன் கொண்டாடப்பட்டது.

ரக்‌ஷா பந்தன் என்பது சகோதர சகோதரிகளுக்குள் உள்ள அன்பை பாசத்தை வெளிப்படுத்த ராக்கி கயிறு கட்டி கொண்டாடுவார்கள்.

வட இந்தியாவில் பிரபலமான இந்த நிகழ்வு தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.

இந்நிலையில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் வித்தியாசமாக ரக்‌ஷா பந்தனைக் கொண்டாடியிருக்கிறார்.

அதாவது தனது அம்மா சரிகாவுக்கு ராக்கி கயிறை கட்டி கொண்டாடியுள்ளார்.

மேலும் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தையும் தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது…

“என் அம்மாவும் நானும் ராக்கிகளை ஒருவருக்கொருவர் கட்டிக்கொண்டோம். விரும்புகிற ஒருவரைக் காப்பதே ரக்‌ஷா பந்தன்.

எனக்கு சகோதரர் இல்லை, ஆனால் அம்மா இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவை பார்த்த பலரும் அவரை பாராட்டி வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

Shrutihaasan-tied Rakhi to her mother on Raksha Bandhan day

ரஜினி படத்திற்காக ஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறினாரா த்ரிஷா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இந்த நாயகிகள் தற்போது ரஜினியுடன் முதன்முறையாக இணைந்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை த்ரிஷா தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் புதிய ஹேர் ஸ்டைல் லுக்குடன் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

அது பிக்பாஸ் நிகழ்ச்சி முடித்த பின்னர் ஓவியா வைத்த அதே ஸ்டைலில் உள்ளது.

அதில் ஒரு பெண் தன் முடி அலங்காரத்தை மாற்றினார் அது அவள் வாழ்க்கையை மாற்றும் என்பது போல பதிவிட்டுள்ளார்.

அதற்கு கோகோ சேனல் எனவும் பதிவிட்டுள்ளார்.

இது ரஜினி படத்திற்கா? அல்லது வேறு லுக்கா? என்பது தெரியவில்லை.

Actress Trisha new hair style look goes viral

ஒரே மேடையில் முப்பெரும் விழாவை நடத்திய ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம்கி, இனியா நடித்த ‘மாசாணி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமான எம்.எஸ்.சரவணன், தனது ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் நிருவனம் மூலம் ‘சலீம்’, ‘ஜாக்சன் துரை’ ஆகியப் படங்களை தயாரித்ததோடு, ‘புலி’, ‘வேதாளம்’, ‘பாகுபலி 2’, ’போகன்’, ‘காக்கி சட்டை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்தவர் தொடர்ந்து பல படங்களை தயாரித்தும் விநியோகமும் செய்து வருகிறார்.

தற்போது ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் ஜி.வி.பிரகாஷ்குமார், சரத்குமார் நடிப்பில் உருவாகும் ‘அடங்காதே’, சிபிராஜ் நடிப்பில், இளையராஜா இசையமைப்பில் உருவாகும் ‘மாயோன்’ மற்றும் ரகுமான், அறிமுக ஹீரோ ஹவிஸ், நந்திதா சுவேதா ஆகியோரது நடிப்பில் உருவாகும் ‘செவன்’ ஆகிய மூன்று படங்களை தயாரித்து வருகிறது.

இந்த மூன்று படங்களின் விழாவும் சென்னை கலைவாணர் அரங்கில் முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

முதலில் ‘செவன்’ படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியிடப்பட்டது.

அதை தொடர்ந்து ‘மாயோன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக ‘அடங்காதே’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ்குமார், சரத்குமார், யோகி பாபு, பாலிவுட் நடிகை மந்த்ரா பேடி, நடிகைகள் சுரபி, நந்திதா சுவேதா, சிபிராஜ், தயாரிப்பாளர்கள் ஆர்.கே.சுரேஷ், கதிரேஷன், டி.தியாகராஜன், இசையமைப்பாளர் ராஹனா, இயக்குநர்கள் பாண்டிராஜ், தங்கர் பச்சான் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள்.

ரகுமான், ஹவிஸ், ரெஜினா கெசண்ட்ரா, நந்திதா சுவேதா, டிரிடா செளத்ரி, அதித்தி ஆர்யா, புஜிதா பொன்னடா, அனிஷா ஆம்ரோஸ் ஆகியோரது நடிப்பில் நடிப்பில் ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் எம்.எஸ்.சரவணன் தயாரித்திருக்கும் ‘செவன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்து, கூடுதல் திரைக்கதை அமைத்து வசனம் எழுதி நிஷார் ஷரீப் இயக்கியிருக்கிறார்.

கதை மற்றும் திரைக்கதையை ரமேஷ் வர்மா எழுத, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்திருக்கிறார். சய்தன் பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

சிபிராஜ் நடிப்பில் டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ’மாயோன்’ படத்தை கிஷோர் இயக்க, இளையராஜா இசையமைத்திருக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பு செய்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார், சுரபி, சரத்குமார், மந்த்ரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, பிளேட் சங்கர், அபிஷேக் சங்கர் ஆகியோரது நடிப்பில் ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் ‘அடங்காதே’ படத்தை சண்முகம் முத்துசுவாமி தயாரித்திருக்கிறார்.

பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார்.

Sri Green Production Saravanan conducted 3 movies events on Single stage

எல்லாருக்கும் பிடித்த *மேற்குத் தொடர்ச்சி மலை* படம் விஜய்சேதுபதிக்கே பிடிக்கலையாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா இசையில் நடிகர் விஜய்சேதுபதி தயாரிப்பில் உருவாகி அனைவரது பாராட்டையும் பெற்ற படம் மேற்குத் தொடர்ச்சி மலை.

லெனின்பாரதி இயக்கிய இப்படம் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்திருந்தார்.

இதில் ஆண்டனி, காயத்ரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய்சேதுபதி பேசும்போது…

இன்று உங்கள் அனைவரின் பாராட்டையும் இந்த மேற்குத் தொடர்ச்சி மலை பெற்றுள்ளது.

ஆனால் இந்த படத்தை முதலில் பார்த்த எனக்கு திருப்தி இல்லை. நான் என்னை அறிவாளியாக சினிமாவை முழுவதுமாக தெரிந்துக் கொண்டவனாக நினைத்து கொண்டுவிட்டேன்.

ஆனால் தற்போதுதான் என் முடிவு தவறு என தெரிகிறது. உங்களின் விமர்சனம் என்னுடைய பார்வையை மாற்றியுள்ளது.

இந்த படத்தை தயாரிக்க 2013ஆம் ஆண்டிலேயே என்னிடம் கேட்டார் லெனின் பாரதி. நான் இந்த படத்தில் நடிக்கட்டுமா? என்று கூட அவரிடம் கேட்டேன்.

அந்த சமயத்தில் நான் நடிக்கும் படங்களில் என் சம்பளம் 25லட்சம்தான். எனவே அப்போது முடியாது என்று கூறி வேறு தயாரிப்பாளரை அனுக சொல்லி விட்டேன்.

ஆனால் அவர் இத்தனை வருடங்கள் காத்திருந்தார்.

இந்த பெருமை அனைத்தும் இயக்குநர் லெனின் பாரதியை தான் சேரும். படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை.

இது வியாபார உலகம், யாரையும் நாம் குறை சொல்ல தேவையில்லை. ஒரு பொருளுக்கு டிமாண்ட் இருந்தால் தான் வியாபாரிகள் தேடி வருவார்கள். தற்போது பத்திரிகை விமர்சனங்கள் மூலம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ டிமாண்ட் உள்ள பொருளாக மாறியிருக்கிறது. இனி வியாபாரிகள் தேடி வருவார்கள்” என்று பேசினார் விஜய்சேதுபதி.

I am not satisfied with Merku Thodarchi Malai movie says Producer Vijay Sethupathi

விநாயகர் சதுர்த்தியன்று ரஜினிகாந்த் தரும் மெகா டீசர் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2.0.

இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்‌ஷய்குமாரும் ஹீரோயினாக எமி ஜாக்‌ஷனும் நடித்துள்ளனர்.

நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த வருட இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. முழுக்க 3டி கேமிரா தொழில்நுட்பத்தில் படம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் கிராபிக்ஸ் காட்சிகள் செய்வதில் கடினமாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

இறுதியாக நவம்பர் மாதம் 29-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ரூ. 500 கோடி பொருட்செலவில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியுள்ள இப்படம் 13 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2Point0 teaser will be released on 13th September as Vinayakar Chathuruthi special

More Articles
Follows